27 டிசம்பர், 2011

ஆட்டிறச்சி கறியும் ஆத்து வெள்ளமும்


"என்னடா இண்டைக்கு மத்தியான சாப்பாடு" என்று அம்மா ஸ்கைப்பில் கேட்கவும்


"இண்டைக்கு  ஆட்டு இறைச்சி வாங்கி கறி காய்ச்சப்போறேன் கூடவே கோவா கறி" 

"டேய் நீ பிள்ளைக்கு மொட்டை அடிக்க கதிர்காமம் போட்டு வந்திருக்கிறாய்...
அப்பொ இண்டைக்கு நீ மச்சம் சாப்பிடக்கூடாது,அதால இண்டைக்கு மரக்கறி சமைச்சு
 5 பிட்ஷா பாத்திரம் ஏந்துவோருக்கு சாப்பாடு கொடுக்கணூம்டா"  என்று அம்மா சொல்லவும்
 எனக்கு சப்பென்று போயிட்டு 

சீ இண்டைக்கு ஆபீஸ் லீவு, அதிகாலை தான் கதிர்காமத்தில இருந்து வீட்டுக்கு வந்திருந்தோம்..
3 நாள் மரக்கறி சாப்பிட்டு நாக்கு செத்துபோயிருந்திச்சு..லீவுதானே ஆட்டிறச்சிக்கறியோடா ஒரு வெட்டு வெட்டுவோம்ன்னு பார்த்தா அம்மா அதுக்கு புல்ஸ்டாப் போட்டிட்டாங்க.காலையில கலண்டரில மிருகஷீரடம் நட்சத்திரத்துக்கு சந்திராஸ்டமம் எண்டு போட்டிருந்தப்பவே கொஞ்சம் அலேர்ட் ஆகியிருக்கணும் சரி கடவுளோட விடயம் விளையாடமா இருப்பம் எண்டு நினைச்சுகொண்டு வரும் வழியில் நுவரேலியாவில்  இருந்து வாங்கி வந்த மரக்கறீ எல்லாத்தையும் குளிர்சாதனப்பெட்டியில இருந்து  எடுத்து வைந்தேன்..

"என்னங்க பொண்ணூ என்னை விடுறா இல்லை.. அழுதுகிட்டே இருக்கிறா... நேரம் வேற போய்க்கொண்டிருக்கு.... நீங்க சமைக்கிறீங்களா இண்டைக்கு " வீட்டுக்காரம்மா குண்டைத்தூக்கி போட்டா..

"என்னம்மா இண்டைக்காச்சும் நாக்குக்கு ருசியா சாப்பிடலாம்ன்னு பார்த்த விடமாட்டியாடி"

ஆஹா சிங்கம் இண்டை கிடாய் இறைச்சிய வேட்டையாடி உடம்பு அசதி தீர ஒரு தூக்கம் போடுவோம்ன்னு பார்த்தா இப்படி ஒரு சத்திய சோதனை..சரி சரி குடும்பம்ன்னு வந்திட்டாலே  இதெல்லாம் சகஜம்தானே எண்டு மனதிற்க்குள் நினைத்துக்கொண்டே சமையல் வேலையைத்தொடங்கினேன்..

அப்போதுதான் அந்த 5 பெக்கேர்ஸ் க்கு எங்கே போவதுன்னு யோசித்தபோது நினைவு வந்தது Cargills Food City தான் . அங்கேதான் வாசலில் அமர்ந்திருந்து போற வாற அனைவரிடமும் உதவி கேட்பார்கள். அப்பொ அவர்களுக்கே கொடுத்திடலாம்ன்னு நினைத்த போதே மனம் கொஞ்சம் கிலேசமடைய தொடங்கியது..

எனேனில் சாதரணமா வீட்டில அப்பா வீட்டுக்காரம்மா எனக்கு மட்டும் சமைக்கிற நான் இன்று இவர்களுடன் சேர்த்து 5 பேருக்கும் சமைக்க வேண்டிய நிலைமை வீட்டில இருக்கிறவங்க உப்பு புளி முன்ன பின்ன இருந்தாலும் ஒண்ணும் சொல்லமாட்டாங்க,ஏன்னா அப்படி சொன்ன அடுத்த முறை அவங்களையே சமைக்க சொல்லிவிடுவேன்னு பயம் ஆனா Cargills Food City க்கு அடிக்கடி போய் பொருட்கள் வாங்கி வருவேன்..அதனால கொடுக்கும் உணவை சுவையாக கொடுத்துவிடவேண்டும் இல்லாட்டா அடுத்த முறை அங்கே போகும்போது எல்லோருக்கும் முன்னால என்னோட உணவோட திறத்தை சொல்லி அண்டர்வெயரை உருவி விட்டு சிங்கத்தை அசிங்கப்படுத்திடுவாங்களே, டேய் கீர்த்தி உனக்கு இண்டைக்கு விஷ பரீட்சைபார்த்து பாத்தியை கட்டுடான்னு மனசாட்சி அபாய கொடியை காட்டியது.. சரி வாறது வரட்டும்ன்னு பீற்றூட்,கரட் & லீக்ஸ்,உருளைக்கிழங்கு கறியுடன் வல்லாரை சம்பலும் அப்பளமும் பொரித்து சமையலை முடித்தேன்..


உடனேயே அவற்றையெல்லாம் 5 பார்சலாக கட்டி டவுனுக்கு போனேன், அங்கே போய்ப்பார்த்தா அதிர்ச்சியா இருந்திச்சு, எந்த ஒரு பிட்ஷா ஏந்துபவர்களையும் Food City வாசலில் காணவில்லை..என்னடா இது இனி எங்கே போய் தேடலாம்ன்னு யோசிச்சுக்கொண்டே டவுனில் உள்ள கோயில்கள் எல்லாவற்றிற்கும் சென்று தேடினேன்..
அசுமாத்தத்திற்க்கு கூட ஒருத்தரையும் காணவில்லை... ரெயில்வே ஸ்டேசனுக்கும் போய் பார்த்தேன் ஏமாற்றமே மிஞ்சியது.. 

என்னங்கடா நான் கதிர்காமம் போயிருந்த 3 நாளிலையே வவுனியா டெவலப் ஆகிட்டிச்சா,ஒருத்தனை கூட கண்ணீல காணோம்,இதையெல்லாம் சொல்லிட்டு செய்யமாட்டிங்களாடா, 


தொங்கிய முகத்தோடு வீட்டுக்கு போகவும் கையில் பார்சலைப்பார்த்ததும்

"என்னங்க கொடுக்கலையா என்று கேட்டா வீட்டுக்காரம்மா  எல்லா இடத்திலயும் தேடிட்டம்மா ஒருத்தனையும் காணேல்ல என்ன செய்ய "என்று கேட்டேன்.

ஏங்க ஜெயக்குமரன் அண்ணா கூடவா இல்லை ஒரு மிஸ் கோல் போட்டு பாருங்க ஆட்டோ புடிச்சு வந்து 
புல் கட்டு கட்டுவாரே என்று சொல்லவும் 

என மனம் போன மாசம் நாம சாப்பாடு கொடுக்க பெக்கேர்ஸ் தேடி யாருமே இல்லாத போது JK க்கு ஒரு மிஸ் கோல் போட்டவுட்னே அவன் ஆட்டோ புடிச்சு வீட்டுக்கு வந்து  முருங்கக்காய் தோல் கூட விடாம சப்பி சாப்பிட்டு காயாலேயே சாப்பட்டு கோப்பையை வழித்து கழுவி விட்டு போனது நினைவுக்கு வந்தது .

இல்லம்மா அவன் புது வருசம் ஊருக்கு போய்ட்டான் ..



".மாமி சொன்னா கட்டாயம் கொடுக்கணுமாம் இல்லாட்டி சாமிகுத்தமாயிடுமே" என்று பீதியை கிளப்ப என்ன செய்யலாம்ன்னு சோசிச்சுக்கொண்டிருக்கும்போதே K டீவியில பஞ்சதந்திர பட ஒளிபரப்பு விளம்பரச்ம் போய்க்கொண்டிருந்திச்சு.. லைட்டா மைண்டில பொறீ தட்டியது..

பழைய துணிக்காக வைச்சிருந்த லுங்கியையும் பனியனையும் எடுத்து வந்தேன் .அங்கங்கே லைட்டா கிழிச்சேன், அப்படியே நிலத்தில போட்டு கால்களால மிதித்துவிட்டு எடுத்து எனக்கு போட்டு பார்த்தேன்..
நானே ஷாக்காயிட்டேன், அப்பிடியே ஒரு  பெக்கரை போலவே இருந்தேன்.. கீர்த்தி உனக்குள்ளே இப்படி ஒர் கலைஞன் ஒளிஞ்சிருந்திருக்கானேடா என்று சொல்லவும்

"அது ஒன்றும் கலைஞன் இல்லை அப்பிடியே ஒரியினல்  பெக்கர் மாதிரியே இருக்கீங்க " என்றாங்க வீட்டுக்காரம்மா... 

"காப் கிடைக்கிற நேரமெல்லாம் சிங்கத்தை சீண்டிப்பார்க்கிறதே உனக்கு வேலையாப்போச்சு..பொறு பொறு பொண்ணு கொஞ்சம் வளருட்டும் அதுக்குப்பிறகு பாருடி இந்த சிங்கத்தோட அனிமல் பிளனட்

வேட்டை டிரையிலரை"  என்று சொல்லிக்கொண்டே அந்த 5 பார்சலை நானே பஞ்சதந்திர 5 வேஷம் போட்டு உண்டு முடித்தேன்.. முடித்ததும் வீட்டுக்காரம்ம கைத்தாங்கலா எழுப்பி விட்டாங்க...


******************************************************************


"என்னங்க மணி ஆறாச்சு.... சாப்பிட்டு  2 மணிக்கு வோஷ் ரூமுக்குள்ள போனீங்க இன்னும் என்னங்க செய்துகிட்டிருக்கீங்க கதவை பூட்டிக்கொண்டு" 

"ஆ இங்கே வடை சுட்டு கொண்டிருக்கிறேன் ,ஏண்டி வோஷ் ரூமுக்குள்ள என்ன செய்வாங்கன்னு தெரியாதா உனக்கு"
"அதுசரி 6 மணியாச்சா !!!!!!

"பின்னே ஆகாதா போய் 4 மணித்தியாலம் ஆச்சு  என்ன ஆச்சு உங்களுக்க"

"ஏண்டி நானா விரும்பியா இங்கெ டெண்ட் அடிச்சு உட்கார்ந்து இருக்கேன்... நிக்காம போய்க்கிட்டிருக்கம்மா ...
"நீ ஏதோ சொல்லிகொண்டிருக்கிறாய் என்கிறது மட்டும் புரியுது ஆனா கிணத்துக்குள்ள இருந்து கதைக்கிறது மாதிரி கேட்குதம்மா"

"அய்யய்யோ என்னாச்சுங்க  என்ன திடீரெண்டு"


"அதுதாண்டி எனக்கும் புரியல  நானும் ரேஸ்ட்டா இருக்கெண்டு 5 பார்சலையும் சாப்பிட்டேன், இப்ப வயித்துக்குள்ல யாழ்தேவி ரெயினே ஒடிக்கொண்டிருக்கிற சத்தம் கேட்குதடி "

"அதுசரி நீயும் தானே சாப்பிட்டாய் எனக்கு மட்டும் ஏன் இப்பிடி ??? "

"நான் எங்கே சாப்பிட்டேன்"

"ஏண்டி நீ இன்னும் சாப்பிடலையா"


"இல்லங்க நீ வெளில போயிருந்த நேரம் கொஞ்ச சாப்பாட்டை நாய்க்கு கொஞ்சம் வைச்சேன் சாப்பிட்ட நேரத்தில இருந்து ஊளையிட்டுகொண்டே இருந்திச்சு,அதனால நானும் மாமாவும் எதுக்கு ரிஸ்க் எடுப்பான்னு நினைச்சு திரிபோஷா குழைச்சு சாப்பிட்டோம்டா"


" அஹா எல்லாரும் அலார்ட்டாத்தான் இருந்திருக்கீங்களா அப்ப நான் தான் அவுட்டா ,அடிப்பாவி ஏண்டி இதை முதல்லேயே சொல்லல.. ஓ அதுதான் நான் வீட்டுக்கு வரும்போஒது நம்ம நாய் என்னை வெறித்தனமா பார்த்துகிட்டு இருந்திச்சா "அய்யய்யோ கடவுளே அது மனசில இதை வைச்சு நாளைக்கு பாய்ஞ்சி கறியை கவ்விடாம பார்த்துக்கொள்ளுப்பா "

"ஏண்டி ஒரு வார்த்தை சொல்லல"


"இவ்வளவு நாளும் நீங்க சமைச்சு வைச்சிட்டு ஆபீஸ் போய்ட்டு கடையில சாப்பிட்டு வாறீங்கநாங்க பட்ட வேதனை கஸ்டம் உங்களுக்கு தெரிய வேணாமா அதுதான் சொல்லல..சரி சரி வெளில வாங்க கெதியா" 

"என்னது கெதியா வெளில வரவா போடி இவளே ,நல்லா வருது வாயில ஆத்தில வெள்ளம் ஓடின கணக்க போய்க்கிட்டிருக்கு இந்த நிலைமையில நான் எப்போ வெளில வாறது , ரூமுக்கு தவண்டு வந்து சேரவே விடிஞ்சிடும்டி "

.


23 டிசம்பர், 2011

மணி டியூசன் பயபுள்ளக-உண்மைக்கதை

 1995 இடப்பெயர்வுக்கு முன்பு கொக்குவிலில் மணி டியூசனில் நாங்கள் கல்வி கற்றிருந்தோம். மணி டியூசன் பற்றி இன்னுமொரு பதிவு எழுதிக் கொண்டிருப்பதால் அதைப்பற்றி சொல்லுவதை தவிர்த்துவிடுகிறேன்.அங்கே படித்த இரண்டு நண்பர்களின் கதைதான் இது .

1995 ம் ஆண்டு ஏப்பிரல் 3ம் ஈழப்போர் ஆரம்பித்ததன் பின்பு யாழ்ப்பாணத்தை நோக்கி இராணுவத்தினர் பெருமெடுப்பில் தாக்குதல் நடத்திக்கொண்டு முன்னேறிக்கொண்டிருந்தனர். இதன் காரணமாக1995 ம் ஆண்டு ஜப்பசி மாசம் 30 ம் திகதி காலையில் யாழ்ப்பாணதின் அனைத்து மக்களையும் உடனடியாக யாழ்ப்பாணத்தை விட்டு வெளியேறி தென்மராட்சி, வடமராட்சி, வன்னிப்பகுதிகளுக்கு  செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டார்கள் .


பூத்த கொடி பூக்களின்றீ தவிக்கின்றது.பூங்குருவி துணைகளின்றி தவிக்கின்றது என்ற பாட்டிற்கு உதாரணமாக அன்றைய பாரிய இடப்பெயர்வு இடம்பெற்றது. சுமார் 300,000 க்கும் மேற்பட்ட யாழ் மக்கள் ஒரே நாளில் ஊரை விட்டு வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.இதில் பல சொந்தங்கள், நட்புகள் எல்லாம் விடுபட்டன.



ஆனால் அதன்பின்பு அனைவரையும் இணைத்துக்கொண்டது தபால் மூலமாகத்தான்.அப்போதைய காலத்தில் தொலைபேசி வசதிகள் அனைத்தையும் இலங்கை அரசாங்கம் தடை செய்திருந்தது.அப்போது தபால் மட்டுமே தொடர்பாடலில்100 %  உதவிகளைச் செய்திருந்தது. இதே போலத்தான் நண்பர்களும் தொடர்பு அறுந்துபோன நட்புகளை மீண்டும் புதுப்பித்துக்கொண்டார்கள்.


பள்ளீ பருவ நண்பர்களான ரஜீவ் பருத்தித்துறை சென்று விட பிறேம் கிளிநொச்சி சென்றுவிட்டான்.சிறிது காலத்தின் பின்பு இவர்கள் இருவரும் தபால் மூலம் தொடர்பு கொள்ளத்தொடங்கினார்கள்.அதுவரைகாலமும் ஜாலியாய் திரிந்த பிறேம் வாழ்க்கையில்  மண்ணை அள்ளிப்போட்டான் ரஜீவ் ஒரு கடிதம் மூலமா.


நீண்டகாலத்திற்கு பிறகு தொடர்புகொள்ளுவதால் ஊர் நிலைமையையும் தங்களோட பழைய நினைவுகளையும் எந்த விதமான ஒளிவு மறைவு இல்லாம கடித்ததில் இப்படி எழுதி இருந்தான் ரஜீவ் .

"என்ன மச்சான் பிறேம் எப்படி போகுது கிளிநொச்சியில . இங்கே ஒரே போர் மச்சான்.என்னதான் இருந்தாலும் மணீ டியூசன் இந்துக்கல்லூரி போல வராது. டேய் நீ மணி படிக்கேக்க சைட் அடிச்சியே அந்த வேம்படி கலட்டி லேன் பொண்ணு , இப்போ எங்கட வீட்டுக்கு பக்கதிலதாண்டா இருக்கிறாள் "

"நீ எத்தனை தடவை டிரை பண்ணீயிருப்பாய் லெட்டர் கொடுக்க.இப்போ நல்ல டைம் மச்சி , ஆனா நீ அங்கேயில்ல இருக்கே என்ன செய்யுறது.. நீ வேணும்னா எனக்கு அனுப்புற லெட்டருக்குள்ள வைச்சு அந்த பொண்ணுக்கு லெட்டரை அனுப்பி விடு நான் அதை கொடுத்துவிட்றேன் "

எண்டு நண்பேண்டா கணக்கில கடிதம் எழுதி இருந்தான்..

இது நல்ல விடயம் தானெ எண்டுதானே கேட்கிறீங்க..அதுதான் இல்லை கடிதத்தை பிரித்து வாசிச்சது பிறேம் ன் அம்மா... டியூசன் விட்டு நேரம் பிந்திப்போனாலே ஒண்ணுக்கு போற அளவில அடி பின்னி எடுக்கிற அண்டி ,இந்த கடிதம் வாசிச்ச பிறகு என்ன நடதிருக்கும் எண்டு யோசிச்சு பாருங்களேன்.பூஜை புனஸ்காரங்கள் எல்லாம் முடிந்த பிறகு அன்ரி பிறேம் ஜ கூப்பிட்டு

"டேய் நீ அவனுக்கு எனக்கு முன்னால ஒரு கடிதம் எழுது, இனிமேல் அதை பற்றி கதைக்கவேண்டாம் ,எனக்கு படிப்பு அம்மா அப்பா தான் முக்கியம் எண்டு சொல்லி "

என்று பத்ரகாளியின் அவதாரமாய் பிறேமின் முன்னால காட்சிகொடுத்துக்கொண்டிருந்தார்.

பிறேம் மனசில்லாமல் ஏதோ இப்போதைக்கு தலை தப்பினா போது எண்டு நினைச்சுக்கொண்டு  விரிவா கடிதம் எழுதி விட்டு அன்ரி உள்ளே போன காப்ல


"மச்சான் அம்மா உன்னோட கடித்ததை வாச்சிட்டா,அதனால இங்கே ரொம்ப பிரச்சினை..இனிமேல் அப்படி எழுத வேணாம்.அந்தக்கடிதமும் சும்மா ஒரு தமாசுக்கு தான் எழுதினான்.அதை  சீர்யாஸா எடுக்காதே எண்டு எழுதி எனக்கு ஒரு கடிதம் போடு அதை அம்மா வாச்சிச்சா எல்லா பிரச்சினையும் போயிடும் "

எண்டு  ஒரு சின்னதா ஒரு துண்டுக்கடிதம் எழுதி உள்ளே வைச்சான்.


இந்தக்கடிதம் கிடைச்ச உடனேயே ரஜீவ் வாசிச்ச உடனேயே வெலவெலத்துப் போனான். ஏனெண்டா அவனுக்கு பிறேம் உடைய அம்மாவோட ஸ்ரிக்ட் பற்றி ரொம்ப தெரியும். உடனேயே கடிதம் எழுதி அனுப்பினான் பிறேம் க்கு.

பிறேம்  வந்த கடித்தத்தை அம்மா முன்னால வாசிச்சான் .. அதில் பிறேம் ரொம்ப நல்லவன் சத்தியம் பண்ணாத குறையா பிறேமைப்பற்றி புகழ்ந்து எழுதியிருந்தான் ரஜீவ் ..அன்ரியும் அதைப்பார்த்திட்டு ரொம்ப சந்தோசபட்ட நேரத்திலதான் பிறேம் க்கு சந்திராஸ்டமம் நல்லா வேலை செய்தது.. பிறேமின் தங்கச்சி வந்து தபாலில் இருந்த முத்திரையை எடுப்பதற்காக கடிதம் வந்த உறையைக்கிழிக்க அதனுள்ளே இன்னுமொரு கடிதம் இருந்தது.

"அம்மா உள்ளுக்குள் இன்னொரு லெட்டர் இருக்கு இதை வாசிக்கலையா"
எண்டு அதை எடுத்து தாயிடம் கொடுத்தாள் தங்கை.அதில் ரஜீவ் எழுதியிருந்தான்

மச்சான் நீ சொன்ன மாதிரியே உன்னைப்பற்றி நல்ல மாதிரி எழுதி இருக்கிறேன் அந்த லெட்டரை அம்மாவிடம் கொடுத்துவிடு.  இந்த லெட்டர் உனக்கு .

". அந்த பொண்ணை  இங்க இன்னும் ரெண்டு பேர் சைட் அடிக்கிறாங்கள் என்னமாதிரி உன்னோட முடிவு பேசாமா கடிதத்தில எழுதி எனக்கு அனுப்பி விடு நான் கொண்டு போய் கேட்கிறேன் ,மச்சி உடனேயே கேட்டிடு இல்லாட்டி மிஸ் ஆகிடும்டா ( நண்பன்னா  இப்பிடிதான் இருக்கணும்)"

என்று காதல் தூதுவனாக ரஜீவ் எழுதியிருந்தான் ஆனால் விதி யாரை விட்டது .
 
இதையும் பிறேமின் அம்மாவும் வாசிச்ச பிறகு என்ன நடந்திருக்கும்ன்னு உங்களுக்கே தெரியும் தானே . காணி எல்லையில கதியாலாக போட்டிருந்த பூவரசந்தடி முறிக்கப்படும் சத்தம் விருட்சமே முறியும் அளவுக்கு கேட்டது, தடி முறிக்கிற சத்தமே இப்படியெண்டா அடிவாங்கின பிறேம் எத்தனை நாளைக்கு படுக்கையில் உடம்பு பூரா எண்ணெய் பூசி பாயிலயே படுத்த படுக்கையா கிடந்திருப்பானோ ....

18 டிசம்பர், 2011

அம்மா காப்பாத்து

பாம்பைக்கண்டால் படையும் நடுங்கும் இந்த பழமொழி ஏனோ இன்று வரை உண்மையாகவே உள்ளது ஆனாலும் இந்த பாம்பை விட ஒரு விடயத்துக்கு சிறுவர் முதல் பெரியவர் நடுங்கி கதறும் விடயம் " வைத்தியசாலை ஊசி "சிறுவர்கள் பயப்படுவதில் ஒரு காரணம் இருக்கிறது ஆனால் பெரியவர்கள் இன்றும் பயந்துகொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை ஒருதடவை பொது வைத்தியாசாலைக்கு சென்று வந்தீர்கள் என்றால் புரியும் அதில் அதிகமானோர் பெண்களே..




நேற்று எனது மகளின் 2 ம் மாத ஊசி போடுவதற்காக ஆஸ்பத்திருக்கு போயிருந்தோம்,அங்கே எல்லா அம்மா,அப்பாக்களும் தமது பிள்ளைகளை கூட்டிவந்திருந்தார்கள் ஊசி போடுவதற்காக.எமக்கு முன்னால் இருந்த தாயின் 4 வயசு சிறுமிக்கு ஊசி போட போனபோது அந்த சிறூமி

"அய்யோ எனக்கும் அம்மாவுக்கும் ஊசி போட வேண்டாம்,அப்பாவுக்கு ஊசி போடுங்கோ,எங்களுக்கு போடாதீங்க "எண்டு கத்தியது அனைவருக்கும்
ஒருபக்கம் சிரிப்பு வந்தாலும் அடக்கி கொண்டார்கள்.அதையும்  பொருட்படுத்தாமல் அந்த அழகான நர்ஸ் ஊசி போட்டபோது அந்த சிறுமி

"அம்மா என்னை காப்பாத்து அம்மா என்னை காப்பாத்து" என்று கத்தியபோது அனைவரும் டாக்டர் நர்ஸ் முதல்கொண்டு அனைவரும் சிரித்தார்கள். அப்போது எனக்கு எனது சிறு வயது ஊசியால் விளைந்த அந்த வினை நினைவில் வந்துநின்றது.

நான் எனது ஆரம்ப கல்வியை யாழ்ப்பாணம் கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலையிலேயே பயின்றேன்.அங்கே அன்றைய காலத்தில் எனது உற்ற நண்பனாக இருந்தவன் கருணா என்கின்ற கருணசீலன்.என்னுடன் படித்த மாணவர்களில் எமக்கெல்லாம் முக்கியமானவன் சரா என்கிற " சரவணன்" .அவனைப்பற்றி சொல்லவேண்டும் என்றால் உத்தமபுத்திரனில் வரும் சின்னக்கவுண்டன் புலியாக நடிக்கும் அந்த சிறுவனைப்போலத்தான் இருப்பான் சும்மா தள தளன்னு தக்காளியாட்டம் பம்பிளீமாஸ் கணக்கா எம் மத்தியிலேயே கும்முன்னு இருப்பான்.அது எம்மைபோன்ற ஒல்லிக்குச்சியாட்டம் பல்லியாக இருந்த எல்லா மாணவர்களுக்கு ஒரு வித பொறாமைதான்.ஆனாலும் காட்டிக்கொள்ளமாட்டோம் ஆனால் எமது விளையாட்டு எல்லாம் அவனோடுதான் இருக்கும்.

.எமக்கு 7 வயதில் ஒரு தடுப்பூசி பாடசாலையில் போடுவதற்காக நேர்ஸ் எல்லாரும் வந்திருந்தார்கள்,வகுப்பறையே ஒப்பாரி வைத்துக்கொண்டிருந்தது ஊசியை நினைத்து.ஆனால் அதையெல்லாம் கண்டுகொள்ளாமல் எமது வகுப்பு "அம்மம்மா" டீச்சர் கறிக்கடைக்கு இழுத்துப்போகும் கிடாயாட்டம் இழுத்துப்போய் வாண்டட்டாக ஊசி போட வைத்தார்கள்,நாமும் அழுதுகொண்டே வகுப்புக்கு வந்தபோது அங்கே சராவை காணோம்.


"டேய் கருணா எங்கேடா சரா,ஊசி போட்டிட்டானா?அவன் தானே ஊரே அழியப்போறமாதிரி அழுதுகிட்டு இருந்தானே

"ஓமடா இங்க தான் இருந்தவன்,ஊசி போடுற இடத்திலயும் நான் காணேல்லயே"

"டேய் வசி நீ பார்த்தனியா"

என்று அனைவரிடமும் அக்கறையாக நாம் விசாரித்துக்கொண்டிருந்தது அவனைக்காணவில்லை என்பதற்காக இல்லை அவனுக்கு ஊசி போடும்போது அவன் எப்படி ரியாக்ட் பண்ணீ அழுகிறான் எண்டு பார்க்கதான..நாங்க இப்பவே இப்படி அப்ப சொல்லவா வேணும்..

ஆனாலும் எமக்கு ஏமாற்றமே மிஞ்சியது,சில நிமிட தேடல்களுக்கு பின் டீச்சர் சொன்னது சரா புத்தகபையையும் தூக்கிகொண்டு பக்கத்தில் இருக்கும் அவன் வீட்டுக்கு தப்பி ஓடிவிட்டான் ஊசி பயத்தில் என்று..ஆனால் எமக்கெல்லாம் ஒரெ வருத்தம் ஒரு சூப்பர் சீனை பார்க்கமுடியாமல் போய்விட்டதே என்று.

அடுத்த நாள் சரா பள்ளீக்கூடம் வந்தப்போது நாங்க எல்லோரும் சேர்ந்து ஒரு பிளான் போட்டோம்.நாங்கள் எல்லோரும் வகுப்பில் இருக்கும்போது கோபிகா ஓடிவந்து எல்லோரிடமும்

"நேற்று ஊசி போடாதவங்களுக்கு ஊசி போட இண்டைக்கு நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொல்லணூம்" அப்போ நாங்கள் எல்லோரும் பல்க்காக இருக்கும் சராவை ஊசி போட போகச்சொல்லி வற்புறுத்தவேண்டும் என்பதே.எல்லாத்திட்டமும் சரிபார்க்கப்பட்டு அப்படியே ஸ்கிரிப்ட் பிரகாரம் நான் ,கருணா,ரஞ்சித்,புரந்தரன்,மதுரா,கோபிகா நிறைவேற்றினோம்..

கட் பண்ணீ ஓப்பின் பண்ணீனா

கருணா,நான்,புரந்தரன்,கோபிகா மதுரா,ரஞ்சித், எல்லோரும் அதிபர் அறையில் நின்றுகொண்டிருந்தோம்.அதிபர் பிரம்பை கையில் எடுத்துக்கொண்டு அருகில் வருவது தெரிந்தது.

குண்டுபயபுள்ள நாங்க ஒரு ஜாலிக்காக

"டேய் சரா ஊசி போடுவோம் வாடான்னு " வற்புறுத்தி இழுத்துகொண்டு வர

"அம்மா காப்பாத்து அம்மா காப்பாத்து" 

எண்டு கத்திக்கொண்டு அப்பிடியே மயங்கி விழுந்திட்டான்..

அப்போ எங்களுக்கு எதுவுமே புரியாத அறியாத  வயசு ஏழு

"டேய் சராவை இவங்கள் இழுத்துபோக சரா கீழே விழுந்து செத்திட்டாண்டா" 

எண்டு பக்கி பய சுதாகரன் கத்திகொண்டு ஓட பாடசாலையே கலவரப்பட்டது.
டீச்சர் வந்து பார்த்தபோது மூச்சு இருந்தது.உடனேயே பக்கத்தில இருந்த ஆஸ்பத்திரிக்கு கொண்டு ஓடினார்கள்..அப்பிடியே நம்ம டீமையும் அள்ளீக்கொண்டுபோய் அதிபர் அறையில் நிறுத்திவிட்டார்கள்.

"சேர் சேர் நாங்க வேணுமெண்டே செய்யல சேர்..அவன் நேற்று ஊசிக்கு பயந்து ஊசி போடாம வீட்டுக்கு ஓடிட்டான் சேர்.அதுதான் அவனுக்கு பயத்தை போக்குவமெண்டு இப்படி செய்தனாங்கள் சேர்.."

எண்டு கத்தி கதறிக்கொண்டிருக்கும்போது கோபிகா சொன்னாள்

"சேர் நேத்து அம்மா சொன்னவா அந்த ஊசி போடாட்டி எங்களோட கால் ரெண்டும் சொத்தியாகிடுமாம்,போலியோ வருமாம்.நாங்கெல்லாம் ஊசி போட்டிட்டம் சரவணன் போடாட்டி அவனுக்கு போலியா வந்தா எப்படி சேர் நடப்பான்,இப்பவே பயங்கர குண்டன் நடக்கவே பஞ்சிப்படுறான் பிறகு நடக்கவே ஏலாம போய்ட்டா பாவம்தானே சேர் அதுதான் நாங்கெல்லாம் அவனுக்கு சொல்லிக்கொண்டிருந்தப்போ மயங்கி விழுந்திட்டான் சேர் "நாங்க அவனுக்கு நல்லது செய்ய நினைச்சது தப்பா சேர்"

என்று கோபிகா கேட்ட கேள்வி அதிபருக்கு சிரிப்பை வரவழைத்திருக்கவேண்டும்,சரி சரி இனி இப்பிடி குளப்படி செய்யக்கூடாது வகுப்புக்கு ஓடுங்கோ என்று சொன்னது நாங்கள் வகுப்புக்கு
போகத்தொடங்கினோம்.

அதன்பிறகு எமக்கு சரவணனை அழவைக்க வேண்டுமென்றால் டேய் ஊசி போட நர்ஸ் வந்திருக்காங்க எண்டு சொன்னால் போது வாயிலேயே வயலினில் முராரி ராகம் வாசிப்பான்.

இப்போ சரா அவுஸியில செட்டில் ஆகிட்டான் ,கொஞ்ச நாளுக்கு முன்னால ஆஸ்பத்திரியில அட்மிட் ஆகி வீட்டுக்கு வந்தான் அப்போ நானும்  தமசாக கேட்டேன்,

"என்ன மச்சான் ஒரு கிழமை ஆஸ்பத்திரியில இருந்திட்டு வந்திருக்கே இப்பவும் நீ ஊசிக்கு பயந்து கத்தி மயங்கி விழுவியான்னு " கேட்டப்ப சொன்னான் பாருங்க கேட்டா நீங்களே ஷாக்காயிடுவீங்க.

"டேய் இங்கெல்லாம் ஆஸ்பத்திரி சூப்பர் பசிலிட்டி மச்சான், போன முறை எனக்கு ஊசி போடப்போனப்ப நானும் பயந்துகிட்டுதான் இடுப்பை காட்டினேன்"

" தம்பிரி அது இடுப்பில்ல அடுப்பு"

"அந்த சூப்பர் பிகர் நர்ஸ் ம் ஊசி போட நான் என்னை அறியாமல் கத்தி" 

" டேய் இது உனக்கே ஓவராயில்ல, 30 வயசில உன்னை அறியாமல் கத்தினியா,நீ ஏதாசும் ரீசனோடதாண்ட கத்தியிருப்பே"

"நீ கேளு மச்சி, வலியில எதையோ பிடிச்சிட்டு கண்ணை திறந்து பார்த்தா அந்த நர்ஸோட இடுப்பை பிடிச்சிட்டிருந்தேன்..சாரி மிஸ் ஒரு கில்ப்புக்காக தெரிஞ்சு உங்க இடுப்பை பிடிச்சிட்டேன் எண்டு சொன்னேன் "

"அடப்பாவிப்பயலே ,நச்சுன்னு அந்த நர்ஸ் உன்னோட தாவாங்கட்டையிலேயே ஒண்ணு விட்டிருக்குமே"

"அதெல்லாம் இலங்கையிலதான் மச்சி,இங்கே அப்பிடியில்ல , பயமாயிருந்தா பிடிச்சுக்கொள்ளுங்கன்னு அந்த நர்ஸே சொல்லிட்டா"

"நர்ஸே சொல்லிட்டாளா,சிறுக்கி மக ... அப்போ நீ  அடுத்தநாள் விடியும் வரைக்கும் பிடிச்சிட்டு இருந்திருப்பியேடா"

"சீ இந்த மேட்டர் நமக்கு தெரியாமப்போய்ட்டே,நம்ம ஊரிலையும்தான் எத்தனை நர்ஸ் இருக்காளுக மூஞ்சியை உம்முன்னு வைச்சிகிட்டு மாட்டுக்கு ஊசி போடுற நினைப்பிலேயே ஒரே செருகுதான்..

ஓ இதனாலதான் நம்ம பயபுள்ளக எல்லாம் டூரிஸ்ட் விசாவில அங்கே போனாப்பிறகு அசேலம் அடிக்குதா  ?

10 ஆகஸ்ட், 2011

மங்காத்தா பாடல் தரையிறக்கிகொள்ள

அஜித் திரிஷா அர்ஜீன் நடிப்பில் வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் வெளிவர இருக்கும் அஜித்தின் 50 வது படம் மங்காத்தா படத்தின் பாடல்களை தரையிறக்கி கொள்ள இங்கே கிளிக்குங்கள்

28 ஜூலை, 2011

ஓமந்தையில் புகையிரதம் லொறி விபத்து-இருவர் பலி

சற்று முன் ஓமந்தப்பகுதியில் புகையிரத்ததுடன் மரங்களை ஏற்றி வந்த லொறி மோதியதால் ஸ்தலத்திலேயே 22 வயதான சாரதியும் கிளீனரும் உடல் சிதறி பலியாகினர்.மேலும் இருவர் காயங்களுடன் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.சம்பவம் நடைபெற்ற இடத்தில் பலியானவர்களின் உடல் பாகங்கள் சிதறி கிடந்ததைப்பார்த்த ஒர் சிலர் மயங்கி விழுந்தனர்.