09 பிப்ரவரி, 2012

படம் பார்த்து கவ்ஜையை கக்கு

#KAVI16 கவிதை ப்ளீஸ்  on Twitpic


உன் வயிற்றில் கருத்தரிக்கவில்லை இந்த உயிர் 
ஆனாலும் நீயும் நானும் ஒரே ஜாதி அம்மா என்று அழைப்பதால்

என் தாயின் கொங்கை தவிர்த்து நானறியேன்  
இவ் உலகில் உன் போல் பசிதீர்க்கும் பாத்திரமே

கணநேரம் மடியில் வைத்து என் பசி போக்கினாள் என் அன்னை
இன்றூ உன் மடி தேடி வந்தேன் அநாதை கன்றுகுட்டியாய்

உன் மொழிகள் நானறியேன்,உன் இனத்தை நானறியேன்.
உன் மடி கண்டு அதன் பால் உண்டு நானறிந்தேன் நீயும் தாயென்று..


ஆறறிவென்றார் எமக்கு ,அதில் ஓரு அறிவு குறைவு உனக்கு,
எனைத்தெருவில் விட்டுபோனோர் இனி எதற்கு நீதான் தாயே என குலவிளக்கு


கோமாதவென்று உனை அழைப்பர் கோயில் சென்று அன்னதானம் கொடுப்பர்,
ஆனால் உனையும் எனையும் எச்சில் உண்ணவே மிச்ச இலையை கொடுப்பர்

#KAVI15 கவிதை ப்ளீஸ் on Twitpic


என் பசிக்கு ரத்தம் காய்ச்சி பால் கொடுத்தாள் என் தாய்
அவளின் பசி போக்க ரத்தம் சக்தியாக்கி சுமை தூக்குகிறேன்

விழியோரம் விம்பமாகும் உன் சோகமும்
கைகளின் வீரிய ரெளத்திரமும்  
நீயும் திறந்தவெளிச்சிறை தமிழனின் விதையா

கால்களில் தூரமும் கைகளில் பாரமும் தெரியவில்லை தாயே
கண்ணீரும் வற்றிய உன் கண்கள் என்னுள் காட்சியாகும் போது

பென்சில் பிடிக்கவேண்டிய என் கைகளில் 
பெற்றிடுத்த பெண்மையின் இலக்கணமே
உனக்கு உணவளிக்க கல் சுமக்கிறேன்

நீ பசித்திருந்து  எனை வெளிக்கொணர்ந்து
தொப்புகொடி அறுத்தாய்
படுக்கையில் உன் நிலை உணர்ந்து
என் கல்வி தொலைத்து 
காலம் முழுக்க கூலியானேன்