27 ஜூன், 2011

ஈழ்த்தமிழருக்காக மெரீனா கடற்கரையில் ஆயிரக்கணக்கானோரில் மெழுவர்த்தி அஞ்சலி

இலங்கை அரசின் சித்திரவதைகளூக்கு ஆளாக்கப்பட்டு இன்னுயிர் துறந்த ஈழத்தமிழர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மெரினா கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி நேற்று ( 26.6.2011) மாலை அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 26ம் நாளை உலகெங்கிலும் சித்திரவதையால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச ஆதரவு தினமாக ஐநா கடைபிடித்து வருகிறது.
இந்நிகழ்வில் பழ.நெடுமாறன், காசி ஆனந்தன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், பாமக வேல்முருகன், மதிமுக மல்லை சத்யா உட்பட பல்லாயிரக்கணக்கானோர் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தினர்.
பழ.நெடுமாறன் எழுச்சி உரை ஆற்றினார். சீமான் எழுச்சி கோஷங்கள் எழுப்பினார். இந்த நிகழ்வு கட்சி சார்பற்ற நிகழ்வாகவே இருந்தது.

20 ஜூன், 2011

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதிக்காதமைக்கு லலித் மோடி விவகாரம் காரணம்?

இலங்கையில் நடைபெறவுள்ள ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் கிரிக்கெட் போட்டிகளில் இந்திய வீரர்கள் விளையாட அனுமதிப்பதற்கு இந்திய கிரிக்கெட் (பிசிசிஐ) சபை மறுத்தமைக்குக்கு லலித் மோடி விவகாரம் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

சிங்கப்பூரை தளமாகக்கொண்ட சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் எனும் நிறுவனத்திடம் இப்போட்டிகளை ஏற்பாடு செய்வதற்கான பொறுப்பை ஸ்ரீலங்கா கிரிக்கெட் (இலங்க கிரிக்கெட் சபை) வழங்கியுள்ளது.

சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் நிறுவனத்திற்கும் லலித்மோடிக்கும் தொடர்பிருப்பதாக இந்திய கிரிக்கெட் சபை சந்தேகிப்பதாலேயே ஸ்ரீலங்கன் பிரிமியர்லீக் போட்டிகளில் இந்திய வீரர்களை அனுமதி மறுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐ.பீ.எல். முன்னாள் தலைவரான லலித்மோடி இப்போது பிசிசிஐயினால் ஒதுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

'இலங்கை லீக்கின் பின்னால் மோடி இருப்பதற்கான அறிகுறிகளை நாம் கண்டுள்ளோம். ஐ.பி.எல்.லில் பணியாற்றிய அவரின் நபர்கள் பலர் இப்போது சொமர்செட் என்டர்டெய்ன்ட்மன்ட் வென்சர்ஸ் (எஸ்.ஈ.வி.) நிறுவனத்தின் ஊடக இலங்கை லீக்கை நிர்வகிக்கின்றனர்' என பிசிசிஐ உயரதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கன் பிரிமியர் லீக் போட்டிகளை இலங்கை கிரிக்கெட் சபை நடத்தாமல் எஸ்.ஈ.வி. நிறுவனத்திடம் ஏற்பாட்டுப் பொறுப்பை ஒப்படைத்ததால் இப்போட்டிகளில் இந்திய வீரர்களை விளையாட அனுமதிப்பதில்லை என தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிசிசிஐ நேற்று அறிவித்தமை குறிப்பிடத்தக்கது.

08 ஜூன், 2011

கனிமொழி,சரத் ரெட்டியின் ஜாமீன் மனு டெல்லி உயர் நீதிமன்றத்தில் தள்ளுபடி

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு வழக்கில் கைதாகி சிறையில் உள்ள கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

ஸ்பெக்ட்ரம் முறைகேடு தொடர்பான வழக்கில், இவ்விருவரும் முன் ஜாமீன் கோரி தாக்கல் செய்த மனுவை, சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பின்னர் கனிமொழி, சரத்குமார் இருவரையும் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த மே 20 ஆம் தேதி கைது செய்து திகார் சிறையில் அடைத்தனர்.

இதைத் தொடர்ந்து டெல்லி உயர் நீதிமன்றத்தில் மே 23 ஆம் தேதி மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை கடந்த 24-ம் தேதி விசாரித்த டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி அஜித் பரிகோகே, அதன் மீதான உத்தரவை 30-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

மேலும், இந்த ஜாமீன் மனுக்கள் தொடர்பாக விளக்கம் அளிக்க சிபிஐ-க்கு நோட்டீஸ் அனுப்ப அவர் உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு, இவ்விருவரின் ஜாமீன் மனு மீதான உத்தரவு பின்னர் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்தார்.

இந்த நிலையில், கனிமொழி எம்.பி., கலைஞர் டிவி நிர்வாக இயக்குநர் சரத்குமார் ஆகியோர் தாக்கல் செய்த ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து, டெல்லி உயர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

04 ஜூன், 2011

மதுரையின் திமுக செயல் வீரர்கள் கூட்டத்தில் அழகிரிக்கு எதிரான கோஷம்

னைத்து மாவட்டங்களிலும் கடந்த 23-ம் தேதி தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அஞ்சாநெஞ்சன் கோட்டை என்று சொல்லப்பட்ட மதுரையில் மட்டும், கடைசி நேரத்தில் கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டது. காரணம், கூட் டத்தை நடத்த மண்டபம் கிடைக்கவில்லை. குறிப்பாக, கட்சியின் உடன்பிறப்பு ஒருவரே தனது மண்டபத்தைத் தர மறுத்துவிட்டார்!
இத்தனைக்கும் அந்த மண்டபத்துக்கு சொந்தக்காரர் கடந்த ஐந்து ஆண்டுகளில் அழகிரியின் பெயரைச் சொல்லியும் ஆட்சி அதிகாரத்தைப் பயன்படுத்தியும் முடிந்த வழிகளில் எல்லாம் தன்னை வளப்படுத்திக் கொண்டவர். தேர்தலின்போது இவரது மண்டபத்தில் வைத்துத்தான் பட்டுவாடா நடந்தது. ஆனால் இப்போது, 'யாரைக் கேட்டு இங்கே கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தீர்கள்? இதனால் எனக்கு ஏதாவது சிக்கல் வந்தால்..?'' என்று ஆவேசப்பட்டாராம் அந்தப் பிரமுகர். இதனால் இரண்டு நாட் கள் கழித்து ஒரு ஹோட்டலில் வைத்து செயல்வீரர்கள் கூட்டம் நடத்தினார்கள். மதுரையில் தி.மு.க-வின் இன்றைய பரிதாப நிலை இதுதான்!
மதுரையில் கட்சியின் உண்மையான விசுவாசிகளோ, ''ஏதாச்சும் கேஸ்ல நீங்களா அந்தாளப் பிடிச்சு உள்ள வெச்சுட்டீங்கன்னா நல்லது. இல்லாட்டி எங்க ஆளுங்க இருக்குற ஆத்திரத்துக்கு என்ன பண்ணுவாங்கனு தெரியாது'' என்று அழகிரியையும் மதுரை தி.மு.க-வையும் ஆட்டிப் படைத்த முக்கியப் புள்ளியின் பெயரைச் சொல்லி டென்ஷன் ஆகிறார்கள்.
மேலும் பேசியவர்கள், ''தி.மு.க. ஆட்சிக்கு வரும்போ தெல்லாம் புதுசு புதுசா ஒரு கூட்டம் வந்து அழகிரியை ஆண்டுட்டு போயிடுது. 1989-ல் தி.மு.க. ஆட்சிக்கு வந்தப்ப வீடியோ கடை அண்ணாமலையும் ஹோட்டல் பிரமுகர் ஒருத்தரும் அழகிரியை ஆட்டுவிச்சு அவங் களுக்கு வேண்டியதை சாதிச்சுக்கிட்டாங்க. ஆட்சி மாறுனதும் அவங்க காணாமப் போயிட் டாங்க. சோதனையான அடுத்த ஐந்து ஆண்டு களும் நாங்கதான் மதுரைக்குள் கட்சியை காப்பாத்தினோம்.
1996-ல் மீண்டும் தி.மு.க. ஆட்சி வந்ததும் அழகிரியை வளைக்க இன்னொரு கூட்டம் வந்தது. எங்களை அழகிரி வீட்டுக்கு வெளியே நிறுத்திட்டாங்க. அப்போ புத்தகக் கடை சந்திரன் என்பவர் அழகிரியை வளைச்சு தன்னுடைய யாதவர் சாதிக்காரர்களை எல்லாம் கை தூக்கி விட்டார். இவர் சொல்லைக் கேட்டுத்தான் யாதவரான குழந்தை வேலுவை மேயராக்கினார் அழகிரி. அந்த ஆட்சி முடிந்ததும் அவங்களும் அழகிரியை விட்டுட்டுப் போயிட்டாங்க. அ.தி.மு.க. ஆட்சியில் தா.கிருட்டிணன் கொலை வழக்கில் சிக்கிய நேரத்தில் அவரை வைத்து வாழ்ந்தவங்க எல்லாம் ஓடி ஒளிஞ்சுட்டாங்க.
2006-ல் மீண்டும் கழக ஆட்சி வந்ததும் மதுரை தி.மு.க-வை ஆட்டிப் படைக்க வந்தார் ஒரு கான்ட்ராக்டர். கடந்த கால அனுபவங்களில் பாடம் கற்காத அழகிரி,  அவரையும் அனுமதித்தார். மதுரை மேயர் பதவியில் தனது சாதிக்காரரான தேன்மொழியை அமரவைத்தார். இவரோடு கூட்டு என்ற ஒரே காரணத்துக்காக புறநகர் மாவட்டத்தைச் சேர்ந்த தளபதியை மாநகர் மாவட்டச் செயலாளர் ஆக்கினார். கட்சியில் அதிகாரம் செய்யும் அந்த நபர் இதுவரை கட்சிக்காக போராடி ஜெயிலுக்கு போயிருக்கிறாரா?
தா.கி. கொலை வழக்கில் அழகிரி கைதாகி வேனில் ஏற்றப்பட்டபோது அந்த வேனுக்குப் பின்னால் ஓடிய தி.மு.க. தொண்டர்களை கண் மூடித்தனமாக தாக்கி யவர் போலீஸ் உதவிக் கமிஷனர் குமாரவேலு. கடந்த ஆட்சியில் அவர்தான் ஐ.எஸ். உதவி கமிஷனராக இருந்து மதுரையை ஆட்டிப் படைச்சார். இதன் பின்னணியிலும் அந்த நபரின் சாதி இருக்கிறது. 
மதுரை உயர் நீதிமன்றத்திலும் மாவட்ட நீதிமன்றத்திலும், கட்சிக்காக உழைத்தவர்களை துரத்திவிட்டு காசுக்காக சிலரை நியமித்த கொடு மையை அழகிரியிடம் யார் சொல்வது? தேர்தல் முடிவுகளுக்குப் பின் அழகிரியை பார்க்கப் போன ஒன்றிய செயலாளர்களை, 'தோத்துப் போயிட்டு இங்க எதுக்காக வர்றீங்க’னு எடுத்தெறிந்து பேசும ளவுக்கு அழகிரி இன்னமும் அவர்களுக்கு இடம் கொடுத்து இருக்கிறாரே!'' என்று ஆதங்கத்தில் கொதிக்கிறார்கள்.
''இடைத் தேர்தலில் தனது உறவினருக்கு அழகிரி மூலம் ஸீட் வாங்கிக் கொடுத்தவர்தான் இப்போது கட்சிக் கூட்டம் நடத்த மண்டபம் கொடுக்க மறுக்கிறார். இதெல்லாம் ஆரம்பம்தான். இப்படி இன்னும் பலர் கிளம்பக் காத்திருக்கிறார்கள். 'என்னைக் காப்பாற்ற அ.தி.மு.க. அமைச்சரின் தம்பி இருக்கிறார்’ என்று சொல்லிக் கொண்டும், வெளிநாட்டுக்கு எஸ்கேப் ஆகிவிடலாமா? என ஆலோசனை நடத்திக் கொண்டும் இருக்கும் துரோகிகளைத்தானே அழகிரி இன்னமும் நம்புகிறார்?'' என்றும் வேதனைப்படுகிறார்கள் தொண்டர்கள்.
இதற்கிடையே கடந்த 27-ம் தேதி நடந்த மதுரை புறநகர் மாவட்ட செயல் வீரர்கள் கூட்டத்தில், ''பணம் இருக்குறவனுக்குத்தான் தேர்தலில் ஸீட்டும், பதவிகளும் குடுத்தீங்க. இப்ப என்னாச்சு?'' என்று ஆவேசப்பட்ட உடன்பிறப்புகள், முக்கியப் புள்ளி ஒருவரின் பெயரைக் குறிப்பிட்டு, ''அந்த நபரைக் கட்சியைவிட்டு நீக்கு!'' என்று கோஷம் போட்டு இருக்கிறார்கள்.
இந்த தோல்வியிலாவது, அழகிரி தன்னை சுயபரிசோதனை செய்துக் கொள்ளட்டும். 

நன்றி ஜீனியர் விகடன்

01 ஜூன், 2011

தோல்விக்குக் காரணம் தி.மு.க. நிர்வாகி வேட்டி கிழிக்கப்பட்ட கடலூர் மாவட்ட கூட்டம்

டலூர் மாவட்ட தி.மு.க. செயல் வீரர்கள் கூட்டம், குறிஞ்சிப்பாடியில் கடந்த 25-ம் தேதி நடந்தது. ஆவேசமாகப் பேசிய இளைஞர் அணி மாவட்டச் செயலாளர் தணிகைச்செல்வம், ''கடலூர் மாவட்டத்தில் தி.மு.க. படுதோல்வி அடைந்ததற்குக் காரணம், அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக நம் கட்சிக்காரர்களே வேலை செய் தார்கள். அதுமட்டுமின்றி, பணம் கொடுத்தும் உதவிசெய்து, சொந்தக் கட்சிக்கே துரோகம் செய்தார்கள். அதனால், கட்சியில் களை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்துள்ளது. மாவட்டச் செயலாளர் ஆணை இட்டால், மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்வோம்!'' என்றார்.
பண்ருட்டி ஒன்றிய செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான சபா ராஜேந்திரன், ''அண்ணா கிராம ஒன்றிய செயலாளர் வெங்கட்ராமன்தான் தே.மு.தி.க. வேட்பாளருக்கு ஆதரவாக வேலை செய்தார், நிதி உதவியும் செய்துள்ளார். தி.மு.க-வுக்குத் துரோகம் செய்து விட்டு, கொஞ்சமும் கூச்சம் இல்லாமல், இந்தக் கூட்டத்துக்கு வந்து பல்லைக் காட்டிக்கொண்டு முன் வரிசையில் உட்கார்ந்து இருக்கிறார். இதுபோன்ற துரோகிகளை உடனடியாகக் களை எடுக்க வேண்டும்!'' என்று சீறினார்.
இதைக்கேட்ட தொண்டர்கள் கடும் ஆத்திரத்துடன், 'அந்தக் கருங்காலியை வெளியே அனுப்புங்கள், அடித்தே கொல் கிறோம்’ என்று பாய... நாற்காலிகள் தூக்கி வீசப்பட்டன. கடும் ரகளைகளுக்கு இடையே மைக் பிடித்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், ''மாவட்டத்தில் ஒரு தொகுதியில் கூட ஜெயிக்கவில்லை, வெட்கமாக இருக்கிறது. தலைகுனிய வைத்து விட்டனர், தமிழக மக்கள். விஜயகாந்த் எதிர்க்கட்சியாக உட்காரும்போது என் உடம்பே கூனிக்குறுகுகிறது. மீண்டும் மக்களை சந்திப்போம்... வெற்றி பெறுவோம்!'' என்று அழாத குறையாகப் பேசி கூட்டத்தை நிறைவு செய்தார்.
பன்னீர் செல்வத்துடன் வெளியேறிய வெங்கட்ராமனுக்கு சரமாரியாக அடி. அவரது சட்டை, வேஷ்டியைக் கிழித்து எறியவே, ஜட்டியோடு கிடந்த வெங்கட்ராமனை, பன்னீர் செல்வம் காப்பாற்ற முயற்சி செய்தார். உடனே தொண்டர்களின் கோபம் அவர் மீது பாய்ந்தது. அதனால் பன்னீர்செல்வத்தை எதிர்த்தும் கோஷம் போட்டார்கள்.
ஆவேசமாக நின்ற தொண்டர்களிடம் பேசினோம். ''தே.மு.தி.க. வேட்பாளர் சிவக்கொழுந்துக்கு வெங்கட் ராமன் பணம் கொடுத்து உள்ளார். இருவரையும் சந்திக்க வைத்ததே பண்ருட்டி டாக்டர் ஒருவராம். இருவரும் ஒன்றாக இருப்பதை பா.ம.க-வில் உள்ள ஒரு முக்கியப் பிரமுகர் பார்த்துள்ளார். தி.மு.க. வேட்பாளருக்கு ஓட்டுப் போடவேண்டாம் என்று சொன்னதற்கு சி.டி. ஆதாரம் இருக்கிறது. வெங்கட் ராமன், பன்னீர் செல்வத்தின் தீவிர ஆதரவாளர். இந்த உள்குத்து பன்னீர் செல்வத்துக்கும் தெரியும். அதனால்தான் மாவட்டச் செயலாளர் பதவியில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ராஜி னாமா செய்ய வேண்டும் என்று கேட்கிறோம்!'' என்றார்கள்.
நடந்த சம்பவம் குறித்து எம்.ஆர்.கே.பன்னீர் செல்வத்திடம் விசாரித்தபோது, ''செயல் வீரர்கள் கூட்டத்தில் எந்த மோதலும் நடக்கவே இல்லையே'' என்றார். வெங்கட்ராமனிடம் கேட்டபோது, ''என் மீது பொய்யான புகார் சொல்கிறார்கள். இதில் உண்மை இருந்தால் என் மீது கட்சி நடவ டிக்கை எடுக்காமல் இருக்குமா? சி.டி. பற்றி சொல் வது எல்லாம் கட்சிக்குள் இருக்கும் எனக்குப் பிடிக்காதவர்கள் செய்யும் வேலைதான் இது!'' என்கிறார்.

நன்றி:ஜீனியர்விகடன்

31 மே, 2011

கட்டுநாயக்காவில் சிங்கள மக்கள் மீது சிங்கள பொலிசார் அடிதடி-காணொள் இணைப்பு

இலங்கை அரசாங்கம் கொண்டுவர இருக்கும் தனியாருக்கான் பென்சன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கட்டுநாயக்காவில் தொழிலாளர்கள் பெரு ஆர்ப்பாட்ட பேரணீ ஒன்றை நடத்தினர்.

இவ் ஆர்பாட்டத்தைக் கலைக்க காவற்துறையினர் கண்ணீர் புகைக் குண்டுகளைப் பாவித்ததோடு, துப்பாக்கி ரவைகளைப் பாவித்தும் அவர்கள் சுட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. கண்ணீர் புகைக் குண்டுகளால், அப்பகுதி மேகமூட்டம் நிறைந்த பகுதிபோல காணப்பட்டது. இதனிடையே வழி தெரியாது, ஆர்பாட்டக் காரர்கள் பக்கமாகச் சென்ற பிரதி பொலிஸ்மா அதிபர் ஒருவரை ஆர்பாட்டக்காரர்கள் பிடித்து நையப்புடைந்துள்ளனர், இவரைக் காப்பாற்ற அங்கே ஓடிய மேலும் 15 பொலிசாரையும் ஆர்ப்பாட்டக்காரர்கள் சுற்றிவளைத்து அடித்துள்ளனர்.

இதில் கலவரம் எதுவும் நடாக்காதபோதும் அங்குவந்த பொலிசார் திடீரென கண்ணீர் புகைகளைப் பரவி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோரைக் கலைக்க முயன்றதாலேயே மோதல் பலமடைந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் காயமடைந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் உட்பட மேலும் 14 பொலிசார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை உத்தேச ஓய்வூதியத் திட்டத்தை தற்காலிகமாக ரத்து செய்வதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதோடு, சர்ச்சைக்குரிய இந்த ஓய்வூதியத் திட்டம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.


யாழ் பொது நூலகம் எரிப்பு, 31 மே 1981 -40 ஆண்டு நிறைவில்



யாழ்ப்பாணம் பொது நூலகம் எரிப்பு என்பது இலங்கை இனப்பிரச்சினையில் ஒரு முக்கிய நிகழ்வாகும். இந்நிகழ்வு 1981 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி நள்ளிரவுக்கு பின்னர் சிங்கள வன்முறைக் குழுவொன்றால் இடம்பெற்றது. இது 20ம் நூற்றாண்டின் இன, நூலழிப்புகளில் ஒரு மிகப்பெரும் வன்முறையாகக் கருதப்படுகிறது[1]. இவ்வழிப்பு நேர்ந்த காலகட்டத்தில் யாழ்ப்பாணப் பொது நூலகம் கிட்டத்தட்ட 97,000 அரிய நூல்களுடன் தென்கிழக்காசியாவிலேயே மிகப்பெரிய நூலகமாகத் திகழ்ந்தது[2][3]. இந்த நூலகஎரிப்பு வன்கும்பலில் இலங்கையின் அமைச்சர் காமினி திசாநாயக்கா உட்பட வேறு பல அப்போதைய சிங்கள அரசியல் தலைவர்கள் அடங்கியிருந்தனர். நூலகம் எரிக்கப்பட்டது ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் அழியா காயம் ஒன்றை ஏற்படுத்தி, தமிழ்த் தேசியப் போக்குக்கு உரம் ஊட்டியது.

30 மே, 2011

2ஜி ஊழல்: சிறையில் அடைக்கப்படுகிறார் கரீம் மொரானி

2ஜி ஸ்பெக்ட்ரம் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சினியுக் பிலிம்ஸ் நிர்வாக இயக்குநர் கரீம் மொரானியின் முன் ஜாமீன் மனுவை, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.இதைத் தொடர்ந்து, அவர் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் அடைக்கப்படவுள்ளார்.

முன்னதாக, ஸ்பெக்ட்ரம் முறைகேட்டில் தொடர்புடைய ரூ.200 கோடி தொகை, டிபி ரியால்டி நிறுவனத்திடம் இருந்து கலைஞர் டிவிக்கு பரிமாற்றம் செய்வதற்கு மொரானி வழிவகுத்தாக, சிபிஐ தரப்பு வழக்கறிஞர் ஏ.கே.சிங் வாதிட்டார்.


இந்த பணப் பரிமாற்றத்துக்காக, சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவன நிர்வாக இயக்குனர் கரீம் மொரானி ரூ.6 கோடி பெற்றுக் கொண்டதாக சிபிஐ தரப்பு குற்றம்சாட்டியது.

இந்த நிலையில், கரீம் மொரானியின் ஜாமீன் மனுவை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று தள்ளுபடி செய்தது.

அதேநேரத்தில், மருத்துவ காரணங்களுக்காக நீதிமன்றத்தில் ஆஜராவதில் இருந்து தனக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்ற அவரது கோரிக்கை ஏற்கப்பட்டதாக தெரிகிறது.

26 மே, 2011

5 வயசிலிருந்தே போட்டிருந்த மூக்குத்திய கழட்டிய கனிமொழி

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.

15-க்கு 10 அடி நீள அகலம்தான் அந்த அறை. கல் படுக்கையும் ஒரு காற்றாடியும். தமிழகத்துக்கே இலவசத் தொலைக்காட்சிப் பெட்டி அளித்தவரின் மகளுக்கு சிறையில் சிறப்புச் சலுகையாக ஒரு சின்னத் தொலைக்காட்சிப் பெட்டி. படிப்பதற்கான மனநிலை இருக்குமோ இருக்காதோ... கைவசம் ஆறு புத்தகங்கள்... ஆம், திஹார் சிறையில் கனிமொழி!

தி.மு.க-வின் ராஜ்யசபா எம்.பி, முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகள்... சக்தி வாய்ந்த அடையாளங்கள் சட்டத்தின் முன் தோற்கடிக்கப்பட, திஹாரில் சிறை எண் 6-ல் அடைக்கப்பட்டார் கனிமொழி. அலைக்கற்றை விவகாரத்தில் கனிமொழியின் பெயர் அடிபடத் தொடங்கிய நாளில் இருந்தே, கருணாநிதியின் தூக்கம் தொலைந்துவிட்டது. கட்சியின் உயர்நிலை செயல்திட்டக் குழுவைக் கூட்டி, 'இது கனிமொழி மீதான பிரச்னை இல்லை. கட்சியின் மதிப்புக்கு பங்கம் உண்டாக்கும் பிரச்னை!’ எனச் சொல்லி தீர்வுக்கு வழி கேட்டார். ஆனால், 'காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலகுவது நல்லது அல்ல!’ என கட்சிக்காரர்களே கருணாநிதியின் எண்ணத் துக்கு அணை போட்டார்கள். ''கனிமொழி என் மகள் மட்டும் அல்ல... இந்தக் கட்சிக்காக பெரிதாகத் தொண்டாற்றியவர். அவரும் அவருடைய தாயாரும் படுகிற பாட்டை என்னால் சொல்ல முடியவில்லை!'' எனக் கட்சி நிர்வாகிகள் மத்தியில் கருணாநிதியால் தழுதழுக்க மட்டுமே முடிந்தது.


மீடியா வெளிச்சம் படாமல் பையனை வளர்ப்பதில் ஒரு காலத்தில் உறுதியாக இருந் தவர் கனிமொழி. ஆதித்யனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவிக்க வந்த ஒரு முன்னாள் அமைச்சரைக் கையெடுத்துக் கும்பிட்டு, 'அவனைப் பெரிய ஆளா ஆக்கிடாதீங்க!’ என வேண்டியவர். ஆனால், கோர்ட்டுக்கு அனுதினமும் வந்து கையெழுத்திட வேண்டும் என உத்தரவு வந்தபோது, மகனோடு வர வேண்டிய இக்கட்டு கனிமொழிக்கு.

20-ம் தேதி மதியம் தீர்ப்பை வாசித்த நீதிபதி சைனி, 'குற்றச் சதியில் ஈடுபட்டதற்கான ஆதாரங்கள் வலுவாக இருக்கின்றன. சாட்சி களைக் கலைக்கும் வாய்ப்பும் அதிகம். அதனால், முன் ஜாமீன் மனு நிராகரிக்கப்படுகிறது!’ என அறிவிக்க, அரவிந்தனின் தோளில் சாய்ந்து கண் கலங்கினார் கனிமொழி.

மகளுக்கு எப்படியும் பெயில் கிடைத்துவிடும் என நம்பி இருந்த ராஜாத்தி அம்மாள் பதறி அடித்து டெல்லிக்குக் கிளம்பினார். ஆனால், அவர் வருவதற்கு முன்னரே, திஹார் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார் கனிமொழி. சிறைக்குள் போகும் முன்னர் கனிமொழி,

அரவிந்தனைக் கூப்பிட, அவர் பதறியடித்து ஓடி வந்தார். 'நான் ஆதித்யனிடம் பேசணுமே...’எனக் குரல் உடைந்து சொல்லியிருக்கிறார் கனிமொழி. அதற்கு போலீஸ் அனுமதி மறுக்க, 'என்னைப் பிரிஞ்சு ஒருநாள்கூட இருக்க மாட்டான். ஆதி கிட்ட நான் ஸாரி கேட்டதா சொல்லிடுங்க!’என்ற படியே சிறை வளாகத்துக்குள் போனார் கனிமொழி.

சிறை விதிகளின்படி, வாட்ச், அணிகலன்கள் உள்ளிட்டவற்றைக் கழற்றிவிட வேண்டும். 'கைப்பையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். ஆனால், மூக்குத்தியைக் கழற்றிக் கொடுங்கள்!’ என சிறை அதிகாரி சொல்ல, கனிமொழி எதிர்பாரா அதிர்ச்சியில் நிலை குலைந்தது அங்கேதான். 'அஞ்சாவது படிக்கிற காலத்தில் இருந்து மூக்குத்தி போடுறேன். அவசியம் கழற்றித்தான் ஆகணுமா?’ எனக் கலங்கினார் கனி. மூக்குத்தியை அவ்வளவு சுலபமாகக் கழற்ற முடியவில்லை. தி.மு.க-வின் எம்.பி-க்களான வசந்தி ஸ்டான்லியும் ஹெலன் டேவிட்சனும் போலீஸ் அனுமதி பெற்று உள்ளே போக, அங்கே கனி அமர்த்தப்பட்டு இருந்த கோலம் அவர்களைக் கதறவைத்துவிட்டதாம். சிறை சம்பிரதாயங்களை முடித்துவிட்டு, கண்ணீர் முட்ட உள்ளே போன கனிமொழி திரும்பத் திரும்பச் சொன்ன வார்த்தைகள்... 'ஆதித்யனைப் பத்திரமாப் பார்த்துக்கங்க!’

''திஹார் சிறையில் பணியாற்றும் பெண் அதிகாரி ஒருவர் இரண்டு வாரங்களுக்கு முன் சி.ஐ.டி. நகருக்கு அழைத்து வரப்பட்டார். சிறை எப்படி இருக்கும், என்னென்ன சாப்பாடு, உள்ளே யாருக்கு அதிகாரம்அதிகம் போன்ற விவரங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டார்கள். அதனால், 6-ம் எண் அறையைப் பார்த்து கனிக்கு பெரிதாக அதிர்ச்சி இல்லை. அரை மணி நேரத்துக்குப் பிறகு கூடுதலாக இரண்டு தலையணைகள் கேட்டு வாங்கிக்கொண்டார். இரவு அவர் சரியாகத் தூங்கவில்லை. பெண் அதிகாரி ஒருவர் மூலம் மகனுடைய செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் அனுப்பச் சொன்னார். இந்த வருடம் ஆதித்யன் ஆறாம் வகுப்பு சேர வேண்டும். அவனைப் பற்றிய கவலைதான் கனிமொழியை வாட்டுகிறது!'' என்கிறார்கள் டெல்லி தி.மு.க. புள்ளிகள்.

அடுத்த நாள் பாட்டியாலா சி.பி.ஐ. கோர்ட்டுக்கு வந்தார் கனிமொழி. அதற்கு முன்னதாகவே கோர்ட்டுக்கு வந்து வராண்டாவில் காத்திருந்த ராஜாத்தி அம்மாள் மகளைக் கட்டிப் பிடித்துக் கலங்கினார். ''என்னால்தானே இத்தனையும்...'' என ராஜாத்தி சொல்லி அழ, அவரை அமைதியாக்கி, ரகசியமாக ஏதோ சொன்னார் கனிமொழி. உடனே சரத் ரெட்டியையும் ஆ.ராசாவையும் சந்தித்து ஏதோ பேசினார் ராஜாத்தி அம்மாள். அப்போது, கண்ணீர் மறைந்து... கோபமும் ஆவேசமுமாக இருந்தது அவருடைய முகம்.

ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி, ஆதித்யனை அழைத்து வர, கனிமொழிக்கு மீண்டும் கண்ணீர் கோத்துக்கொண்டது. ''அம்மா, எப்போ வெளியே வரப்போறேன்னு தெரியலை. பத்திரமா இரு. அம்மாவைப் பார்க்கணும்னு அடம் பிடிக்காதே...'' எனத் தளும்பிய கண்களுடன் கனிமொழி சொல்ல, ''நான் பத்திரமாப் பார்த்துக்கிறேன். நீங்க தைரியமா இருங்க!'' என ஆறுதல் சொன்னார் பரமேஸ்வரி.டெல்லியில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் அவருடைய மனைவி பரமேஸ்வரியின் பராமரிப்பில்தான் இருக்கிறார் ஆதித்யன்.

காந்தி அழகிரி, துரை தயாநிதி ஆகியோர் கோர்ட்டில் கனிமொழியைச் சந்தித்தனர். 'அண்ணி...’ என அடக்க மாட்டாமல் கனிமொழி விசும்ப, அவரைத் தோளில் சாய்த்துத் தேற்றினார் காந்தி அழகிரி. இதற்கிடையில், ஸ்டாலின் சொல்லி அனுப்பிய ஆறுதலும் கனிமொழிக்கு ஆறுதல் வார்த்து இருக்கிறது.

23-ம் தேதி காலையிலேயே டெல்லி கிளம்பிய கருணாநிதி, திஹாருக்குப்போய் கனிமொழியைச் சந்தித்தார். அங்கே கனிமொழி சில விஷயங்களை வேதனையோடு சொல்லிக் கலங்க,'நான் இங்கேயே தங்கிடவாம்மா?’ என தழுதழுத்திருக்கிறார் கருணாநிதி. விழிகள் துடைத்து தன்னைத்தானே தேற்றிக்கொண்ட கனிமொழி, 'நீங்க கிளம்புங்கப்பா... நான் பார்த்துக்கிறேன். ஆதித்யனை கவனிச்சுக்கங்க!’ எனச் சொல்லி இருக்கிறார்.எப்போதும் இல்லாத அளவுக்கு டெல்லியில் தற்போது 42 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக அனல் அடிக்கிறது. மகள் படும் துயரம் பொறுக்காமல் கருணாநிதி எத்தகைய முடிவையும் எடுப்பார் என்கிற நிலையில், டெல்லியின் அனல் இன்னும் அதிகமாகலாம்!
நன்றி- ஆனந்தவிகடன்

23 மே, 2011

புத்தம் புதியதோர் இராம கதை.....!

முப்பத்தொரு ஆசனங்கள் மட்டும்
முழுமையாய்க் கிடைக்கப் பெற்று
ஒப்பரும் பதவியைத் துறந்து
ஓதரும் கலைஞர் சென்றார்

கட்டிய காவியோடு அன்னார்
கால்நடை ஆகச் செல்ல
கனிமொழி கண்ணீர் சிந்தி
கதாநாயகன் பின்னே செல்ல
சண்டையிட்ட மைந்தர்களும்
சரிவரப் பின்னே செல்ல
உற்ற நல் மனைவி மாரும்
உளம் நொந்து வழி அனுப்ப
காவியம் பாடிய கவிஞர் எல்லாம்
கண்ணீர் சொரிந்து நிற்க
சோனியா அம்மையாரும் இதை
சோர்வுற்று பார்த்து நிற்க
புத்தம் புதியதோர் இராமகாதை
புவி மீது அரங்கேறிற்றன்றோ?

இப்படித் தீர்ப்பை மக்கள்
இணைத் தொன்றாய் அளிப்பாரென்று
கற்பனைக் கனவில் கூட
கண்டிரார் கலைஞர் அன்றோ?
விதி இது இதனை வெல்ல
வேறெந்த வழியுமில்லை யென்று
அன்பழகனாரும் ஆசிகள் கூறிச் செல்ல
விடுதலைச் சிறுத்தைகளும் கூடி
விரைந்திவர் பின்னே செல்ல
பாட்டாளி மக்கள் கட்சி
பரிதவித்து தவறி ஏங்க
காவிய நாயகன் கலைஞரின்
காப்பியம் முடிந்ததன்றோ?
வெற்றிப் புயலில் சிக்கி
வென்ற வீர அம்மை கேள்மின்!
உண்மையில் இக்காதை உமக்கு
உவப்பான பாடம் சொல்லும்
எதிர்ப் புறத்து வீற்றிருந்த வண்ணம்
எதை எதையோ பேசி விட்டீர்
ஆட்சியை கையில் தாரும்
அசத்தியே காட்டுவேன் நான்
பசிப்பிணி பஞ்சம் நோய்கள்
பாழ்பட்ட வறுமை இனி இங்கில்லை
இலஞ்சமும் ஊழலும் இனி இல்லையென
உரத்து நீர் உறுதி சொன்னீர்
ஈழத்தீர் அஞ்ச வேண்டாம்
இடரினி உமக்கு இல்லை
அற்புத அமைதி பூக்குமிங்கு
ஆட்சியார் அனைத்தும் தந்து
வன்செயல் அற்ற நாடாய்
வான் புகழ் ஈழம் காண்பீர்
இப்படிப் பேசிப் பேசி நீரும்
இணையிலா வெற்றி பெற்றீர்
அண்மையில் கதையை மாற்றி
மாநில அரசால் எதுவுமாகாது
மத்திய அரசே இதனை நன்கு
மனதினில் கொள்ள வேண்டும்
இப்படிக் கதையை மாற்றி
இனிமையாய் பேசி விட்டீர்
கெட்டிக்காரன் புழுகு எல்லாம்
எட்டு நாளில் கலைந்தே போகும்
அம்மையே மண் குதிரையாக
ஆற்றினில் கரைந்து போகாதீர்
உண்மையில் தேர்தல் பேச்சு
உருப்படி ஆவதில்லை
நிலமகள் தென்றல் வானம்
நீள் புவி உமது பேச்சை
கேட்டது இதனை நீரும்
மறந்திட முடியுமோ சொல்
ஆதலால் குடிகாரன் பேச்சு
விடிந்தால் போச்சு என்று
நம்மவர் எண்ணும் வண்ணம்
நடந்திடில் நீதி கொல்லும்.

நன்றி விகடகவி

22 மே, 2011

மங்காத்தா பாடல் தரையிறக்கிகொள்ள

நேற்றைய தினம் வெளியான அஜித் இன் மங்காத்தா திரைப்படத்தின் பாடலை தரையிறக்கிகொள்ள இங்கே கிளிக்குங்கள்

20 மே, 2011

கனிமொழி ,சரத்குமார் ரெட்டி கைது

ஸ்பெக்ட்ரம் வழக்கில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மகளும், திமுக மாநிலங்களவை

உறுப்பினருமான கனிமொழிக்கு முன் ஜாமீன் வழங்க டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று மறுத்துவிட்டது.

கனிமொழியை நீதிமன்றக் காவலில் அடைக்க, டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஓ.பி.சைனி உத்தரவிட்டார்.

இதையடுத்து, கனிமொழி கைது செய்யப்பட்டு, திகார் சிறையில் அடைக்கப்படுகிறார்.

19 மே, 2011

ஆடுகளம் படத்திற்கு தேசிய விருது,சிறந்த நடிகருக்கான விருது தனுஷ்க்கு

தனுஷுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது: ஆடுகளம் படத்துக்காக பெறுகிறார்!


ஆடுகளம்' படத்துக்காக இயக்குனர் வெற்றிமாறனுக்கு தேசிய விருது: மத்திய அரசு அறிவிப்பு


'மைனா' படத்துக்காக தம்பி ராமையாவுக்கு சிறந்த உறுதுணை நடிகருக்கான தேசிய விருது!

தென்மேற்கு பருவக்காற்று சரண்யா பொன்வண்ணன் - சிறந்த நடிகைக்கான தேசிய விருது

பாடலாசிரியர் :கவிப்பேரரசு வைரமுத்து!

திமுக வின் தோல்விக்கான ஆய்வு அறிக்கை சமர்பிப்பு-மு.க கடும் விசனத்தில்

09 மே, 2011

இவிங்களுக்கு நாங்கள் டெடிகேட் செய்யும் பாடல்கள்

கருணாநிதிக்கு :நேற்று இல்லாத மாற்றம் என்னது பாலு என்காதில் ஏதோ சொன்னது..

தங்கபாலு:நானடிச்சா தாங்கமாட்டே நாலுமாசம் தூங்கமாட்டே

அத்வானி (பி ஜே பி) :கல்லை மட்டும் கண்டால்.... கடவுள் தெரியாது.....

சோனியா.... : மச்சான பாருடி.... மச்சமுள்ள ஆளுடி.... .......

மன்மோகன் சிங் : மௌனமே சாட்சியாய் ஒரு பாட்டு பாட வேண்டும்....

வைகோ : தென்பாண்டி சீமையிலே.... தேரோடும் வீதியிலே... மான்போல வந்தவனே.... யாரடிச்சாரோ .....

ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் : கண்ணை நம்பாதே ... உன்னை ஏமாற்றும்.... நீ காணும் காட்சி உண்மை இல்லாதது...

கீ. வீரமணி....: அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.... இந்த நாள் அன்று போல் இன்பமாய் இல்லையே....நண்பனே....நண்பனே...

சுப்ரமணியம் சுவாமி : என்கிட்டே மோதாதே.... நான் ராஜாதி ராஜனடா...

டாக்டர் ராமதாஸ் : பச்சை புள்ள அழுதுதுன்னா பால கொடுக்கலாம்..

ரஜினிகாந்த் : ஊர தெரிஞ்சுகிட்டேன்... உலகம் புரிஞ்சிகிட்டேன்...

சி பி ஐ : ராஜாத்தி....ராஜாத்தி... அட்ரஸ் என்ன கண்டுபிடி...ராவோடு ராவாக...
அள்ளி வர நாங்க ரெடி...

ஜெயலலிதா : எடுத்த சபதம் முடிப்பேன்.....

கனிமொழி & ராஜா : நாலு பக்கம் வேடருண்டு....நடுவினிலே மான் இரண்டு ....கூடல்...கொஞ்சம் ஊடல்...

பொதுஜனம் : அந்தி மழை மேகம்..........எங்களுக்கும் காலம் வந்ததென்று பாடும் .......திருநாளாம்.....