21 ஏப்ரல், 2012

மூன்றெழுத்தின் என் மூச்சிருக்கும்

வாழ்வின் முதன் முதலாய் - நீ
எனை அள்ளி அணைத்த கணம்
உனை தூரவே உதறி எறிந்தேன்

கால்கள் தரை தட்டாமல்
நொண்டிக்குதிரையாடிய கணங்கள்
உன்னில் கோபம் கொண்டேன்

உன் அருகாமை மெளனங்களில்
முத்தமிட்டு உனை நனைத்த வேளையிலே
நான் வயசுக்கு வந்த நாள் அறிந்தேன்
முப்பொழுதும் சொப்பனங்கள்
இண்டர்நெட்டில் அப்படங்கள்
கண் மூடி மையல் கொள்ளும்
கதிரவன் மறைந்த நேரம்
காரிருள் கரைபுரண்டோடும்
காரிகை காட்சி தெரியும்வேளை - உன்
முத்தங்கள் சத்தமின்றி செய்யும் யுத்தங்கள்!

அணைப்புகளில் திமிறினாலும்
ஆர்வங்களில் எகிறினாலும்
காமங்களில் விசிறினாலும்
கந்தர்வ காதலில் கூடுகையில்
உன்னை கன்னி கழித்திருக்கிறேன்

நெரிசலான பேரூந்து பயணங்களில்
நீயே என கவசகுண்டலமாய்
திண்மையை திரைமறைப்பதில்
கிருஷ்ணனாகி மானம் காக்கிறாய்

அடங்கியிருந்த ஆர்ப்பலைகள்
ஆசைகொண்டு ஆர்ப்பரிக்கையில்
அடைமழையில் நீ நனைந்து
நீர்மட்டம் குறைக்கிறாய்!
வெள்ளைப்பூக்கள் வெண்மை கொண்டு
நீ என்னை அலங்கரிக்கையில்
மனதின்  கறுப்பான களங்கங்களையும்
கழுவிப்போய்விடுகிறாய்
408260_2577582036999_1177822838_32209583_844903673_n
விட்டுக்கொடுத்து வாழ்தலில் பிடிமானமும்
ஆர்வத்தை அடக்கி ஆளுதலில் நோயின்மையும்

வாழ்க்கையின் தத்துவமே நீயாகி


மூன்றெழுத்தில் உன் மூச்சிருக்கும்
அது முடிந்த பின்னாலே நாறடிக்கும்!

எக்கசியப்பணாய்க்கு மூன்றென்று கூவுவார்
எந்திரன் கூட ஒருகட்டத்தில் போடுவார்!
என் இனிய ஜக்கி!
உன்னில் உயர் சாதி ஜாக்கி!
உந்தன் ஒரே பெயர் ஜட்டி ஜட்டி ஜட்டி!

3 கருத்துகள்:

இலங்கைத்தமிழன் சொன்னது…

எப்பிடித்தான் இப்படியெல்லாம் யோசிக்கிரீன்கள் ? ஏற்கனவே படலையில் விட்டு output பார்த்துவிட்டுத்தான் சொந்த blog இல் பதிவேற்றியாச்சு

மன்மதகுஞ்சு சொன்னது…

ஓமோம் அது உடனேயே எழுதி போட்டது,இப்போ இங்கே போட்டிருக்கிறேன்,எல்லோரையும் போல அல்லாமல் கொஞ்சம் வேற கோணத்தில சிந்திச்சு பார்க்க வேண்டியதுதான்

ம.தி.சுதா சொன்னது…

/////முத்தங்கள் சத்தமின்றி செய்யும் யுத்தங்கள்! /////

இப்படியெல்லாம் சொல்லி கடைசீல கவுத்துப் புட்டீரே...

அருமைங்க...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எழுத்தாளர் ஜெயமோகனுக்கு இந்திய ராணுவம் பற்றி ஈழத்திலிருந்து ஒரு ஆதார மடல்