கழியும் நாழிகைளில்
கடைக்குட்டி தேசம் கூட
உன் கழுகுப்பார்வையில்
தப்பாது
மைய அச்சில் சுத்தும்
தேசமாய் நீ-உன்
கட்டளையில் சுருண்டு
கிடக்கும் நாய்குட்டி நாம்.
உலக கொள்ளைக்காரரின்
குடியேற்றமே
கண்டம் தாண்டியும்
கல்லா கட்டும் உன் ஆதிக்கமே\
கறுப்பு வெள்ளை
காய்களாய் சிட்டிசன்கள்
ஆட்டுவிக்கும்
ராணியாய் ஆட்சியாளர்கள்
நீங்களே உத்தமர்களாய் உலகிற்கு எம தர்மர்களாய்
செத்தாலும் விடமாட்டீர்
,பூத உடலை தரமாட்டீர்
ஊருக்கு உபதேசம்
செய்வீர் உமக்கென்று வந்துவிட்டால்
சிமபிளாய் ஒரு
வார்த்தை சொல்வீர் “அப்பலொஜீஸ்”
காரியதரிசியயே
முட்டி போட வைத்த காதல்
தீவிரவாதி
ஒசாமை போட்டுத்தள்ளிய நீ உலக பயங்கரவாதி
எதிரியை சில்லம்
சில்லமாய் உடைக்கும் தந்திரவாதி
தூக்கம் தொலைத்து
உலகை காக்கும் மந்திரவாதி
ஊருக்கொன்றாய் ஒரு பிகர் கொடுத்தான்
நீ உலக்குக்கே
ஒரே ஒரு பிகர் கொடுத்தாய்
அடிச்ச காத்தில மர்லின்
கிளப்பின பாவாடை
மன்மத அம்பாய் பாய்ந்த
பூவாடை கோடி
அந்த கோடியில் உன் கெனடியும் ஒரு
கேடி.
சண்டையென்று வந்தாலும்
சமாதானம் சொன்னாலும்
அட்டவணை தந்து
அதன்படி ஒழுகவைத்தாய்
எட்டி உதைத்தவனை
எங்கு சென்றாலும் ஓட வைத்தாய்
பற்றி உன் கால்
பிடித்தவனை பகட்டாய் வாழவைத்தாய்
போற்றீ புகழ் பாடதவனை
போட்டுத்தள்ள் பிளான் போட்டாய்
ஆண் பெண் புணர்தல் இயற்கையென்றூ
இறைவன் கலைகளில்
வரைந்து வைத்தான்
ஓரினமும் சேரலாமென்று
சட்டம் நீ இயற்றீ வைத்தாய்.
கந்தர்வ காதலை
இலைமறை காயாய்
புராணங்களில் ஓதி
வைத்தோம்
கந்தர்வமே வாழ்க்கையென்று
விதி ஓத வழி சமைத்தாய்
வஞ்சினம் கொண்டு
நீ வரும் வேளை
பயந்து பதுங்கி
வழிவிடும் எம் பாதை
செங்கோல் கொண்டு
நீ செய்யும் ஆட்சி
பல தேசங்களின்
சுயநிர்ணயத்தின் வீழ்ச்சி.
கத்துவீரோ ,கல்லெறிவீரோ
கடைத்தெருவில்
குண்டுவைப்பீரோ
கைப்பிள்ளைகளாய்
எம் கழுத்து நெரிக்கபடுகையில்
கட்டதுரையே உன்
கொற்றம் வாழி என
உன் கைப்பொம்மை
கைகட்டி வாய்பொத்தி
காலம் காலமாய்
விளக்குபிடித்து காவல் காக்கும்.
பூத்த புது மலராய்
தேசமிருந்தால்
தேனுண்டு நீ கழிக்க
நாள் பார்ப்பாய்
வண்டு அனுப்பி
வேவு பார்த்து
பொய் தோற்றம் காட்டிவிட்டு
போர் தொடுப்பாய்
அபிவிருத்தி எண்டு
சொல்லி ஆகாரம் ஊட்டுவாய்
நாக்கு இழந்த நமக்கு
நாலு சுவை கலந்தளிப்பாய்.
அப்பன்காரன் வெப்பனோட
மத்தியகிழக்கை ஆண்டான்
மகனோ மணல் தேசம்
சென்று மலையெல்லாம் குடைந்தான்
செருப்பு தைத்தவரும்
தலைவராகலாம்
செருக்கு மிகுந்தவனும்
உலகை ஆளலாம்.
சட்டம் உன் விரல்களின்
நுனிமுனையில்
உன் கையெழுத்தில்
உலக தேசமே
ஒளிமங்கி மண்ணாகிப்
போகும் உன் வினையில்
சின்னப்பையன் கொண்டு
நீ போர் முடித்தாய்
என்ன பயன் கண்டு
நீ முள்ளிவாய்க்காலில்
முதலை கண்ணீர்
வடித்தாய்..
கப்பல் வருமெண்டு
சொல்லி
கடல்கரைக்கு வரவழைத்தாய்
கண்கள் வரை வெள்ளம்
வந்து
கடவுளாய் உனை நோக்கி
கூவிய வேளை
கண்டிசன் போட்டு
கதை முடித்தாய்.
வருவாரோ எமை காப்பாரோ
உரிமை பெற்று கொடுப்பாரோ
ஏங்கி ஏங்கி நாம் விழிவைத்து காத்திருக்க
வியாபாரம் தொடங்கினாய்
மீன்சந்தையில்
குற்றுயிர் மீன்களாய்
எம் உரிமை செத்துகிடக்கிறது.
1 கருத்து:
பூத்த புது மலராய் தேசமிருந்தால்
தேனுண்டு நீ கழிக்க நாள் பார்ப்பாய்
வண்டு அனுப்பி வேவு பார்த்து
பொய் தோற்றம் காட்டிவிட்டு போர் தொடுப்பாய்
அபிவிருத்தி எண்டு சொல்லி ஆகாரம் ஊட்டுவாய்
நாக்கு இழந்த நமக்கு நாலு சுவை கலந்தளிப்பாய்.
அருமையான வரிகள் மச்சி ... இன்னும் நிறைய எழுது ..
கருத்துரையிடுக