30 மார்ச், 2011

இந்திய அணி வெற்றிபெற்றால் அரங்கை நிர்வாணமாக சுற்றி வருவேன் மொடல் அழகி கூறுகிறார்


உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்காக உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், கவர்ச்சி மொடல் அழகியும் கிரிக்கெட் ரசிகையுமான பூனம் பாண்டே என்பவர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றெடுத்தால் விளையாட்டரங்கு பூராவும் நிர்வாணமாக சுற்றிவருவதற்குத் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.இதனை ஸ்பைஸ்சீ.கொம்மை மேற்கோள்காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மொடல் அழகி இணையத்தில் அதிகளவு தொகையினரால் தரவிறக்கிப் பார்க்கப்படுபவராகும். இந்திய அணி வெற்றிபெறுவதற்காக அவர் இதனைக் கூறுவதாக இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பனை அறைக்குள் ஆடைகளைக் களைவதைப் பற்றித் தான் பொருட்படுத்தவில்லை என்று பூனம்பாண்டே கூறியுள்ளார். அத்துடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அனுமதித்தால் விளையாட்டரங்கின் முன்னால் நிர்வாணமாகச் செல்வதற்கும் தான் தயாராகவிருப்பதாக அவர் கூறியுள்ளார். பிரபல்யம் தேடுவதற்காகத் தான் இதனைச் செய்யப்போவதில்லை எனவும் ஆனால், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடுவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே தான் இதனைச் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேஸ்புக்கில் விசிறிகளுக்கான பக்கமொன்றையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

இந்த மாதிரியான கருத்தைத் தெரிவித்த முதலாவது ஆள் பூனம் மட்டுமல்ல, பராகுவேயின் லாரிஸ்ஷா றிக்குவல்மி மற்றும் ஆர்ஜென்ரீனாவின் லூசியானா சலாஸர் ஆகிய மொடல் அழகிகளும் தத்தமது உதைபந்தாட்ட அணிகள் பீபா உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்றால் தாங்கள் நிர்வாணமாகச் செல்வார்களென உறுதியளித்திருந்தனர்.

இதென்ன புதுசா இருக்கு...

கர வருட இராசி பலன்கள் - சித்திரை 2011 - 2 வது தொடர்ச்சி

கடகம்


புனர்பூசம் 4ஆம் பாதம், பூசம், ஆயில்யம்

பொறுமைசாலிகள் நீங்கள். உங்களது ராசிக்கு தன வீடான 2-ல், கர புத்தாண்டு பிறப்பதால், பேசியே காரியம் சாதிப்பீர்கள். அலட்சியப்போக்கு மாறும். 8.5.11 வரை 9-ஆம் வீட்டில் குரு இருப்பதால் பண வரவு திருப்திகரமாக இருக்கும். குடும்பத்தில் உங்கள் பேச்சுக்கு மதிப்பு கூடும். பழைய கடன் பிரச்னைக்குத் தீர்வு காண்பீர்கள். வீட்டில் சுபகாரியங்கள் தடபுடலாக நடந்தேறும். கணவன்- மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். 9.5.11 முதல் குரு 10-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் வீண் பழி, கௌரவக் குறைவு, உத்தியோகத்தில் வேலைப்பளு, இடமாற்றம் வரக்கூடும். சித்திரை, வைகாசி மாதங்களில் திருமணம் கூடி வரும். வருமானம் உயரும். ஆனி, ஆடி மாதங்களில் திடீர் செலவும், அலைச்சலால் உடல்நிலை பாதிப்பும் ஏற்படலாம்.

புத்தாண்டு பிறக்கும்போது கேது 12-ஆம் வீட்டில் நிற்பதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ராகு 6-ஆம் வீட்டில் நிற்பதால் கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வழக்கில் வெற்றியுண்டு. 16.5.11 முதல் கேது லாப வீட்டுக்குள் வருவதால் ஷேர் மூலம் பணம் வரும். திடீர் யோகம் உண்டு. சொத்துச் சிக்கல்கள் பேச்சு வார்த்தைகளால் சரியாகும். 16.5.11 முதல் ராகு 5-ஆம் வீட்டுக்குள் வருவதால் பிள்ளைகளால் வீண் அலைச்சலும், மன உளைச்சலும் வரக்கூடும். சொந்தபந்தங்களுடன் மோதல் போக்கு ஏற்படலாம். சிலர் வீடு- இடமாற்றம் செய்வார்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

20.12.11 வரை சனி பகவான் 3-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால் சொத்துச் சேர்க்கை, பெரிய பதவிகள் கைகூடும். பிரபலங்களது நட்பு கிடைக்கும். எதிர்பாராத பண வரவு உண்டு. வெளிநாடு சென்று வருவீர்கள். தெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். 21.12.11 முதல் சனி 4-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் தாயாரின் உடல்நிலை பாதிக்கும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வரக்கூடும். வாகனம் பழுதாகும். ஒரு சொத்தைக் காப்பாற்ற மற்றொரு சொத்தை விற்க வேண்டி வரும். அரசு வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். எவருக்கும் பணம் நகை வாங்கித் தருவதில் ஈடுபடவேண்டாம். பொய் சொல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டாலும் தவிர்த்துவிடுங்கள்.

குடும்ப ரகசியங்களை வெளியாட்களிடம் சொல்ல வேண்டாம். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

10.9.11 முதல் 3.11.11 வரை பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். நீங்களும் சோர்வாகக் காணப்படுவீர்கள். கார்த்திகை, தை, மாசி மாதங் களில் சில சவால்களைச் சந்திப்பீர்கள்.

கலைஞர்களே, சின்ன சின்ன தடுமாற்றங்கள் இருந்தாலும் புகழ் கூடும். சம்பளப் பாக்கி கைக்கு வரும். அரசால் அனுகூலம் உண்டு.

கன்னிப் பெண்களே, உயர்கல்வியில் வெற்றி உண்டு. எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலையும் கிடைக்கும். வருட பிற்பகுதியில் திருமணம் முடியும். மாணவர் கள், படிப்பில் அக்கறை காட்டுவது நல்லது. கணிதம், மொழிப் பாடங்களில் அதிகக் கவனம் தேவை.

வியாபாரம்: வைகாசி, ஆவணி மாதங்களில் சொந்த இடத்துக்கு கடையை மாற்றுவீர்கள். வியாபார ஸ்தலத்தை விரிவுபடுத்தவும் முயற்சிப்பீர்கள். பழைய சரக்குகளை அசல் விலைக்கே விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாட்களிடம் கண்டிப்பு வேண்டாம். எவருக்கும் அதிக முன்பணம் தரவேண்டாம். மார்கழி, பங்குனி மாதங்களில் புதிய ஒப்பந்தங்கள் தேடி வரும். கூட்டுத்தொழிலில் பிணக்குகள் விலகும். புது பங்குதாரர்களை சேர்ப்பீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும்.

உத்தியோகம்: உங்களைப் பற்றி அவதூறாக கடிதங்கள் வரக்கூடும். ஆடி மாதம், உங்களுக்கு ஆதரவான உயர் அதிகாரி வேறு இடத்துக்கு மாற்றப்படலாம். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும்.

ஆவணி, புரட்டாசி மாதங்களில் பெரிய பொறுப்புகள் உங்களைத் தேடி வரும். மார்கழி மாதத்தில் சம்பளம் உயரும்.

கணினித் துறையினருக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். புது வாய்ப்புகளை தேர்ந்தெடுப்பதில் அவசரம் வேண்டாம்.

மொத்தத்தில் 'கர’ புத்தாண்டு, வெள்ளந்தியான உங்களுக்கு, சந்தர்ப்பச் சூழலுக்கு ஏற்றாற்போல் பேசும் யுக்தியைக் கற்றுத் தருவதாக அமையும்.

சிம்மம்


மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம்

கொடுக்கும் குணம் கொண்டவர் நீங்கள். சுக்கிரன் உங்கள் ராசியைப் பார்த்துக்கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால், அடிப்படை வசதிகள் பெருகும். கல்யாணத் தடைகள் நீங்கும். பழைய வாகனத்தை மாற்று வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். ஆனால் உங்கள் யோகாதிபதிகளான செவ்வாயும், குருவும் 8-ல் மறைந்திருக்கும் நேரத்தில் புத்தாண்டு பிறப்பதால், எவருக்காகவும் சாட்சிக் கையெழுத்து போடாதீர்கள். வீண் செலவுகளையும் தவிர்ப்பது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செயல்படுங்கள்.

கேது 11-ல் நிற்பதால் ஷேர் மூலம் பணம் வரும். தயக்கம் - தடுமாற்றங்கள் நீங்கும். ஆன்மிகவாதிகள் அறிமுகமாவர். பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். குடும்பத்தாருடன் பாசப் பிணைப்பு அதிகரிக்கும். கணவன்-மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். ஆனால், உங்கள் ராசியிலேயே இந்த வருடம் பிறப்பதால் ஆரோக்கியத்திலும் அக்கறை தேவை. குறிப்பாக மக நட்சத்திரக்காரர்கள், அவ்வப்போது சர்க்கரை, கொழுப்பு அளவைப் பரிசோதிப்பது நல்லது. 15.5.11 வரை 5-ல் நிற்கும் ராகுவால் மன அமைதியின்மை, டென்ஷன் வரக்கூடும்.

9.5.11 முதல் குரு 9-ல் நுழைவதால் திடீர் பண வரவு, யோகம், குடும்பத்தில் சந்தோஷம், குழந்தை பாக்கியம் எல்லாம் உண்டு. வீடு-மனை சேர்க்கையுண்டு. சேமிக்கத் தொடங்குவீர்கள். பிள்ளைகளின் எண்ணங்களைப் பூர்த்தி செய்வீர்கள். மகனுக்கு நல்ல வரன் அமையும். வைகாசி, ஆனி மாதங்களில் வீட்டில் சுப காரியங்கள் நடக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு கூடும். தை, பங்குனி மாதங்களில் வி.ஐ.பி-கள் உதவுவர். தங்க நகைகள், புதிய சொத்துகள் சேரும்.

16.5.11 முதல் 4-ல் ராகு நுழைவதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். தாயாருடன் மனஸ்தாபம் வெடிக்கும். 16.5.11 முதல் கேது 10-ஆம் வீட்டுக்குள் வருவதால் உத்தியோகத்தில் எதிர்ப்புகள், திடீர் இடமாற்றம், வேலைச்சுமை, அதிருப்தி வந்து நீங்கும்.

4.11.11 முதல் வருடம் முடியும் வரை, உங்கள் ராசியிலேயே செவ்வாய் நீடிப்பதால், சகோதரர்களுடன் சச்சரவுகள் வரும். வீடு- மனை தொடர்பான வழக்குகளில் அலட்சியம் வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் திடீர் திருப்பங்கள், பண வரவு உண்டு. வேலை கிடைக்கும். வெளிநாடு செல்வதற்கான தடைகள் நீங்கும். மார்கழியில் சிறு விபத்துகள் நிகழலாம். 20.12.11 வரை ஏழரைச்சனி தொடர்வதால் கால் வலி, உடல் அசதி வந்து நீங்கும். நேரம் கடந்து சாப்பிடுவதைத் தவிர்க்கவும். 21.12.11 முதல் 3-ஆம் வீட்டுக்குள் சனி நுழைவதால் எதிலும் வெற்றியுண்டு. மதிப்பு கூடும். புது வீட்டில் குடி புகுவீர்கள். அரசு அதிகாரிகளின் நட்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், விமர்சனத்தைத் தவிர்க்கவும். குலதெய்வக் கோயிலுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள்.

வியாபாரம்: வைகாசி, ஆனி மாதங்களில் அதிரடி லாபம் உண்டு. பாக்கிகளை நாசுக்காகப் பேசி வசூலிப்பீர்கள். பணியாட்கள், வேலையை கச்சிதமாக முடிப்பார்கள். தை, பங்குனி மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். பங்குதாரர்களிடம் வாக்குவாதம் வேண்டாம். மார்கழி, மாசி மாதங்களில் போட்டிகள் அதிகரிக்கும். சிமென்ட், இரும்பு, கடல் உணவு, ரசாயன வகைகள் லாபம் தரும்.

உத்தியோகம்: வேலையில் ஆர்வம் பிறக்கும். ஆனி மாதம், வெளி நிறுவனங்களில் இருந்து வாய்ப்புகள் தேடி வரும். மேலதிகாரிகள் வற்புறுத்தினாலும், நீங்கள் நேர்ப்பாதையில் செல்வது நல்லது. உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். கார்த்திகை, தை மாதங்களில் பொறுப்புகள் தேடி வரும். கணினித் துறையினருக்கு வேலை அதிகமானாலும் ஊதிய உயர்வும் உண்டு.

கலைஞர்களுக்கு, பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும். புதிய வாய்ப்புகள் தேடிவரும். கன்னிப் பெண்களுக்கு மனதுக்கேற்ற கணவன் அமைவார். பெற்றோரின் ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கவேண்டாம். மாணவர்களுக்கு நினைவாற்றல் கூடும். உயர் கல்வியில் வெற்றியுண்டு.

மொத்தத்தில் கர புத்தாண்டு, உடல் உபாதைகளைத் தந்தாலும்... பணப்புழக்கம், செல்வாக்குடன் பதவியையும் பெற்றுத் தருவதாக அமையும்.


கன்னி


உத்திரம் 2,3,4ஆம் பாதம், அஸ்தம், சித்திரை 1,2ஆம் பாதம்

வெள்ளையுள்ளம் கொண்டவர் நீங்கள். குரு பகவான், உங்கள் ராசியைப் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் கர புத்தாண்டு பிறப்பதால் மனத் தெளிவு, பிரபலங்களின் நட்பு கிடைக்கும். 7-ல் குரு நிற்பதால், குடும்பத்தில் நன்மைகள், தம்பதிக்கு இடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். உங்களுடைய விரய ராசியில் புத்தாண்டு பிறப்பதால், அவ்வப்போது கடன் வாங்கும் சூழல் அமையலாம். 9.5.11 முதல் குரு 8-ல் மறைவதால், செலவுகள் அதிகரிக்கும். காரியத்தடை, அலைச்சல், டென்ஷன் இருக்கத்தான் செய்யும். ஆனால், குரு உங்களின் 2-ஆம் வீட்டைப் பார்ப்பதால் பணப் புழக்கமும் உண்டு. சொத்துச் சிக்கல்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்களும் பணத்தைத் திருப்பித் தருவார்கள்.

வருடம் பிறக்கும்போது 6-ஆம் வீட்டில் சுக்கிரன் மறைந்திருப்பதால் குடும்பத்தில் அவ்வப்போது சலசலப்பு இருக்கும். வாகன விபத்தும் வரக்கூடும். 15.5.11 வரை ராசிக்கு 4-ல் ராகு நிற்பதால், தாயாருக்கு மருத்துவச் செலவு, தாய்வழி உறவினரிடையே பகைமை ஏற்படலாம். கேது 10-ல் நிற்பதால்

வேலையில் டென்ஷன், காரியத்தடைகள் வரும். 16.5.11 முதல் ராகு 3-ல் நுழைவ தால் எதிலும் வெற்றியே. புதிய முயற்சிகள் பலிதமாகும். வங்கிக் கடனுதவியுடன் வீட்டைக் கட்டி முடிப்பீர்கள். கேது 9-ஆம் வீட்டுக்குள் நுழைவதால், உத்தியோகப் பிரச்னைகள் குறையும். ஆனால் தந்தையாரின் உடல்நிலை பாதிக்கப்படலாம்.பழைய சொத்தை விற்றுவிட்டு புதிய சொத்து வாங்குவீர்கள். ஆனி, ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் வீட்டில் கல்யாணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகள் நடக்கும்.

20.12.11 வரை ஜென்மச்சனி தொடர்வதால் ஒற்றைத் தலைவலி, மூட்டு வலி, நெஞ்சு எரிச்சல் வந்துபோகும். லாகிரி வஸ்துகளைத் தவிர்ப்பது நல்லது. எவருக்கும் ஜாமீன் கையெழுத்து போட வேண்டாம். 21.12.11 முதல், சனி உங்கள் ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் கூடும்; தாழ்வு மனப்பான்மை விலகும். திடீர் யோகம், பண வரவு எல்லாம் உண்டு. ஆன்மிக பயணத்தால் மன நிம்மதி கிட்டும்.

பிரபலங்களின் நட்பால் புதிய அனுபவங்கள் கிடைக்கும். வெளிவட்டாரத்தில் மதிப்பு உயரும். கௌரவப் பதவி கிடைக்கும். அரசு காரியங்களில் வெற்றியுண்டு. வழக்குகளில் தேக்க நிலை மாறும்.

கன்னிப் பெண்களுக்கு ஆவணி, கார்த்திகை மாதங்களில் கல்யாணம் கூடிவரும். மாணவர்கள், படிப்பில் கவனம் செலுத்துவது அவசியம். உங்கள் திறமையை வெளிக்கொண்டுவர முயற்சி செய்யுங்கள்.

வியாபாரம்: ஆவணி, புரட்டாசி மாதங்கள் போராட்டமாக இருக்கும். ஆனி, ஆடி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய யுக்திகளால், பழைய பாக்கிகளை வசூலிப்பீர்கள் ஐப்பசி, கார்த்திகை மாதங்களில் கடையை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். வாடிக்கையாளர்களது எண்ணிக்கை உயரும். பணியாட்களிடம் கறாராக இருங்கள்.

மாசி மாதத்தில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். உணவு, கெமிக்கல், பிளாஸ்டிக், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் ஆதாயம் பெருகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தாலும் நிதானத்தைத் தவறவிடாதீர்கள்.

உத்தியோகம்: சித்திரை, வைகாசி, புரட்டாசி மாதங்களில் வேலைச்சுமை அதிகரிக்கும். ஆனி மற்றும் மாசி மாதத்தில் பணியில் உயர்வு உண்டு. உங்களைத் தரக் குறைவாக நடத்திய அதிகாரிகளின் மனம் மாறும். சக ஊழியர்களுடைய சம்பள உயர்வுக்காகவும் போராடுவீர்கள். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களில் இருந்து வேலைவாய்ப்பு தேடி வரும்.

கணினித் துறையைச் சேர்ந்தவர்களுக்கு அதிக சம்பளத்துடன் புதிய வேலை கிடைக்கும்.

கலைஞர்களே, உங்களைக் குறித்து வீண் வதந்திகள் கிளம்பும். என்றாலும் சோதனைகளைக் கடந்து எல்லாவற்றிலும் சாதித்துக் காட்டுவீர்கள்.

மொத்தத்தில் இந்த கர புத்தாண்டு, செலவுகளாலும் பயணங்களாலும் உங்களை அலைக்கழித்தாலும், பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி காணும் சூட்சுமத்தைக் கற்றுக்கொடுப்பதாக அமையும்.

நன்றி : சக்தி விகடன்

"ஜோதிட ரத்னா" கே.பி.வித்யாதரன்

29 மார்ச், 2011

கர வருட இராசி பலன்கள் - சித்திரை 2011

மேட ராசி
அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்

புத்திக்கூர்மை மிகுந்தவர் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பதால், மனச் சோர்வு நீங்கும்; உற்சாகம் பெருகும். பண வரவு திருப்தி தரும். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் கர புத்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு.

வீட்டில் தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் ஆனி- ஆவணியில் கைகூடி வரும். மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு லோன் கிடைக்கும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். 9.5.11 முதல், ஜென்ம குரு வருவதால், உடல்நலம் பேணுவது அவசியம். வயிற்றுக் கோளாறு, தலைச் சுற்றல், மஞ்சள்காமாலை வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

15.5.11 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையின் உடல்நலம் பாதிக்கலாம்.வருடம் பிறக்கும்போது கேது 3-ல் நிற்பதால், சவால்களை சமாளிப்பீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். 16.5.11 முதல், ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் சந்தேகம் வேண்டாம். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும்.

சனி பகவான், 20.12.11 வரை 6-ஆம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உதவுவர். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். நீண்டநாள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள்.

ஐப்பசி, கார்த்திகையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் வீட்டை விரிவுபடுத்தலாம். ஐப்பசி மாத மத்தியப் பகுதியில் இருந்து பங்குனி வரைக்கும், ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் சாப்பிட வேண்டாம்.

மார்கழியில் அரசு விவகாரங்களில் கவனம் தேவை. தை, மாசி மாதங்கள் யோகம் தரும். திடீர் பண வரவு, புது வாகனம் அமையும். திருமணம் கைகூடும். அரசியல்வாதிகள், தலைமையை பகைத்துக்கொள்ள வேண்டாம். குடும்ப ரகசியங் களை வெளியில் சொல்லாதீர்கள்.

கன்னிப் பெண்களே, புதிய நண்பர்களிடத்தில் கவனமாக இருங்கள். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாதவிடாய்க்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.

கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை அளியுங்கள். மாணவர்கள், எதிலும் அலட்சியத்துடன் செயல்படாதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல கல்வி நிறுவனத்தில், நீங்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும்.

வியாபாரம்: ஏற்ற- இறக்கங்கள் உண்டு. வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களிடம் கனிவுடன் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கைகூடும். கணினிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றம் கிடைக்கலாம். மேலிடத்திலிருந்து நெருக்கடிகள் அதிகரிக்கும். கணினித் துறையினர், புதிய வாய்ப்புகளை பலமுறை யோசித்து ஏற்பது நல்லது.

இடபம்

கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்

திறமைசாலிகள் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன்கள் தீரும். குடும்ப வருமானம் உயரும். குரு பகவான் 8.5.11 வரை 11-ஆம் வீட்டில் நிற்பதால் ஓரளவு நிம்மதி, திடீர் பண வரவு உண்டு. 9.5.11 முதல், 12-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் விரயச் செலவுகளும் சுபச் செலவுகளும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 8-ஆம் வீட்டிலும் கேது 2-ஆம் வீட்டிலும் நிற்பதால், தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், பேச்சால் பிரச்னைகள் எழலாம். எனவே, நிதானித்துப் பேசுவது நல்லது. 16.5.11 முதல், கேது ராசிக்குள் நுழைவ தால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். உணவு முறையில் கவனம் தேவை. ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் வரக்கூடும். கணவன்- மனைவிக்கு இடையே சிலர் கலகம் மூட்டலாம். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை, வைகாசியில் அலைச்சல், சிறு சிறு ஏமாற்றம், காய்ச்சல்,சளித்தொந்தரவு ஏற்படலாம். அரசு காரியங்களில் அவசர முடிவு வேண்டாம். ஆனி,ஆவணி மாதங்களில் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைஅமைத்துத் தருவீர்கள்.அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும்பணி முழுமைஅடையும்.

கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்

திறமைசாலிகள் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன்கள் தீரும். குடும்ப வருமானம் உயரும். குரு பகவான் 8.5.11 வரை 11-ஆம் வீட்டில் நிற்பதால் ஓரளவு நிம்மதி, திடீர் பண வரவு உண்டு. 9.5.11 முதல், 12-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் விரயச் செலவுகளும் சுபச் செலவுகளும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 8-ஆம் வீட்டிலும் கேது 2-ஆம் வீட்டிலும் நிற்பதால், தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், பேச்சால் பிரச்னைகள் எழலாம். எனவே, நிதானித்துப் பேசுவது நல்லது. 16.5.11 முதல், கேது ராசிக்குள் நுழைவ தால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். உணவு முறையில் கவனம் தேவை. ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் வரக்கூடும். கணவன்- மனைவிக்கு இடையே சிலர் கலகம் மூட்டலாம். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை, வைகாசியில் அலைச்சல், சிறு சிறு ஏமாற்றம், காய்ச்சல்,சளித்தொந்தரவு ஏற்படலாம். அரசு காரியங்களில் அவசர முடிவு வேண்டாம். ஆனி,ஆவணி மாதங்களில் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைஅமைத்துத் தருவீர்கள்.அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும்பணி முழுமைஅடையும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம்

கடின உழைப்பாளி நீங்கள். உங்களுடைய ராசிநாதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் வேளையில் கர புத்தாண்டு பிறப்பதால் தொட்டது துலங்கும். பிரச்னைகள் நீங்கும். உழைப்புக்கேற்ற பலன் உண்டு. உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பண பலம் கூடும். குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

குரு பகவான் 9.5.11 முதல் 11-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பணப் புழக்கம் திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இழுபறியான வேலைகள், சித்திரையில் முழுமை பெறும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் வாய்க்கும். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், இளைய சகோதரர் உதவுவார். 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால், டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், வீண் பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், தம்பதிக்கு இடையே கசப்பு உணர்வு ஏற்படும். சிலருக்கு திருமணம் தள்ளிப்போகும்.

16.5.11 முதல், கேது ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் மேம்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும். வைகாசி, ஆனி மாதங்களில் நெஞ்சு வலி, மூட்டு வலி, ரத்த சோகை, அசதி வந்து

போகும். உடன்பிறந்தவர்களுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். ஆவணி மாதம் அந்தஸ்து உயரும். சொத்து விஷயத்தில் அனுகூலம் உண்டு. ஆடி மாதத்தில், தந்தையுடன் வீண் வாக்குவாதம், அரசுடன் மோதல், விரயச்செலவுகள் ஏற்படலாம்.எனினும் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால் வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. சொத்து வாங்க நினைப்பவர்கள் தாய் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால் பூர்வீகச் சொத்துகளில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் கோபத்தைத் தவிர்க்கவும். 24.7.11 முதல் 9.9.11 வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால் வேலை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவர். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்- கெட்டவரை அறிந்துகொள்வீர்கள்.

புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும்... எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆடை- அணிகலன்கள் சேரும். உங்களால் வளர்ந்தவர்கள் இப்போது உதவுவர். கார்த்திகை மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும் அண்டை- அயலாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களின் கனவு நனவாகும்; கல்யாணம் கைகூடும். மாணவர்களுக்கு, நினைவாற்றல் பெருகும். கெட்ட சகவாசம் விலகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம்: பற்று- வரவு உயரும். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடு களால் போட்டியாளர்களை திக்குமுக்காடச் செய்வீர்கள். பாக்கிகள் எளிதில் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். கெமிக்கல், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: மேலதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகள் தேடி வரும்.கலைஞர்களுக்கு, அரசால் கௌரவம் கிடைக்கும்.உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

மொத்தத்தில் கர புத்தாண்டில், சனி பகவான் சில சங்கடங்களைத் தந்தாலும், குருவின் திருவருளால் எதிர்பாராத முன்னேற்றமும், அந்தஸ்தும் கிட்டும்.

மிகுதி நாளை தொடரும்...

நன்றி சக்தி விகடன்

"ஜோதிட ரத்னா" வித்யாதரன்

எவண்டி உன்னைப்பெத்தான்... அனுஸ்கா பர்போமன்ஸ் .. நாலு நாளா துங்கல நானும்..

வெள்ளைப்புறா ஒன்று ஏங்குது என்னைக்காணாமலே... 18 +

இது நியுஸிலாந்தின் ஒடாகோ மத்திய பகுதியில் காணப்படும் ஒரு இடம். கார்ட்ரோனா பிரா வேலி என்று தற்போது இந்த இடம் அழைக்கப்படுகின்றது.

1999ம் ஆண்டுக் கடைசியில் கிறிஸ்மஸுக்கும் புத்தாண்டுக்கும் இடைப்பட்ட காலப் பகுதியில்தான் இங்கு பிராக்களைத் தொங்கவிடும் இந்தப் பழக்கம் ஆரமபமானது.
வீதி ஓரமாக அமைந்துள்ள இந்த நீளமான வேலியில் முதலில் நான்கு பிராக்கள் தொங்கவிடப்பட்டிருந்தன. 2000 மாம் ஆண்டு இறுதியில் இதன் எண்ணிக்கை 60 ஆக அதிகரித்தது

அப்போது யாரோ ஒருவர் இவற்றை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்.இந்த பிராக்கள் அப்புறப்படுத்தப்பட்டமை தெடர்பாக உள்ளூர் பத்திரிகைகளில் செய்தி வெளியானது. உடனே மீண்டும் இங்கு பிராக்கள் வந்து குவிய ஆரம்பித்துவிட்டன.

யார் எதற்காக இங்கு முதன்முதலாக பிராவைத் தொங்கவிட்டார். இதன் நோக்கம் என்ன? என்று இதுவரை எந்தத் தகவலும் இல்லை. ஆனால் நாளுக்குநாள் வண்ண வண்ணமான விதவிதமான பிராக்கள் வந்து சேருகின்றன.

இங்குள்ள பிராக்களின் எண்ணிக்கை 2006ல் 800த் தாண்டியபோது அவற்றுள் சில அப்புறப் படுத்தப்படடன, ஆனால் மீண்டும் அதை விட பல மடங்கு மளமளவென்று வந்துத் தொங்க ஆரம்பித்துவிட்டன.

இங்குள்ள பிராக்களின் எண்ணிக்கை 2006ல் 800த் தாண்டியபோது அவற்றுள் சில அப்புறப் படுத்தப்படடன, ஆனால் மீண்டும் அதை விட பல மடங்கு மளமளவென்று வந்துத் தொங்க ஆரம்பித்துவிட்டன.

இந்த இடம் சுற்றுலாப் பயணிகளைக் கவரும் ஒரு இடமாகவும் மாறிவிட்டது.இதனால் இந்த வழியாகச் செல்லும் சாரதிகள் ஆபத்தை எதிர்நோக்கியுள்ளதாக சிலர் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நம்மட ஊர்ல்லன்னா இதை அப்படியே இட்லி அவிக்கவோ, பாத்ரூம் சுவத்தில தொங்கவ் இட்டு பொருட்கள் வைக்கவோ யூஸ் பண்ணியிருப்போமில்ல..

28 மார்ச், 2011

அப்பளம் -சூப்பர் பாடல்..

ஒரு அப்பளம் நொருங்கிடும்
என்ன கொண்டு வந்தோம் ...

பூகம்பங்கள் பற்றி எதிர்வுகூறும் பேராதனை பல்கலைக்கழக விஞ்ஞானிகள்

உலகளாவிய ரீதியில் இடம்பெற்றுவரும் பூகம்பங்கள் தொடர்பாக ஆராய்ந்து வரும் பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் அடுத்த பாரிய பூகம்பம் தொடர்பாக எதிர்வுகூறும் சாத்தியத்தைக் கொண்டுள்ளனர்.

பூமியின் தட்டுக்களின் வடிவங்கள் மாறுதலடையும் முக்கியமான தொடர்புகள் குறித்து அவர்களால் கண்டறியக் கூடியதாக இருந்துள்ளது. அதன் மூலம் பாரிய பூகம்பங்கள் சில இடம்பெற்றவை பற்றியும் அவர்கள் எதிர்வு கூறியுள்ளனர்.நியூஸிலாந்தில் கிறிஸ் சேர்ச்சில் அண்மையில் இடம்பெற்ற 6.3 மக்னிரியூட் அலகுடைய பூகம்பம் தொடர்பாக அவர்கள் எதிர்வு கூறியிருந்தனர்.

"எமது ஆய்வின் பிரகாரம் பூமியதிர்ச்சி அங்கு இடம்பெறும் என நாங்கள் எதிர்வு கூறியிருந்தோம். பெப்ரவரி 22 இல் அது இடம்பெறுமெனத் தெரிவித்திருந்தோம். அது ஏற்பட்டுள்ளது. என்று பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அத்துல சேனாரத்ன கூறியுள்ளார். மார்ச் மாதம் இடம்பெறுமென நாங்கள் எதிர்வு கூறியிருந்த ஒவ்வொரு பூகம்பங்களும் அநேகமாக இடம்பெற்றுள்ளன என்று அவர் தெரிவித்திருக்கிறார். நியூஸிலாந்தில் இடம்பெற்ற பூகம்பத்துக்கு நீண்டகாலத்துக்கு முன்னரே தமது கண்டுபிடிப்புகளைப் பல்கலைக்கழகம் சமர்ப்பித்திருந்ததாக அவர் கூறியுள்ளார். இந்தக் கண்டுபிடிப்புகள்,எதிர்வு கூறல்கள் பி.பி.சி.க்கு அனுப்பப்பட்டிருந்ததாகவும் ஆனால், அதற்கு பதிலளிக்கப்படவில்லையெனவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஏப்ரலில் எமது எதிர்வுகூறல்கள் தொடர்பாக இறுதித் தீர்மானத்தையெடுக்கும் நடவடிக்கைகளில் பல்கலைக்கழகம் ஈடுபட்டுள்ளது. ஏப்ரல் முதல் வாரம் பொதுமக்களுக்கு அந்தத் திட்டங்கள் தொடர்பாக வெளியிடப்படுமென அவர் மேலும் கூறியுள்ளார்.

தமது கண்டுபிடிப்புகளை பொதுமக்களுக்குப் பல்கலைக்கழகம் அறிவிக்கும். இந்த வருடம் இலங்கைக்கு ஏதாவது அச்சுறுத்தல் உள்ளதா? என்று கேட்கப்பட்டபோது, இலங்கையில் பூமியதிர்வுகள் இடம்பெறுவது மிக அபூர்வமானவையென பேராசிரியர் கூறியுள்ளார். ஆனால், இந்து சமுத்திரத்தில் பூகம்பம் இடம்பெறுவதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அதனால் கடல்கோள் மூலம் உடனடி அச்சுறுத்தல் இருப்பது பற்றியும் அவர் தெரிவித்திருக்கிறார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் 136 இற்கும் மேற்பட்ட பூகம்பங்களை ஆய்வு செய்துள்ளனர். அவை யாவும் 6 மக்னிரியூட் அலகுக்கு அதாவது ரிச்டர் அளவீட்டில் 6 மக்னிரியூட் அலகுக்கு மேற்பட்டவையாகும். சூரிய,சந்திர கிரகணங்கள் மற்றும் சந்திரனின் நகர்வுகள் என்பவற்றுடன் பூமியதிர்வுகளுக்குள்ள தொடர்புகளை நாம் ஆராய்ந்துள்ளோம். உறுதியான தொடர்புத்தன்மையை நாங்கள் கண்டுபிடிக்கவில்லை. பூமியின் வடிவ மாற்றங்களை ஆராயும் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளோம். பூமித்தட்டுகளின் நகர்வுகளையும் ஆராய்ந்து வருகிறோம். அதன் பின்னர் பூமித்தகடுகளின் வடிவ மாற்றம் பூமியதிர்வுகள் என்பவை தொடர்பாகத் துரிதமாகத் தொடர்புபடுத்த முடியும் என்று அவர் கூறியுள்ளார்.

கிரகங்களில் வடிவ மாற்றத்துக்கிடையில் உறுதியான தொடர்புத்தன்மை தொடர்ச்சியாக இருப்பதாக அவர் கூறியுள்ளார். அதாவது அவற்றுக்கும் பூகம்பத்துக்கும் இடையில் தொடர்புகள் உள்ளதாக அவர் தெரிவித்திருக்கிறார். நாங்கள் எதிர்வுகூறியவை பல உண்மையாகியுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

27 மார்ச், 2011

காங்கிரசிற்​கு எதிராக உருவாக்கப்​பட்ட காணொளி !

நாம் தமிழர் சார்பாக காங்கிரசுக்கு எதிராக காணொளி ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. தமிழ் நாட்டில் நடக்கும் சட்டமன்றத்தேர்தலில் யாருக்கு வாக்களிக்கவேண்டும், எதற்காக மாற்றம் வேண்டும் என இக் காணொளி மிகத் துல்லியமாக எடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை இக் காணொளி நிச்சயம் ஏற்படுத்தும் என்பதில் ஐயமில்லை.

அ.தி.மு.க விற்கான விஜய் இன் ஆதரவினால் விஜய்-வடிவேல் முறுகல்


எதிர்வரும் தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு நடிகர் விஜய் ஆதரவு அளித்துள்ளதாக, அவரது தந்தையும், திரைப்பட இயக்குனருமான எஸ்.ஏ.சந்திர சேகரன் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து திருச்சியில் இன்று நிருபர்களிடம் அவர் கூறுகையில், "தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு முற்றிலும் சீர்குலைந்துவிட்டது. சாமானிய மக்கள் விலைவாசிப் பிரச்னையில் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால், ஆளும் கட்சியோ ஊழல் செய்து லட்சக்கணக்கான கோடிகளை ஈட்டி வருகிறது.

எனவே, தமிழகத்துக்கு நன்மை ஏற்படும் வகையில், இந்தத் தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுகவுக்கு நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கம் ஆதரவு தெரிவிக்கிறது.

அதிமுகவின் வெற்றிக்காக, நடிகர் விஜய்யின் மக்கள் இயக்கமும், நாங்களும் கடுமையாக பாடுபடுவோம்," என்றார் எஸ்.ஏ.சந்திர சேகரன்.

மேலும், திமுக ஆட்சியால் திரைத்துறையினருக்கு ஏற்பட்ட பாதிப்புகள் குறித்தும், தனது 'சட்டப்படி குற்றம்' படத்தை வெளியிட முடியாத வகையில் மேற்கொள்ளப்பட்ட சதிதிட்டங்கள் குறித்தும் அவர் நிருபர்களிடம் விளக்கினார்.

இந்த அறிவிப்பினால் தொடர்ந்தும் விஜய் உடன் கைகோர்த்து விஜயின் வெற்றிக்காக பாடுபட்டு வரும் வடிவேல் தன ஆதரவாளர்களிம்" என்னட இந்தப்பயபுள்ள இப்பிடி பொசுக்குன்னு முடிவு எடுத்திடிசு என்று புலம்பித்திரிகிறாராம்.. இதனால் இருவருக்கும்
எதிர்வரும் காலங்களில் திரைப்படங்களில் இணைந்து நடிக்கும் விடயத்தில் விரிசல் விழலாம் என தமிழக வானியல் எதிர்வு கூறல் துறையினர் கூறியிருப்பதால்(ஆமா இவிங்க சொல்லி மழை வந்திட்டாலும்) விஜய் ரசிகர் மத்தியில் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர்.அத்துடன் வேலாயுதம் படத்தினை இயக்குனர் ராஜா சன் பிக்சர்ஸ் நிறுவனத்திடம் விற்க இருந்ததாகவும் இதனால் அந்த புழைப்பில் மண் விழுதுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஏற்கனவே சுறா படத்தில் வடிவேலுவின் சிரிப்பு வெடிகளினால் தான் அந்த படம் ஓடியது
என்பது நினைவிருக்கலாம்..

கண்ணா 2 வது லட்டும் திங்க ஆசையா..




நன்றி ஜீனியர் விகடன்...

25 மார்ச், 2011

ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படை மீது கெரில்லா தாக்குதல் - ஐந்து இராணுவ அதிகாரிகள் பலி! - வதந்தி


நேற்று இரவு 10:22 மணியளவில் ஹபரணைக் காட்டுப்பகுதியில் சிறீலங்காப்படைகளின் தொடர்அணி ஒன்றின்மீது நடாத்தப்பட்ட திடீர் கெரில்லா தாக்குதல் ஒன்றில் ஐந்து சிறீலங்கா இராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதம் செய்யமுடியாத செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.

2009 ஆம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலின் நடைபெற்ற போரின் இறுதி நாட்களில் வெள்ளைக்கொடியுடன் சென்ற தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், சமாதானச் செயலகப் பணிப்பாளர் புலித்தேவன், கட்டளைத்தளபதி கேணல் ரமேஸ் ஆகியவர்கள் மீதான கோழைத்தனமான படுகொலை தாக்குதலுக்கு பொறுப்பான இராணுவ அதிகாரிகளே கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொல்லப்பட்ட இராணுவ அதிகாரிகளின் பெயர் விபரம் வருமாறு:

1 ஆவது சிறப்புபடைஅணியின் கட்டளை அதிகாரி மேஜர் மகிந்த ராஜசிங்கே

1 ஆவது சிறப்புபடை அணியின் 2 ஆவது கட்டளை அதிகாரி மேஜர் விபுல திலக இலகே

சிறப்புப் படையணியின் கோல்ப் கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் சமிந்த குணசேகர

“ரோமியோ” கொம்பனியின் கட்டளை அதிகாரி கப்டன் கவிந்த அபயசேகர

“எக்கோ” படையணியின் கட்டளை அதிகாரி மேஜர் கோசல விஜயக்கோன்

ஆகியோரோ கொல்லப்பட்ட உயர் அதிகாரிகள்.

அத்துடன் இந்தத்தாக்குதலில் சிறீலங்கா இராணுவத்தின் 59 ஆவது படையணியின் சிறப்புப்படை அதிகாரியான கேணல் அத்துல கொடி பீலி படுகாயத்துடன் உயிர் தப்பியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள சங்கிலியன் படையணி இத்தகைய தாக்குதல் வருங்காலத்தில் தொடரும் என்று தெரிவித்துள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன என மேலும் அச்செய்தி வெளிவந்துள்ளது.

ஆனாலும் இச்செய்தி இந்த அதிகாரிகளை யுத்தகுற்றத்தில் இருந்த தப்பவைக்கவே என்று பல செய்தியாளர்கள் கருதுகின்றனர்.

ஆயுதங்களை மௌனித்து விட்டதாக விடுதலைப்புலிகள் முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் பின்னர் அறிவித்ததை ஏளனம் செய்யும் விதமாகவும் நாடு கடந்த அரசின் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் பொதுமக்களிற்கு விடுத்த அறிவிப்பை திசை திருப்புமுகமாகவும் இன்று விசமிகளால் அறிக்கையொன்று விடுக்கப்பட்டுள்ளது.

ஹபரணைக் காட்டுப்பகுதியில் தாக்குதல் சம்பவம் ஒன்று இடம்பெற்றதாகவும் அதில் சிறீலங்காப் படைகளின் வெவ்வேறு படைப்பிரிவுகளின் உயரதிகாரிகள் ஐந்து பேர் பலியாகியுள்ளது போன்றும் சங்கிலியன் படையணி இதற்கு உரிமை கோரியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள அச் செய்தியில்,

இந்தச் செய்தியை இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்ய முடியவில்லை என மேலதிகமாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இவ்வாறான ஒரு சம்பவமே இடம்பெறவில்லை எனத் தெரிவித்த கொழும்புத் தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் இந்தச் செய்தி யாரோ ஒருவரால் ஏதோ ஒரு விடயத்தைத் திசை திருப்புவதற்காக வேண்டுமென்றே விடப்பட்டதாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

இராணுவத்தின் வெவ்வேறு படைப்பிரிவுகள் ஒன்றாக செல்வது போர்க்காலத்தைத் தவிர்ந்த நிலையில் மிகவும் அரிது என்றும் அவர்கள் தமது படைகளிற்கான பிராந்தியத்திலேயே அவர்கள் செயற்படுவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

வன்னியிலுள்ள 59வது படையணி, கொழும்பிலுள்ள 1வது சிறப்புப் படையணி போன்றன ஒன்றிணைந்து ஹபரணைக்கு செல்ல வேண்டிய தேவை இல்லையெனவும், ஹபரணை இப்போது உல்லாசப் பயணிகளின் புரியாக மாறி விட்டதாகவும் அங்கே ஹோட்டல்களல் அறை எடுப்பதற்கே பல நாட்கள் காத்திருக்க வேண்டும் என்று தெரிவித்ததார்.

அத்தோடு இராணுவத்தின் பல பிரிவுகளைச் சேர்ந்த உயரதிகாரிகள் இவ்வாறு ஒன்றாகப் பயணம் செய்வது என்பது நம்பும்படியாக இல்லையெனவும், அவர்கள் விரும்பாவிட்டால் கூட அவர்களின் மெய்ப்பாதுகாவலர்களுடனே அவர்கள் பயணம் செய்ய வேண்டுமெனவும் தெரிவித்த மேற்படி ஊடகவியலாளர் இந்த ஒரு உண்மையே இச் செய்தி பொய்யென்பதை நிரூபிக்கும் எனத் தெரிவித்தார்.

அனுராதபுரத்திலிருந்து திருமலைக்கு செல்லும் வீதியில் திருக்கொண்டையாமடு வீதிக்கும், குருநாகல்-திருமலைப் பெருந்தெருவுக்கும் அண்மையாக அமைந்துள்ள ஹபரணைக்கு இன்று வெளியான செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ள மற்றைய சிறப்புப் படையணிகளும் சென்றிருக்க சந்தர்ப்பமே இல்லையென்று அந்த ஊடகவியலாளர் தெரிவித்தார்.

வண்டு முருகன் ஸ்பீக்கிங் நோ குறஸ் ஸ்பீக்கீங்...

24 மார்ச், 2011

பெப்ஸி -சேஞ் த கேம் விளம்பரங்கள்

மாலிங்கா - சிலிங்கா /மலிங்கா


டில்சான் - பள்ளூ ஸ்கூப்




கெவின் பீற்றர்சன் - சுவிப்ட் சொட்



சாஹிப் அல் ஹசான்



டோனி - ஹெலிகொப்டர் சொட்




ஹர்பஜன் சிங் - துஸ்ரா



பில்லி பெளடன் - டெட்டி உங்கல்

23 மார்ச், 2011

சிறையில் இருந்தபோது நித்தியானந்தா விரும்பி பார்த்த காட்சிகள்

பாடல் காட்சி




நகைச்சுவைக்காட்சி

விசேட பயிற்சி அளிக்கப்பட்ட கன்னிப்பெண்கள் பாதுகாப்பில் கடாபி!




லிபிய ஜனாதிபதி குண்டுத்தாக்குதலில் இருந்து தப்புவதற்காக பாதாள அறையில் பதுங்கியிருக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

லிபியாவின் 'சபஹா' ஒரு பாலைவன நகரமாகும். இங்கு சுமார் 130,000 கடாபியின் அதி தீவிர விசுவாசிகள் உள்ளனர். கடாபி இம்மாவட்டத்திற்கு சென்றிருக்கலாம் என ஐக்கிய இராச்சிய விசேட படைகள் தெரிவிக்கின்றன.

ஆரம்பத்தில் இறக்கும் வரை போர் புரிவதாக கடாபி கூறினாலும் அது பொய்யென அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடாபி தனது உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்ற நிலை தோன்றும் போது தனது நேச நாடுகளான சிம்பாப்வே, வெனிசூலா மற்றும் ஆபிரிக்காவின் நைஜர் போன்ற நாடுகளுக்கு தப்பியோடலாம் என அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.

கடாபி தன்னைப் போன்ற உருவம் கொண்ட பலரை உருவாகியிருக்கலாம் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை இவருக்கு 40 கன்னிப்பெண்களைக் கொண்ட மெய்ப்பாதுகாவலர் பாதுகாப்பு அளித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.இவர்கள் விசேட பயிற்சி அளிக்கப்பட்டவர்கள்.

அப்பெண்கள் பாலியல் உறவு வைத்துக்கொள்ள முடியாது .மேலும் சாகும் வரை கடாபியின் உயிரை பாதுகாப்போம் என சத்தியம் மேற்கொண்டவர்கள் ஆவர்.

கடாபி பெண்களுக்கு சமவுரிமை வழங்குபவன் என்பதனை அடையாளப்படுத்துவதற்காக இவர்களை தன்னுடன் வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

22 மார்ச், 2011

வானம் புதிய திரைப்படப்பாடல்-தரையிறக்கி கொள்ள




நடிகர்கள் : சிம்பு,பரத்,அனுஸ்கா,வேகா
இசையமைப்பு : யுவன்சங்கர்ராஜா
இயக்கம் : கிரிஷ்
பாடல் வரிகள் :நா.முத்துக்குமார்,சிம்பு,யுவன்சங்கர்ராஜா

பாடல்களை தரையிறக்கிக்கொள்ள இங்கே கிளிக்குங்கள்

பாஸ்வேர்ட் : keerthi

21 மார்ச், 2011

கேணல் கடாபியின் நிர்வாக கட்டிடம் ஏவுகணைத்தாக்குதலில் தரைமட்டமானது




இன்று அதிகாலை பிரிட்டன் படைகளின் ஏவுகணைத்தாக்குதலில் கேணல் கடாபியின் நிர்வாக கட்டிடம் தரைமட்டமானது.

இந்த தாக்குதலுக்கு பயன்படுத்தப்படும் ஒவ்வொரு Tomahawk ஏவுகணையும் 300,000 ஸ்டேலிங் பவுண்ட்ஸ் செலவாகிறது..


லிபியா மீது மேற்கத்தைய நாடுகள் நடத்தியுள்ள தாக்குதல்களை பயங்கரவாத தாக்குதல்கள் என விமர்சித்துள்ள லிபிய தலைவர் கர்னல் கடஃபி, இந்த தீவிரவாத தாக்குதல்களை தாங்கள் முறியடிப்போம் என கூறியுள்ளார்.

அரச தொலைக்காட்சியில் அவர் ஆற்றிய உரையில், லிபிய மக்கள் அனைவரும் ஆயுதம் தரித்திருப்பதாகவும், லிபியாவின் எண்ணெய் வளத்தை மேற்கத்தையர்கள் அபகரிப்பதை தடுக்க தாங்கள் நீண்ட போர் ஒன்றை புரிய தயாராக இருப்பதாகவும் கூறினார்.


போர் தொடுத்துள்ள அன்னிய படைகளை ஜெர்மனியின் நாசி படைகளோடு ஒப்பிட்ட அவர், அவர்கள் கொல்லப்படுவார்கள் என்றும் சூளுரைத்தார்.

இதற்கிடையே அமெரிக்கா மற்றும் பிரிட்டனால் செலுத்தப்பட்ட 110 ஏவுகணைகளால் ஏற்பட்ட பாதிப்பை இராணுவ அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர்.


கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற பென்காசி நகரம் அருகே பிரான்ஸ் போர் விமானங்கள் நடத்திய தாக்குதலுக்கு பின்னர், கிட்டதட்ட 14 உடல்கள் இராணுவ வாகனங்கள் அருகே கிடந்ததை தான் காணக்கூடியதாக இருந்ததாக ராய்டர்ஸ் செய்தியாளர் ஒருவர் கூறுகிறார்.

விமான தாக்குதல்கள் தொடர்பில் லிபிய தொலைக்காட்சியில் வெளியான செய்திகளில் கிட்டதட்ட 150 பேர் காயமடைந்து, 48 பேர் கொல்லப்பட்டதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பான படங்களும் காண்பிக்கப்பட்டன.

லிபியாவின் வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும், இதில் தாங்கள் வெற்றி பெற்றுள்ளதாகவும் அமெரிக்க இராணுவ தலைமை அதிகாரியான அட்மிரல் மைக் முல்லன் கூறியுள்ளார்.

தலைநகர் திரிபோலி மற்றும் மிசாராடா நகரத்தில் உள்ள கிட்டதட்ட 20 வான் பாதுகாப்பு மையங்கள் மீது ஏவுகணை தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

அமெரிக்க மற்றும் பிரிட்டன் கடற்படைகள் ஏவுகணைகளை ஏவி வரும் நிலையில், பிரான்ஸ் மற்றும் பிரிட்டனின் விமானங்களும் தாக்குதலில் ஈடுப்பட்டு வருகின்றன. அமெரிக்காவின் பி-2 வகை விமானமும் குண்டுகளை வீசி வருகிறது.

ஏவுகணை தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து மேற்கத்தைய இராணுவ அதிகாரிகள் அவசரமாக ஆராயவுள்ளனர். பாதிப்பின் அடிப்படையில் எவ்வகையான நடவடிக்கை எடுப்பது என்பது குறித்து அவர்கள் முடிவெடுப்பார்கள் என்று பிபிசியின் பாதுகாப்புத்துறை தொடர்பான செய்தியாளர் ஜோனாத்தான் மார்க்கஸ் கூறுகின்றார்.

இதற்கிடையே, கர்னல் கடஃபிக்கு ஆதரவான படைகள் மிசராடா மீது புதிய தாக்குதல்களை ஆரம்பித்துள்ளதாக கிளர்ச்சியாளர்களின் சார்பில் பேசவல்ல ஒருவர் பிபிசியிடம் தெரிவித்தார்.


லிபியாவில் இடம்பெற்று வரும் தாக்குதல்கள் குறித்து கவலை வெளியிட்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், அங்கு அதிகரித்து வரும் வன்முறையால் பொது மக்கள் பாதிக்கப்படுவது தமக்கு மிகுந்த கவலையை கொடுப்பதாகவும், ஆயுத பலத்தை பயன்படுத்தாமல், பேச்சுவார்த்தை மூலமே க்ருத்து வேறுபாடுகளை தீர்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

சூடேற்றும் தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தேர்தல் விஞ்ஞாபனங்களில் இலவசம் மீண்டு சூடு பறக்கத்தொடங்கியுள்ளது.
கலைஞரின் தேர்தல் அறிக்கையை இலவசங்களால் நிரப்பி மச்சான்ஸ் நமீதா போல
களத்தில இறக்கியிருக்கானுக... அதுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் நம்ம ஒல்டு பார்ட்டிகளோட வோட்டை அள்ளுவதற்காக செல்வி ஜெயலலிதா சூப்பர் மாஸ்டர் பிளானை
அறீவிக்க இருப்பதாக உள்குத்து உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதில் முக்கியமான விடயம் அந்தக்காலத்தில் ஜெயலலிதாவோட துள்ளும் இளமையான
ஆட்டங்களில் ஜொள்ளூ ஊத்தியே காவிரியை வத்தாம ஓடவிட்டவிங்க நம்ம பெரிசுக..
அவிங்களை கைக்குள்ள போட்டுவிட்டால் வீட்டில அத்தனை வாக்குகளும் அதிமுக விற்கே என்ற மாஸ்டர் பிளானில் பிரசாரம் செய்யப்போகும் இடங்களில் அன்றையகால உடையில் ஜெயலலிதா உன் விழியும் என் வாளும் சந்தித்தால் ரீமிக்ஸ் பாடலுக்கு கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் மூத்த தலைவர்களும் இளைய வேட்பாளர்களும்
கைதட்டி ஏக வரவேற்பளித்திருப்பதாகவு கூட சேர்ந்து கோரஸாய் ஆடுவதற்கும் விண்ணப்பித்திருப்பதாகவும் புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.(ரெம்ப எதிர்பார்க்கிறாய்ங்க போல)

அடுத்ததாக நம்ம விஜயகாந் அவர்கள் ரெம்ப பேமஸ் ஆனது சின்னக்கவுண்டர் திரைப்படம்
அதுவும் அந்த படத்தில சின்னப்பயலுகளோட சேர்ந்து உலக் ஒலிம்பிக் போட்டி ஒன்றை
அறிமுகப்படுத்தியிருந்தார் .அது அனைத்து பாமரமக்களிடமும் போய் ஒரு ஆட்டு ஆட்டுவித்தது.இதனால் அப்போதைய காலத்தில் பொண்ணு பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளிடம் மணப்பெண்கள் " உங்களுக்கு பம்பரம் விடத்தெரியுமான்னு கேட்டு "
மாப்பிள்ளைகளுக்கு பீதியைக்கிளப்பிய அளவுக்குக்குன்னா பார்த்துக்குங்களேன் எந்தளவுக்கு றீச்சாகியிருக்குன்னு.அதனால இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு பம்பரம் சப்ளை பண்ணுவோம்.பம்பரம் விடத்தெரியாதவிங்களுக்கு இலவச காம் நடத்தி
அதில் இடுப்பு இலியான ,தமிழச்சி தம்ன்னா, வெள்ளாவியி வெளுத்த தப்சி யின் தொப்புளில் பம்பரம் விடுவது எப்பிடின்னு பயிற்சி கொடுப்போம் என்று அதிரடியாக அறிவிக்க உள்ளார்..


இதனால் கடுப்பாகியுள்ள கழக கண்மணீகள் உடனடியாக கலைனரை தமன்னா, தப்சிக்கு நேரில் சென்று தமது கழகத்தில் இணைய அழைக்குமாறு நெருக்குதல் கொடுத்து வருவதாக
உள்குத்து உலகநாதன் சந்தோசத்துடன் தெரிவித்தார்.


தாவணி போர்த்திய தாரகையே தமன்னா
தங்கமாய் மின்னும் தமிழ்பேரொழியே
தமிழனின் தாரக மந்திரமே தமன்னா...

இடையென்ன மல்லிகைக்கொடியா
உன் உடையென்ன கர்ணணின் கவசகுண்டலமா
சிறுத்தையிலே உன் கொடி இடை பார்த்து
தள்ளாத வயசிலும் என் மனம் தொலைதேன்
உன் சம்மதம் கிடைத்தால்
அடுத்த முதல்வரும் நீதான்

நண்பனுக்காக 6 நாட்கள் அருகே காத்திருந்த நாய் -இதெல்லவோ நட்பு

அண்மையில் யப்பானில் இடம்பெற்ற சுனாமி பேரழிவின் பின்ப்ய் அங்கே நடைபெர்று வரும் சில சம்பவங்கள் உலக மக்களை யப்பான் மக்கள் மீது பிரியப்பட வைத்துள்ளது.இவ்வளவு பிரச்சினை நடந்தும்கூட முகாம்களில் இருக்கும் மக்கள் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகளுக்காக முந்தியடித்து சண்டைபிடிக்காமல் ஒழுங்காக வரிசையில் நின்று அனைத்தையும் வாங்கிச்செல்வதை பார்க்கும் போதே விளங்குகிறது ஏன் அவர்களை பொருளாதாரத்தில் அவர்கள் இந்தளவு ,முன்னேறியிருக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள முடிகிறாது.இதற்கெல்லாம் சிகரம் வைத்தாற்போல இந்த சம்பவமும் நடந்திருக்கிறது.

ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி பேரலையின்போது காயமடைந்த நாயொன்றின் அருகில் பிறிதொரு நாய் 6 நாட்களாக குளிரையும் பொருட்படுத்தாமல் உணவு உறக்கமின்றி காவல் இருந்த சம்பவம் வடகிழக்கு ஜப்பானிலுள்ள இபாரகி பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

மேற்படி பிரதேசத்தை சுனாமி பேரலை தாக்கிய போது வீடொன்று இடிந்து விழுந்ததில் நாயொன்று இடிபாடுகளின் கீழ் சிக்கி படுகாயமடைந்தது.

இதன்போது அந்நாயுடன் நட்புறவுடன் பழகிய பிறிதொரு நாய் சுனாமியால் அடித்துவரப்பட்ட மண் சகதியால் நனைந்த நிலையில் உயிர் தப்பியிருந்தது.

மேற்படி நாய் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த தனது நண்பனான நாயை கைவிட்டு செல்வதற்கு மனம் ஒப்பாமல் 6 நாட்களாக அதனருகே அதற்கு காவலாக இருந்துள்ளது.

இந்நிலையில் மேற்படி பிராந்தியத்துக்கு செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்கள் சென்ற போது உடல் முழுவதும் மண் சகதியால் நனைந்து நடுங்கிக்கொண்டிருந்த நாயொன்று, அவர்களை இடிந்து விழுந்த 4 மாடி கட்டிட வீட்டின் பின் பகுதிக்கு அழைத்துச் சென்றது.

அங்கு சென்ற ஊடகவியலாளர்கள், இடிபாடுகளின் கீழ் நாயொன்று சிக்கியிருப்பதை கண்டு வியப்படைந்தனர். ஆரம்பத்தில் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாய் இறந்துவிட்டதாகவே அவர்கள் நினைத்தனர். ஆனால் அருகில் சென்று அவதானித்த போது நாய் உயிருடன் இருப்பதை அவர்கள் அறிந்தார்கள்.

உடனடியாக மீட்புப் பணியாளர்களுக்கு தகவல் பறந்தது. இதனையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த மீட்புப் பணியாளர்கள் இடிபாடுகளின் கீழ் சிக்கியிருந்த நாயை மீட்டனர்.

மேலும் காயமடைந்த நாயை அருகிலிருந்த மிருக வைத்தியசாலையொன்றுக்கு எடுத்துச் செல்லப்படும் வரை ஒரு மணி நேரமாக குறிப்பிட்ட நாய் அங்கிருந்து நகர மறுத்து காயமடைந்த நாயின் அருகிலேயே இருந்துள்ளது.

20 மார்ச், 2011

சாய்பாபா இலங்கை வருகிறார்..

உலகெங்கும் கோடிக்கணக்கான பக்தர் களைக் கொண்டுள்ள பகவான் ஸ்ரீசத்ய சாயிபாபா ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் விருந்தினராக எதிர்வரும் மே மாதம் இலங்கை வரவுள்ளார். அவருடைய பாதுகாப்பு மற்றும் பணிவிடை களுக்கென அவருடன் சேர்ந்து மேலும் ஆயிரம் பேரளவிலானோரும் இலங்கை வரவுள்ளதாகவும், அதேநேரம் இலங்கை அரசாங்கத்தின் சார்பிலும் அவருக்கான விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்துகொடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஆனால் இந்த தகவலை இன்னும் அரசாங்கத்தரப்பிலிருந்து அறிவிக்கப்படவில்லை

என்னா இது சின்னப்புள்ளத்தனமா...கொஞ்சம் விவகாரமாவெல்லோ இருக்கு

நெஞ்சு எங்க இருக்கு அடிபட்ட இடம் எவ்வளவு லோவர்ரில இருக்கு

மனைவியை வேற கூட்டிட்டு வாறதுக்கு தடை போட்டிட்டாய்ங்க .. ம் ம் ம் என்ன செய்ய
தம்பி பார்த்து ஏற்கனவே சிக்ஸர் அடிச்ச பந்தை காணேல்ல எண்டு தேடி திரியிறானுக
சார் பாத்து மெல்ல அப்பிடித்தான்....
சத்தியமா நான் பந்தை எடுக்கலடா, கீப்பர் கிட்ட பந்தை கேளுடா.. சாவடிக்கிறானே..

சோனியா காந்தியின் பிரித்தானியா வரவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியா காந்தியின் பிரித்தானியா வரவுக்கு எதிராக ஈழத்தமிழ் மக்கள் லண்டனில் ஆர்ப்பாட்டம் ஒன்றை மேற்கொண்டுள்ளனர்.

நேற்று முன்தினம் (17) பிரித்தானியாவின் லண்டன் நகரில் இடம்பெற்ற வைபவம் ஒன்றில் சோனியா காந்தி உரையாற்றியபோதே இந்த ஆர்ப்பாட்டம் இடம்பெற்றுள்ளது.




இந்திய அரசுக்கு எதிராக கோசங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் எழுப்பியதுடன், ஈழத்தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாப்பதற்கு இந்தியா நடவடிக்கையை மேற்கொள்ளவேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கைகளை விடுத்துள்ளனர்.

பொதுநலவாய நாடுகளின் 14 ஆவது கூட்டத்தொடரில் சிறப்புரை ஆற்றுவதற்காகவே சோனியா காந்தி லண்டன் சென்றிருந்தார்.

காமன்வெலத்தின் கூட்டத்தில் கலந்துகொண்டு அதில் சிறப்புரையாற்ற சோனியா காந்தி லண்டன் வந்திருந்தார். அவரின் சிறப்புரைக்கு முன்னதாக அவரிடம் சில கேள்விகள் உலகத் தமிழர் ஒன்றியத்தின் சார்பில் கேட்கப்பட்டது. சில கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்தப்படுமாயின் அதற்கு ஆதரவு வழங்குவீர்களா ? எனக் கேட்ட போது அது குறித்து கருத்து வெளியிட்ட முடியாது என மறுத்துள்ளார்.
மேலும் இலங்கையில் மனித உரிமைகள் மீறப்பட்டதாகக் கூறப்படும் விடையம் குறித்து எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதிலளித்துள்ள சோனியா காந்தி, சர்வதேச சட்டங்கள் மீறப்பட்டமை குறித்த வீடியோ காட்சிகள் சிலவற்றை தான் பார்த்ததாகவும் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் எனவும் கூறியுள்ளார் சோனியா காந்தி.

வடக்கில் படையினர் பெண்களை பாலியல் துஸ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் விடயம் குறித்து சோனியா காந்தியிடம் வினவப்பட்டபோது இலங்கையில் அவ்வாறானதொரு நிலை நடந்திருப்பின் அது மிகவும் கண்டிக்கத்தக்க விடயம் என குறிப்பிட்டுள்ளார். வார்த்தைப் பிரயோகங்களைச் மிகவும் துல்லியமாகப் பாவித்த சோனியா காந்தி எல்லா இடங்களிலும், அப்படி நடந்தால், அப்படி நடந்தால் அதனைத் தான் கண்டிக்கிறேன் என்று கூறித் தப்பித்துள்ளார்.

இந்த ஆர்ப்பாட்டம் பற்றி முதன்முதலில் எனது வலைப்பூவில் லண்டன் செல்லும்
" சோனியாகாந்திக்கெதிராக புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு " என்ற தலைப்பில் எழுதியிருந்தது உங்களுக்கு நினைவிருக்கும்..

18 மார்ச், 2011

ஏழாம் அறிவு படக்காட்சிகள் வெளீயாகியது


ஏ.ஆர் முருகதாசின் இயக்கத்தில் சூர்யா,சுருதி நடித்துவரும் ஏழாம் அறிவு திரைப்படத்தின்
ஒரு சில காட்சிகள் இணையத்தளத்தில் வெளியாகி உள்ளதால் முருகதாஸ் அதிர்ச்சியடைந்துள்ளார்.



உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தகவல்


உலகின் முதலாவது பறக்கும் தட்டினை உருவாக்கியுள்ளதாக ஈரானிய விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கு ' சோஹல்' பெயரிடப்பட்டுள்ளது. ஆளில்லாமல் இயங்கக்கூடிய இப்பறக்கும் தட்டானது உளவு பார்த்தல் போன்ற பல தேவைகளுக்காக உபயோகிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

இப் பறக்கும் தட்டானது உருவத்தில் சிறியதெனவும், குறைந்த சத்தத்தையே எழுப்பக்கூடியது என்பதுடன், இலகுவாக பயணிக்கக்கூடியது போன்றவை இதன் நன்மைகள் எனவும் ஈரானிய செய்திகள் குறிப்பிடுகின்றது.

மேற்படி தகவலானது இதுவரை உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் பல உலக நாடுகள் அணுச் செறிவாக்கல் காரணமாக ஈரான் மீது பொருளாதாரத்தடைகளை விதித்துள்ளன.

எனினும் ஈரான் தனது தொழில்நுட்பத்தில் தொடர்ச்சியாக முன்னேறி வருவதாக அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுமா...




உலக கோப்பை தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுவதற்கான, வாய்ப்பு உருவாகும் என தெரிகிறது.
கிரிக்கெட் அரங்கில், இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இடையிலான போட்டி என்றால், இரு நாடுகள் மட்டுமல்ல, உலகமே அன்று தனது இயக்கத்தை சற்று நிறுத்தி வைத்துவிட்டு, போட்டியை பார்க்கத் துவங்கி விடும். இதை ரசிகர்களும் போட்டியாக பார்க்காமல், இரு நாடுகள் இடையிலான யுத்தமாக நினைத்துக் கொள்வார்கள்.
இந்தியா ஆதிக்கம்:
பொதுவாக ஒரு நாள் போட்டிகளில் (மொத்தம் 119) இந்தியாவை (46 வெற்றி) விட, பாகிஸ்தான் அணி தான் (69 வெற்றி) அதிக வெற்றிகள் பெற்றுள்ளது. 4 போட்டிகளுக்கு முடிவில்லை. ஆனால் உலக கோப்பை தொடர் என்று வரும் போது, பங்கேற்ற 4 போட்டிகளிலும் இந்திய அணி தான் வென்றுள்ளது.
முதல் வெற்றி:
முதன் முதலாக கடந்த 1992 தொடரின் லீக் போட்டியில் இந்திய அணி (216/7), பாகிஸ்தானை (173/10), 43 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பின் 1996ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை காலிறுதியில், முதலில் விளையாடிய இந்திய அணி 287/8 ரன்கள் எடுத்தது. பின் பாகிஸ்தான் அணி 248/9 ரன்கள் மட்டும் எடுத்து, 39 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது.
"ஹாட்ரிக்' இந்தியா:
பின் 1999 தொடர் சூப்பர் சிக்ஸ் போட்டியில் இந்திய அணி (227/7), மீண்டும் 47 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை (180/10) சாய்த்தது. கடந்த 2003 தொடரில் பாகிஸ்தான் நிர்ணயித்த (273/7) இலக்கை, இந்திய அணி 4 விக்கெட்டுக்கு 276 ரன்கள் எடுத்து நான்காவது வெற்றியை பதிவு செய்தது.
மீண்டும் வருமா?
இம்முறை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் அடுத்தடுத்த பிரிவில் இடம் பெற்றதால், இரு அணிகள் இடையிலான மோதல் இல்லாமல் போனது. தற்போது காலிறுதியில் ரசிகர்கள் எதிர்பார்க்கும் மோதல் ஏற்படும் என்று தெரிகிறது.

புதிய திரைப்படப்பாடல்கள் - அழகர்சாமி குதிரை, சபாஸ் சரியான போட்டி



அழகர்சாமி குதிரை திரைப்படப்பாடல்கள் இங்கே

பாஸ் வேர்ட் :mathan
நடிகர்கள் : பிரபாகரன் , சரண்யா மோகன்
இசையமைப்பாளர் : இசைஞானி இளையராஜா





சபாஸ் சரியான போட்டி திரைப்படப்பாடல்கள் இங்கே
நடிகர்கள் :ஜெயராம்,சிறீரஞ்சனி
இசையமைப்பாளர் : தமன்

பாஸ் வேர்ட் :mathan

அட்லாண்டிஸ் மர்மத் தீவை கண்டுபிடித்துவிட்டதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் தகவல்

பல்லாயிரம் நூற்றாண்டுகளுக்கு முன்னர் கடலுக்கடியில் மூழ்கிப்போனதாய் நம்பப்படும் மர்ம நகரான அட்லாண்டிஸின் எச்சங்களையும் அதன் துள்ளியமான அமைவிடத்தினையும் கண்டுபிடித்துள்ளதாக அமெரிக்க ஆராய்ச்சியாளர்கள் அறிவித்துள்ளனர்.

இவர்கள் இந் நகரின் எச்சங்களை தென் ஸ்பானியவில் கண்டுபிடித்துள்ளதாகக் குறிப்பிடுகின்றனர்.


அக்காலத்தில் ஏற்பட்ட சுனாமியில் இது அடித்துச் செல்லப்பட்டிருக்கலாம் எனவும் அது ஸ்பானிய காடிஸ் நகரிற்கு வடக்கே கடலடியில் மூழ்கிப்போயுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

செய்மதி புகைப்படங்களின் உதவியுடனேயே ஆய்வாளர்கள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
மேலும் இதன் போது ஆழ் நில செய்மதிகள் , டிஜிட்டல் மெப்பிங் முறைகள், நீருக்கு அடியில் உபயோகப்படுத்தப்படும் தொழிநுட்பங்கள் என்பவற்றையும் தாம் பயன்படுத்தியதாக இவ்வாராய்ச்சியை மேற்கொண்ட ஹார்ட்போர்ட் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் ரிச்சார்ட் ப்ரிஹண்ட் கிராக் தெரிவித்துள்ளார்.

கிரேக்க தத்துவ அறிஞரான பிளேட்டோ (கி.மு 428/427-348/347) தமது 'திமேயஸ்' மற்றும் 'கிரேட்டஸ்' எனும் உரையாடல்களில் அட்லாண்டிக் பெருங்கடலில் இருந்த 'லிபியா மற்றும் துருக்கியின் பெரும்பகுதியும் இணைந்த நிலப்பரப்பைக் காட்டிலும் அதிகமான நிலப்பரப்பினைக் கொண்ட தீவாக' அட்லாண்டிஸைக் குறிப்பிடுகிறார்.

அத்தீவில் நாகரிகத்தில் முதிர்ச்சியடைந்த ஒரு சமுதாயம் வாழ்ந்ததாகவும் அவர்கள் பல தேசங்களைத் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்ததாகவும், பின்னர் அதீத செல்வச்செழிப்பாலும் அதிகாரத்தாலும் அச்சமுதாயம் சீரழிந்ததாகவும், அதனைத்தொடர்ந்து பெரும் நிலநடுக்கங்களாலும் எரிமலைச் சீற்றத்தாலும் அத்தீவு அழிந்ததாகவும் பிளேட்டோ கூறுகிறார்.


அட்லாண்டிஸ் குறித்த இத்தகவல்களை கிரேக்கச் சட்டங்களை உருவாக்கிய ஸோலான் என்பவரிடம் எகிப்திய ஞானிகள் கூறுவதாக பிளேட்டோ கூறுகிறார். இக்குறிப்புகள் பிளேட்டோவின் காலத்தில் வாழ்ந்த அரிஸ்டாட்டிலால் (கி.மு.384-322) கற்பனையானவை எனக்கூறப்பட்டாலும், பிளேட்டோவிற்கு பின்னர் இன்று வரையிலும் அட்லாண்டிஸைத் தேடுவோர் உள்ளனர்.

மேலும் பலர் இதனைப் பற்றி குறிப்பிட்டுள்ளனர்.

17 ஆம் நூற்றாண்டில் வரையப்பட்டதாகக் கூறப்படும் அட்லாண்டிஸ் தீவின் வரைபடம்.




இலங்கை உள்ளூராட்சி சபை தேர்தல் முடிவுகள்..




நேற்றைய தினம் இலங்கையில் நடைபெற்ற உள்ளூராட்சி சபைத்தேர்தலில்
மகிந்தராஜபக்சவின் கட்சியான
ஜக்கிய சுகந்திர மக்கள் முன்னணி 176 இடங்களிலும்
இலங்கை தமிழரசுக்கட்சி 10 இடங்களிலும்
ஜக்கியதேசியக்கட்சி 7 இடங்களிலும்
இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் கட்சி 04 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன.

235 தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 201 தொகுதிகளுக்கான் முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன..காத்திருங்கள் தொடர்ந்தும் தேர்தல் முடிவுகளை உடனுகுடன் அறியப்படுத்துகிறேன்...

17 மார்ச், 2011

பார்த்து சிரிச்சிட்டு போங்கண்ணே..ஆனந்தவிகடன்

கார்ட்டூன்களை பெரிதாக்கி பார்க்க படத்தின் மீது கிளிக்குங்கள்..





மூலபிரதி: ஆனந்தவிகடன்
நன்றி

திசை மாறிய சுனாமி

சென்ற மாதம் வரை உலக நடப்பில் பிளாஷ் நியூசில் நம்பர் 1 ஆக இருந்து வந்தது இந்தியாவில் ஆ.ராசா அடித்த 1.76 லட்சம் கோடி ஸ்பெக்ட்ரம் ஊழல்தான்.இது எந்தளவுக்கு பேமஸ் என்றால் எல்.கே.ஜி சின்னப்புள்ளைகள் கூட 1.76 லட்சம் கோடிக்கு எத்தனை சைபர் என்று சரியாகச்சொல்லும் அளவில் அனைவரையும் உள்வாங்கியிருந்தது.வீட்டில் அம்மாக்கம் தமது குழந்தைகளை ராசா என்று கூப்பிடக்கூட விருப்பப்ப்டாத அளவிற்கு அந்த ஊழல் மக்களின் மனதில் வெறுப்பை ஏற்படுத்தியிருந்தது.இதனால் அதிகம் கவலைப்பட்டது நம்ம ஜயா கருணாந்திதான் வரப்போகும் சட்டசபைத்தேர்தலில் இதன் பலன் எதிரொலிக்கப்போகிறது என பெரும் வருத்தம் கொண்டிருந்தார்.இதனால் பல வருடங்கள் வசனமெழுதி தயாரித்த நாடங்களையெல்லாம் தற்போது அரங்கேற்றினார்.அதில் ஒன்று தமிழக மீன்வர்கள் இலங்கை ராணுவத்தினரால் கொல்லப்பட்டதும்,கைது செய்யப்பட்டதும் கொந்தளித்து அறிக்கைவிட்டது.இதில் மேலும் ஒரு படி போய் தி.மு.வினரே அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த பொலிஸாரும் அனைவரும் இந்நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு நீதி என்ற ரீதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த கனிமொழியையும் கைது செய்து சென்றது.ஆனால் அந்தக்கைதுக்கு பலர் பல வியாக்கியானாம் சொன்னாலும் உண்மையான காரணம் அந்த கைதின் மூலமாக கனிமொழி சிறை சென்று ஆ.ராசாவை சந்திச்சு லவ்வுதற்கென்றே என்று உளவுத்துறையினர் அவர்களின் மாமியார் மேலெ சத்தியம் செய்தனர்.


இது இப்படியிருக்க இதையெல்லாம் மறகடிக்கும் முகமாக எதிப்தில் புரட்சி ஏற்பட்டு 30 ஆண்டு முபாரக்கின் ஆட்சி கவிழ்க்கப்பட அதைதொடர்ந்து லிபிய மக்களும் வீதியில் இறங்கி போராட கேணல் கடாபி எகிப்து அதிபர் போல் அல்லாது அனைவரையும் இரும்புக்ககரம் கொண்டு அடக்க முயல அனைவர் மத்தியில் இந்த விடயமே பிரபலமாகியது.இதன் பின்னால் கலைஞரின் "ராஜினாமா நாடகம் ' 2009 ம் ஆண்டு இலங்கைப்பிரச்சினைக்குப்பிறகு 2011 ல் தொகுதிப்பிரச்சினையின் போது மீண்டும் அரங்கேற்றப்பட்டது.ஆனால் இந்த நாடகத்தை கலைஞரின் வசனத்தில் ஏற்கனவே பார்த்துவிட்ட மக்கள் இதனை பிரிதாக எடுக்கவில்லை.ஆனால் கலைஞர் அந்த நாடக அரங்கேற்றத்தை கையில் வைத்துக்கொண்டு ஸ்பெக்ட்ரம் ஊழலை " பூனை கண்ணை மூடி
பால் குடிப்பது போல " மூடிமறைக்கலாம் என எடை போட்டார்.ஆனால் மக்கள் எதை மறந்தாலும் இந்த விடயத்தை மறக்க முன்வரவில்லை.


இப்பிடியான சூழலில்தான் சென்றவாரம் வெள்ளிக்கிழமை பகல் 2.45 மணீயளவில்
யப்பானைத்தாக்கியது பாரிய சுனாமி..இதனை சண்டீவி,கலைஞர் டீவி விளம்பரமே போடாமல் தொடர்ந்து யப்பானின் அழிவுகளை காட்டிக்கொண்டிருந்தன...ஏனென்பது உங்களுக்குதெரியும்.. ஆனால் யப்பான் மக்கள் சாம்பலில் இருந்து பீனிக்ஸ் பறவை போல மீண்டெழுவார்கள்.அதைப்பற்றி நாங்கள் கவலைப்படத்தேவையில்லை.நம்மட பிரச்சினை என்னான்னா..இந்த தேர்தலில் மக்கள் யாரைத்தெரிவு செய்யப்போகிறார்கள் என்பதே..
ஏற்கனவே விஜயகாந்தின் கட்சியினரும் அ.இ.அ.தி.மு.க இல் இணைந்து கொள்வதற்கு
ஏற்கனவே பல தில்லுமுல்லுகளை திமுக உளவுத்துறையூடாக நடத்தியிருந்தது.ஆனாலும் அதையெல்லாம் கணக்கில் எடுக்காமல் எதிர்கட்சியில் கைகோர்த்துக்கொண்டனர்.இது
தி.மு.க கழக கண்மணிகளுக்கு கிலியை ஏற்படுத்தியிருந்தது.இதனால் அவர்களால் முடிந்தவரைக்கும் அவர்களின் குடும்ப டீவிக்கள் மூலமாக எதிர்க்கட்சியில் இணைந்துகொண்டவர்கள் பற்றிய குறைபாடான செய்திகளை மட்டுமே ஒளிபரப்பி வந்தது.


இவர்களின் வயித்தில் பீர் வார்த்தது போல நேற்றிலிருந்து சில அசம்பாவிதங்கள் நிகழ ஆரம்பித்தன.சுனாமி திசைமாறி போயஸ்கார்டனில் சுழட்டி அடித்தது .(அப்பாடா பதிவின் தலைப்புக்கு வந்திட்டோம்)


அ.தி.மு.க தம்முடன் இணைந்து கொண்ட இதரகட்சிகளை மதிக்காமல் தொகுதிகளை ஒதுக்கியது.இது இன்று தேர்தலில் தே.தி.மு.க, இடதுசாரிகள்.ம.தி.மு.க கட்சிகள் எல்லாம் ஒன்றீணைந்து மூன்றாவது அணீயை உருவாக்கும் நிலைமைக்கு அத்திவாரம் போடப்பட்டுள்ளது.இதனை வரவேற்பது போல திமுக வின் குடும்ப டீவிக்கள் அவர்களின் செயற்பாடுகளை சரியென துணைக்கு நிற்பது போல இன்றுமுதல் விளம்பரம் போடமலேயே பிளாஷ் நியூசில் போட்டுக்கொண்டிருக்கின்றன்ர்( நல்லா உசுப்பேத்துறாங்கைய்யா).. ஊர் ரெண்டு பட்டா கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்று ஒளவையார் சொன்னது போல இவர்கள் செயற்படத்தொடங்கிவிட்டனர்.நாளைக்கு அனைவரும் ஒன்று கூடி ஒரு தீர்மானத்தை எடுக்க இருப்பதாக கூறி வருகின்றனர்..

கலைஞர் அய்யா " ரெண்டாவது லட்டும் திங்க ஆசையா"

குவாட்டர் அடிச்சிட்டு குப்புற கிடந்து சோசிப்போமில்ல

சீட் பெல்ட் அறுந்துவிட்டால்

புதிய டீவி அலுமாரியை விட பெரிதானால்
பிளக் கோல்டர் உடைந்துவிட்டால்
கார் ஸ்டீரியோ சிஸ்டம் திருடப்பட்டுவிட்டால்
புக் செல்வ் தாங்கும் பலகை உடைந்துவிட்டால்
கார் ஜீ.பி.எஸ் க்கு காசு இல்லாவிட்டால்
ஜஸ் வைக்கும் பெட்டி இல்லாவிட்டால்
ATM Screen சரியாக தெரியாவிட்டால்
தவறான நாட்டு கார் இறக்குமதி செய்யப்பட்டுவிட்டால்
மழையில் சட்டிலை சிக்னல் வராவிட்டால்
எலெக்ரிக் ஒவன் பழுதாகிவிட்டால்
வைப்பர் மோட்டர் வேலைசெய்யாவிட்டால்
கரண்ட் கணெக்சன் சரியாக கொடுக்காவிட்டால்
டிஸ்பிளே ராக்கை கால் உடைந்துவிட்டால்
ரயர்கள் ஒட்டுவதற்காக கொண்டு செல்லப்பட்டுவிட்டால்
சைலன்சர் பைப் பிடி உடைந்துவிட்டால்
வீட்டுவேலை செய்யும் நேரம் குழந்தைக்கு பாலூட்டவேண்டுமென்றால்
கேபிள்கள் மேசையின் பின்னால் விழுந்துவிட்டால்
வார்த்தையே இல்லை