08 பிப்ரவரி, 2011

களேபரத்திலும் ஒரு கிளுகிளுப்பு கேட்குது



தொடக்கமே ஒரு கிளுகிளுப்பானதாகவும் ஒரு தகவலை சொல்லக்கூடியதாகவும் இருக்க வேண்டும் என நினைத்தேன்......

சென்ற சனிக்கிழமை நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருக்கும் போது காதில் விழுந்த ஒரு சுவாரஸ்யமான தகவலை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

எத்தனையோ பேர் நண்பர்களுடன் தண்ணி அடிக்க ஆரம்பிக்க முதல்அனைவரும் தங்களது கோப்பைகளில் மதுபானத்தை ஊற்றி ஒரே நேரத்தில் மேலெ துக்கி மது கிண்ங்களை மென்மையாக மோதி " Cheers " என்று சொல்லுவார்கள்.ஆனால் எத்தனை பேருக்கு அப்படி சொல்லுவதன் அர்த்தம் என்ன என்று தெரியும்?

நான் கேள்விப்பட்டதை சொல்லுகிறேன் கருத்து சரியாக இருந்தால் அதனை எடுத்து கொள்ளுங்கள், இல்லை தவறு என்றால் உங்கள் கருத்துகளை இங்கே பதியுங்கள்.

" அனைவரும் குடிக்கும் போது நாக்கு சுவையையும்,கண்கள் பார்வையையும் ( இரவில் அச்சுவேலி றோட்டில தட்டு தடுமாறி தண்ணி அடித்தவர்கள் தயவாக வெளியேற்றப்படுகிறார்கள்) ,மூக்கு வாசத்தினையும் செயற்படுத்துகின்றன,ஆனால் காதுக்கு ஒரு வேலையும் இல்லாமல் இருந்ததன் காரணமாக காதுகளுக்கும் வேலை கொடுக்க வேண்டும் என்பதற்காக எமது முன்னோர்கள் ( ஆங்கிலேயர் உனது முன்னோர்களா என்று என்னுடன் சண்டை பிடிக்கவேண்டாம்) இப்படியான ஒரு நிகழ்வை அறிமுகப்படுத்தினார்கள் .(ஆனா நம்ம ஒரு சில பயபுள்ளக மூடில ஊத்தி மணந்தாலே போதும் நம்ம ரெண்டு ஸ்பீக்கரிலும் Blood வாற அளவுக்கு பினாத்துவானுக) .அனைவருடைய கோப்பைகளும் ஒன்று சேர்ந்த்து எழுப்பும் ஒலி அத்துடன் " சியேர்ஸ்" என்னும் சொற் பதமும் இணைந்து காதுகளுக்கு வேலை கொடுக்கப்பட்டது.( ஆனா சிலபேர் அடிக்கமுதலே கோப்பையை மற்றவன் கோப்பையுடன் அடித்து கீழே ஊற்றி கடுப்பேத்துவானுக..)


" இந்த கருத்துக்கு இன்னும் சேவை சேர்க்கும் முகமாக இன்னும் ஒரு கதையை சொல்லுகிறேன்.உலக மாவீரன் நெப்போலியன் " வாட்டலூவில் " பிரஞ்சு படைகளிடம் தோல்வி கண்டான்.அவனை பிரஞ்சு ப்படைகள் சிறையில் அடைத்து வைத்திருந்தார்கள்.அந்தா அஞ்சா நெஞ்சனின் வீரம் கண்ட பிரஞ்சுப்படைகள் அவனை எப்படியாவது பயம் கொள்ள செய்ய வேண்டும் என்று திட்டம் தீட்டினார்கள்.அந்த சிறைச்சாலையில் ஒரு மது பான விருந்துக்கு ஆயுத்தம் செய்தார்கள். அதற்கு நெப்போலியனையும் அழைத்து அனைவரும் ' சியேர்ஸ்" சொல்லும் நேரத்தில் பல பீரங்கி குண்டுகளை வெடிக்கும் படி செய்திருந்தர்கள் அவன் பயப்படுவதற்காக.அனைத்தும் திட்டப்படி நடந்தேறியது. ஆனால் கடைசியில் அனைவரும் குண்டு வெடிப்பு அதிர்வில் மது கிண்ண்ங்களை கீழே விட ,நெப்போலியன் மட்டும் நிதானமாக மதுவை அருந்திகொண்டிருந்தான்.
அனைவருக்கும் திகைப்பு, அவனிடமே கேட்டார்கள் " எப்படி சாத்தியம் என்று"
அதற்கு அவனின் பதில்

" நான் ஒரு காரியம் செய்ய தொடங்கினால்.அதில மட்டுமே அனைத்து புலன்களை ஒருங்குவிப்பேன் என்றான்"

இது அனைவருக்கும் கஸ்டம் என்றாலும் அதில் ஒரு தகவலை சொல்லிவிட்டு போயிருக்கிறான அந்த மாவீரன்.

2 கருத்துகள்:

Ananthan சொன்னது…

கீர்த்தி தொடக்கமே ..தண்ணியிலை தொடங்கி இருக்கிறாய்.. இன்னும் ஆகாயம் , நெருப்பு, காற்று , நிலம் எல்லாம் எதிர் பாக்கிறம்..

Ananthan சொன்னது…

கீர்த்தி தொடக்கமே ..தண்ணியிலை தொடங்கி இருக்கிறாய்.. இன்னும் ஆகாயம் , நெருப்பு, காற்று , நிலம் எல்லாம் எதிர் பாக்கிறம்..