
இன்றைய தினம் வல்வெட்டித்துறையில் நடைபெற இருக்கும் தேசியத்தலைவர் பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாவின் இறுதிக்கிரியைகளில் பங்கெடுக்கும் முகமாக இன்று அதிகாலை 2 மணியளவில் இலங்கை பண்டாரநாயக்கா விமான நிலையத்திற்கு வந்திறங்கினார். ஆனால் அவரை விமான நிலைய அதிகாரிகள் உட்செல்ல அனுமதிக்காமல் சென்னைக்கு திருப்பி அனுப்பி விட்டனர். அவருடன் மேலும் இரு அரசியல்வாதிகளும் வருகை தந்திருந்தனர்.இதனால் திருமாவளவன் சென்னையில் உள்ள இலங்கை வெளிவிவகார காரியாலயத்தின் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்த சமயம் சென்னைஅ பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
வல்வெட்டித்துறையிலும் இலங்கை இராணுவ புலனாய்வுத்துறையினர் இறுதிக்கிரியைகளில் கலந்து கொள்பவர்களி நோட்டமிட்டு வருகின்றனர்.தமிழ் மக்களிடையே மீண்டும் கொந்தளிப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்று திட்டமிட்டு இதைச்செய்கின்றனர்.
1 கருத்து:
இவர் போனதே ஒரு பிலிம் காட்ட தான். இலங்கை நல்ல வேலை செய்தது.
கருத்துரையிடுக