05 மே, 2011

கலைஞர் டீவி பெருமையுடன் வழங்கும் "நெஞ்சுக்கு நீதி" -சூட்டிங் டெல்லியில் அமர்க்கள ஆரம்பம்

கோடை விடுமுறை கொண்டாட தி.மு.க மற்றும் தலைவர்கள் டெல்லி படையெடுப்பு.

அங்கு வீர(கனி) மொழி படம் ஷூட்டிங்.
உடன்பிறப்பு(டெல்லிருந்து):தலைவரே நாங்க எல்லாம் வந்துட்டோம்.நீங்க எப்ப இங்க வரீங்க?
மு.க : பொன்னர் சங்கர் முடித்த கையோடு,தீரன் சின்னமலை கதை எழுத ஆரம்பித்துவிட்டேன்.சீக்கிரம் முடித்து விட்டு வந்திடறேன். அது போகட்டும்,கதாநாயகி,எப்படி இருக்காங்க.?
மு.க. நீங்க எல்லாம் எடுத்துசொல்லுங்கயா. இயக்குனரே நான் தான்.நான் பார்துக்குரென்யா


உடன்பிறப்பு: முதல் படம்கிற்தினால கொஞ்சம் பதட்டமாதான் இருக்காங்க.நீங்க கொஞ்சம் தெம்பு கொடுத்தா நல்லாஇருப்பாங்க. தலைவரே படத்தோட கதை படி சில சண்டை காட்சியெல்லாம் இருக்கு.அப்படியே நம்ம காங்கிரஸ் ஆளுககிட்ட சொல்லி அவங்களேயும் இங்க அனுப்புங்க.அவங்க தான் பெஸ்ட் சாய்ஸ்.அவங்களோட fight தான் சும்மா naturala ஆ இருக்கும்.audience கிட்ட நல்லா ரீச் ஆகும்.வடிவேலு க்கும் சில ரோல் இருக்கு.அவரேயும் சீக்கிரம் வரசொல்லுங்க.ஏன்னா ஒரு சீன்ல நீதிபதி கதாநாயகிக்கு ஜாமீன் தர மறுத்துடுவாரு. அப்ப தான் வடிவேலுவோட என்ட்ரி .சும்மா வச பாடுவாரு பாருங்க ........அத அப்படியே சன் t.v . ல,நம்ம கலைஞர் t .v ல,குங்குமத்தில,போட்டு பெருசா விளம்பரபடிதிட்டோம்னா படம் சூப்பர் டூபர் ஹிட் ஆயிடிங்க.

மு.க : ஹீ ...ஹீ .... . நாம பண்ற அலப்பறைய பார்த்து சும்மா டெல்லி யே அதிரும்ல....
உடன்பிறப்பு:அப்பிடியே நம்ம நொந்தபாலுவை விட்டு ஒரு அறிக்கை விட வைச்சிடுவோம்." கதாநாயக்கிக்கு விடுதலை கிடைக்காவிட்டால் தமிழகமே பத்தி எரியும் எனது மனைவி தீக்குளிப்பார் என்று "

தலைவரே அந்த கதாநாயகன் கடைசி வரைக்கும் ஜெயில் லே தான் இருப்பாரா?
மு.க : படத்தோட கதை படி கதாநாயகனும், நாயகியும் ஜெயில்ல மீட் பண்றதுதான் கதை யோட திருப்பமே ...........
உடன்பிறப்பு:அப்போ ஏன் தலிவரே கதாநாயகியோட ஒரியினல் புருசனும் கூட அனுப்பி வைச்சிருக்கீங்க.


மு.க:கிரவுட்டை கிளியர் பண்ணத்தான்..
உடன்பிறப்பு:தலிவரே பாருங்களேன் நீதிமன்ற சீன் வந்த பிறகு டெல்லியிலேயெ உங்க கட்டவுட்டுக்கு பாலபிஷேகம் பண்ணூவய்ங்க், உங்க டைம் லை அப்பிடி
மு.க: இதில உள்குத்து ஓண்ணூம் இல்லையே.

உடன்பிறப்பு:தலிவரே நீங்க பாடுறமாதிரி " ராசாத்தி " உன்னுசுரு என்னதில்ல" எண்ட பாட்டை ரீமிக்ஸ் பண்ணி போட்டிடுவோம்... அதோடா செயிலில இருக்கிற ராசா பாடுறமாதிரி " பொன் மகள் வந்தாள் எத்தனைகோடி தந்தாள் " எண்டு ஒரு ரீமிக்ஸ்ம் போட்டிட்டா படம் 200 நாள் ஓடும்.

மு.க : அப்போ அந்த பாராட்டு விழா இருக்குமில்ல..நம்ம மானாடா மயிலாடா நமியை வைச்சு சும்மா போட்டு தாக்கிடலாம்..அப்பிடியே ஹன்சிகா மோத்துவனியை கூப்பிடுங்கடா
பார்க்கும் போதே அப்பாவியா இருக்காடா

கருத்துகள் இல்லை: