04 மே, 2011

கலைஞர் அறிக்கைக்கு கசாப்புக்கடை உரிமையாளர்கள் கண்டனம்

கத்தியை கையில் எடுத்தவன் கத்தியாலேயே அழிவான் என்ற பழமொழிக்கான பாடம்தான் ஒசாமா பின்லேடன் வாழ்க்கை என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், "உலக நாடுகளில் அதிர்வையும், அச்சத்தையும் ஏற்படுத்தி - உலக வல்லரசுகளில் ஒன்றான அமெரிக்காவுக்கே பெரும் சவாலாக இருந்துவந்த ஒசாமா பின்லேடன் எனும் உசாமா பின் முகமது பின் அவாத் பின் லாடின் இன்று இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளதைத்தொடர்ந்து கறி கடைக்கள் வைத்திருப்போர் சங்கத்தினர் தமினத்தலிவர் கலைஞருக்கு எதிராக கண்டனத்தீர்மானம் நிறைவேற்றியுள்ளன்ர்.தலிவரின் இந்த அறீக்கையால் கறி கடை வைத்திருப்போரின் உறவினர்கள் அவர்களை கத்தியை கீழே போட்டுவிடுமாறும் இல்லாவிட்டால் அமெரிக்கா அவர்களை ஒசாமை போல போட்டுத்தள்ளீவிடுவார்கள் என்று அச்சம் தெரிவித்துள்ளனர்.

அப்பிடி கத்தியை கீழே போட சொல்லி வீட்டுக்காரம்மாக்கள் சண்டை பிடிப்பதால் கறிக்கடை உரிமையாளர்கள் சிக்கலில் தவிக்கின்றனர்.இதன்காரணமாக இனி சாப்பாட்டுகடைகளிலும்,ஹோட்டல்களிலும் கறிக்கு நல்ல மவுசு ஏற்பட்டுள்ளது.ஒரு பிளேட் கறீ 1000 ரூபா வரையிலும் விற்பனையாவதாக நமது உளவுத்துறை குமர்பெடியன் குஞ்சுமணி தெரிவித்தார்.ஒரு சில கறிக்கடைக்காரர்களை பேட்டி கண்டபோது அவர்கள் தெரிவித்த கருத்து உங்களுக்காக

கறிக்கடை கற்பூரம்: கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு என்று சொன்ன கருணாநிதிக்கு கணக்கில்லாம பொண்டாட்டி கட்டுனதால அவிங்க புள்ளைகளாலேயே சங்கு.

கறிக்கடை காஞ்சிபுரம்:கத்தியை எடுத்தவனுக்கு கத்தியால்தான் சாவு-மு.க அப்ப லத்தி எடுத்தவனுக்கு எதால சாவு தலிவா..

கறிக்கடை காட்டுப்பூச்சி:கத்தியைக் கையில் எடுத்தவன்; கத்தியாலேயே அழிவான்.டெலிபோனில் ஊழல் தெய்தவன், டெலிபோனில் பேசியே மாட்டினான்.(நீரா ராடியா)

கறிக்கடை கந்தசாமி:அப்போ ஊழல் மேல ஊழல் செய்தவனுக்கு கடூழிய சிறையா- தலிவர் குடும்பத்துக்கு ஒரு திகார் சிறை ஆர்டர்.

2 கருத்துகள்:

கவிதை வீதி... // சௌந்தர் // சொன்னது…

வித்தியாசமான கறபனை

மன்மதகுஞ்சு சொன்னது…

புதுசா ஏதாசும் போட்டாத்தானே அண்ணே கல்லா களைகட்டுது..