02 மே, 2011

மக்கள் கருத்து-புதுசு கண்ணா ரவுசு..

ஒவ்வொருநாட்களும் ஒவ்வொரு செய்திகள் வந்துகொண்டுதான் இருக்கின்றன.ஆனால் அதுபற்றி மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று ஒரு எண்ணத்தில் இந்த தொடர் மக்கள் கருத்து பதிவு ஆரம்பமாகிறது...ஆரம்பமே ரணகளமா இருக்க ஒசாமாவோடு ஆரம்பிப்போமா..


அமெரிக்காவிடமிருந்து பல நாடுகளை காப்பாற்றிய நல்லவர் ஒசாமா, உன்னை இழந்து தவிக்கு சுற்றமும் நட்பும் # கண்ணீர் அஞ்சலி

இனி விஜயகாந்த் என்னதான் பண்ணுவாரு! #ஒசாமா மரணம்!

இரும்புக்கோட்டை அமெரிக்காவுக்கே ஆப்படித்த ஆப்கானிஸ்தான் விடிவெள்ளி போர்க்குணம் கொண்ட போர்வாள் அஞ்சா சிங்கன் பின்லேடனுக்கு அஞ்சலி

ஒசாமா பின்லேடன் சாவு. >> அப்போ இனிமேல் அமெரிக்கா மற்றும் அதன் நேசப் படைகள் அரபு தேசங்களிலிருந்து வெளியேறி விடுவார்களா? # டவுட்டு

அப்பாடா ஒருமாதிரி ஒசாமாவை போட்டுத்தள்ளீயாச்சு நெக்ஸ்ட்டு சிறிலங்காவை குறி வைப்போமா மகிந்த ரெம்ப டாச்சர் கொடுக்கிறான்யா

ஒசாமா பின்லேடன் செத்ததை கொண்டாட ஒரு நாள் லீவு விடலாம்! #சரக்கெடு கொண்டாடு!

அறிந்தே இராத நரகாசூரனை கொன்றதற்காக தீபாவளின்னு சொல்லி லீவு கொடுக்கிறய்ங்க, அமெரிக்கா சாதிச்ச இந்த சாதனைக்காக உலகம் பூரா இதுக்கு லீவு கொடுக்க மாட்டய்ங்களா ?

அதுசரி இவ்வளவு டெக்னோலஜி வைச்சிருக்கிற அமெரிகா இதுவரை ஒசாமாவோட பாடியைக்காட்டலையே-டவுட்டு


வழக்கு வளையத்திலிருந்து தி.மு.க நிச்சயம் வெளியே வரும் # வியுக ரகசியத்தை ராசாவுக்கு சொல்லி கொடுத்திருப்பாரோ ?

அடுத்து அமெரிக்கா தனது எல்லையை பாகிஸ்தான் வரை விரிவுபடுத்தும்

ஹெலிகாப்டரில் சென்ற அருணாச்சல் முதல்வர் மாயம்- தமிழ்நாட்டுக்கு ஒரு ஹெலிகாப்டர் பார்சேல்....

கருத்துகள் இல்லை: