2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில், திமுக மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு மீதான விசாரணையை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் சனிக்கிழமைக்கு ஒத்திவைத்தது.
2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கின் சிபிஐ துணைக் குற்றப்பத்திரிகையில் 'கூட்டுச் சதியாளர்' என இடம்பெற்றுள்ள தமிழக முதல்வரின் மகளும், திமுக மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழி இன்று காலை டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
அவருடன் கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர் சரத் குமாரும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜரானார்.
பாவம்...ஓரமா உட்காந்து மிச்சர் சாப்டுட்டு இருந்தவன புடிச்சு இழுத்துட்டு வந்துட்டாங்களே
சினியுக் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் இயக்குநர் கரீம் மொரானிக்கும் இன்று ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டிருந்தது. ஆனால், மருத்துவ சிகிச்சை காரணங்களைக் காட்டி அவர் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை.
மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி சார்பில் முன் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நீதிமன்றத்தில் கனிமொழியுடன் திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா, டி.கே.எஸ். இளங்கோவன், திமுக அமைச்சர்கள் பழனிமாணிக்கம், நெப்போலியன் மற்றும் காந்தி செல்வன் ஆகியோரும், கனிமொழியின் கணவர் அரவிந்தன், ராசாத்தி அம்மாளும் உடன் வந்தனர்.
எம்.பி.!
பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜரான கனிமொழி சிரித்த முகத்துடன் காரில் இருந்து இறங்கினார். அவருடன் இருந்த திமுக அமைச்சர்கள், எம்.பி.க்கள் கலக்கத்துடன் இறுக்கமாகவே காணப்பட்டனர். அப்போது, திமுக எம்.பி. ஆதி சங்கர் திடீரென மயங்கி விழுந்தது சற்று பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆரம்பிக்கவே இல்லை அதுக்குள்ளேயே தொடங்கியாச்சா
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக