01 ஏப்ரல், 2011

வன்னியில் முதலிரவு-உண்மைக்கதை

இந்தக்கதை 2006 தொடக்கம் 2009 வரை வன்னியில் உள்ள ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் நடந்த உண்மைக்கதை..ஆகஸ்ட் 2008 எனது மூஞ்சிபுத்தகத்தில் எழுதியது..மீள் பிரசுரம் உங்களுக்காக..

முகம் மலர்ந்து தன் குழந்தையுடன்
வாசலில் கதலி வாழை
வந்தோரை வரவேற்கும் கும்பம்
சந்தனம் குங்குமம் கற்கண்டு
மங்களகரமாய் ஒலிக்கும்
மேளமும் நாதஸ்வரமும்
புன்னகையுடன் உற்றார் உறவினர்
சுபமுகூர்த்தத்தில் தாலி மணமளின் கழுத்தில் ஏறியது
தென்றலின் வருடல் மார்கழி இரவின்
குளிரை நினைவு படுத்த
தோழிகளின் கிண்டல்களுடன்
மணமகள் முதலிரவு அறைக்குள்ளே
நுழைந்தாள் மண்மகள்
பல எதிர்பார்ப்புகளுடன் மாப்பிள்ளை
பால் செம்பை வைத்து விட்டு
மணமகனின் கால்களில் பணிந்தாள்
அவளை ஆசீர்வதித்து தூக்கி விடுவதற்காக
குனிந்த்தான் மணமகன்



ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் ஹலொ "கிலோ ஸீரா பேஸ் சாளி ஓவர்"
என்று அருகில் இருந்த தொலைதொடர்புகருவி அலறியது
ஓடி சென்று அதை எடுத்தாள்
சாளி ஓவர் சொலுங்கோ ஓவர்
அக்கா ஆமி மூவ் எடுக்க போறான் போல
உடன ரீமை அனுபுங்கோ ஓவர்

அங்கே என்ன நடக்குது எண்டு லீமாக்கு
தெரியபடுத்துங்கோ ஓவர்.

அக்கா இங்கே இப்ப உடனே 15 பெட்டி சமாதானமும்
5 ஆமையும் வேணும் ஓவர்

நீங்க அவன் வாற ரூட்டில பொன்னம்மானையும்
ராகவனையும் zig zag model இல வையுங்க ஓவர்
பின்னுக்கு போய் உங்கட கட் அவுட் ஜி பி ஸ் குடுங்கோ ஓவர்

இப்படி நீண்டுகொண்டே போனது
முதலிரவு அறை கட்டளைபீடமானது
மணமகன் ................
இப்போ வன்னியில் காத்திருப்பு
பெண்ணுகில்லை ஆண்களுக்கு தான் !!!!!!!!!!!!!!!!!

முக்கிய குறிப்பு ராகவன்,பொன்னம்மான்,ஆமை,சமாதானம் என்ற வார்த்தைகள்
வன்னிக்களத்தில் முக்கியமானவை அவை பற்றீ தெரிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்

கருத்துகள் இல்லை: