13 ஏப்ரல், 2011

அமைச்சரின் ஆபாச பேச்சு செல்போன்களில் உலா

சேலம்:சேலத்தில் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம்,அ.தி.மு.க.பொதுச் செயலர் ஜெயலலிதா குறித்து ஆபாசமாகப் பேசியவை செல்போன்களில் உலா வரத் தொடங்கியுள்ளதால் அ.தி.மு.க.வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

சட்டசபை தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.மற்றும் தி.மு.க.வினர் செல்போன் மூலம் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.கடந்த ஐந்து ஆண்டுகளில் தி.மு.க.ஆட்சி காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வளர்ச்சித் திட்டங்கள்,பயனாளிகளின் புள்ளிவிவர பட்டியல் ஆகியவை,எஸ்.எம்.எஸ்.மூலமாக அனுப்பப்பட்டு வருகின்றன.அ.தி.மு.க.வினர் தி.மு.க.வின் குடும்ப அரசியல்,இலங்கைத் தமிழர் பிரச்சினையில் மௌனம்,ஸ்பெக்ட்ரம் ஊழல் உள்ளிட்டவற்றை கிண்டல் செய்து எஸ்.எம்.எஸ்.அனுப்பி வருகின்றனர்.

கடந்த 9 ஆம் திகதி நிருபர்களை சந்தித்த அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்திடம் சங்ககிரியில் ரவுடிகள் தங்க வைக்கப்பட்டிருக்கின்றனரா என்று கேள்வி எழுப்பினர்.அதனால் ஆவேசமடைந்த அமைச்சர் ஜெயலலிதாவைப் பற்றி ஆபாசமாக பேசினார்.அமைச்சரின் பேச்சைக் கேட்டு பத்திரிகையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.அப்போது அமைச்சர் பேசிய ஆபாச பேச்சு தற்போது செல்போன்களில் எம்.எம்.எஸ்.மற்றும் புளுடூத் மூலமாக வேகமாக பரவி வருகின்றன.தி.மு.க.வினரின் நடவடிக்கையால் சேலம் அ.தி.மு.க.வினர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

2 கருத்துகள்:

சி.பி.செந்தில்குமார் சொன்னது…

ஆபாசமா பேசினார்.. ஓக்கே.. என்ன பேசினார்? ஹி ஹி

மன்மதகுஞ்சு சொன்னது…

அதைத்தானே அண்ணே நானும் தேடிகிட்டு இருக்கேன்... உங்கள் யாருக்கும் கிடைச்சா சொல்லுங்கோ அதில என்ன இருக்கு எண்டு..