22 ஏப்ரல், 2011

ரைம்ஸ் சஞ்சிகையின் பட்டியலில் இருந்து போர்க்குற்றவாளி மகிந்த ராஜபக்ஸே நீக்கம்

உலகில் மிகவும் வலிமை மிக்க மனிதர்களை தெரிவுசெய்வதற்கு ரைம்ஸ் சஞ்சிகை நடத்திய கருத்துக்கணிப்பின் இறுதிப்பட்டியலில் இருந்து சிறீலங்கா அரச தலைவர் மகிந்தா ராஜபக்சாவின் பெயர் நீக்கப்பட்டுள்ளது.

2011 ஆம் ஆண்டுக்கான தெரிவுகளுக்காக ரைம்ஸ் சஞ்சிகை மேற்கொண்ட கருத்துக்கணிப்பில் நான்காவது இடத்தில் மகிந்தா இருந்தபோதும் தற்போது இறுதிப் பட்டியலில் இருந்து அவரின் பெயர் நீக்கப்பட்டுள்ளது. இந்த முடிவை சஞ்சிகையின் ஆசிரியர் பீடம் மேற்கொண்டுள்ளது.

இணையத்தளம் ஊடகா எகிப்தில் புரட்சியை ஏற்படுத்தி அதிபர் முபாரக்கை பதவியில் இருந்து நீக்கிய வேல் கோனிம் என்ற செயற்பாட்டாளர் முதலாவது இடத்திலும், அமெரிக்க பொருளியலாளர் ஜேசப் ஸ்ரிக்லிஸ் இரண்டாது இடத்திலும், மற்றுமொரு அமெரிக்கர் றீட் காஸ்ரிங் மூன்றாவது இடத்திலும் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர்.

அரசியல்வாதிகளில் ஜேர்மன் அதிபர் அஞ்சலா மேர்கேல் எட்டாவது இடத்திலும், பர்மாவின் எதிர்;க்கட்சித் தலைவர் ஆங் சான் சூகியூ 18 ஆவது இடத்திலும் உள்ளனர்.

விளையாட்டுத்துறையில் இந்திய துடுப்பாட்ட அணியின் தலைவர் மகேந்திரா சிங் டொனி 52 ஆவர் இடத்தை கைப்பற்றியுள்ளார்.

கருத்துகள் இல்லை: