06 ஏப்ரல், 2011

நடிகை சுஜாதா இவ்வுலகை விட்டு நீங்கினார்

1952ம் ஆண்டு இலங்கையில் பிறந்த அவரது தாய் மொழி மலையாளம் ஆகும்.
கே.பாலசந்தரின் அவள் ஒரு தொடர்கதை மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்டோருடன் நடித்துள்ள இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தியில் நூற்றுக்கணக்கான படங்களில் நடித்துள்ளார்.


அந்தமான் காதலி, விதி ஆகிய படங்கள் இவருக்கு பெரும் பெயர் வாங்கித் தந்தன. அதிலும் விதி படத்தில் இவரது வக்கீல் பாத்திரத்தில் வாதாடியதை அனைத்து பெண்களும் இவருக்கு ரசிகையானார்கள் .கடைசியாக வரலாறு என்ற படத்தில் நடித்த சுஜாதா அதற்குப் பின் பட வாய்ப்புக்களை ஒப்புக் கொள்ளவில்லை. சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர் இன்று சென்னையில் தனது வீட்டில் மரணடைந்தார்.

கருத்துகள் இல்லை: