25 ஏப்ரல், 2011

ம் கிளம்புங்கள் டெல்லிக்கு ராஜினாம செய்வதற்கு-கருணாநிதி அமைச்சர்களுக்கு ஆர்டர்

2ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு முறைகேடு வழக்கில் சிபிஐ இன்று தாக்கல் செய்த துணை குற்றப் பத்திரிகையில் முதல்வர் கருணாநிதியின் மகள் கனிமொழியின் பெயர் இடம் பெற்றுள்ளது. அதே போல கலைஞர் தொலைக்காட்சியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரும் இடம் பெற்றுள்ளது.


இதனை அறிந்த கருணாநிதி கூட்டணி தர்மத்தை காங்கிரஸ் மீறிவிட்டது என்று சகபாடிகளிடம் கவலைப்பட்டார்.சென்ற தடவை ராஜினாமா செய்ய தமிழக மத்திய அமைச்சர்கள் டெல்லி சென்ற போது 2 ஜி மணியை லவட்டிய கனிமீதும் திருமது தயாளுஅம்மாள் மீதும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என சோனியா அவரின் மாமியார் இந்திராகாந்தி மீது சத்தியம் பண்ணி கருணாநிதியை சமாதானப்படுத்தி விட்டு இப்போ சத்தியத்தை மீறியுள்ளதால் கருணாநிதி மிகவும் கோபம் அடைந்துள்ளார்.

நம்பியவர்களை நாம் மட்டும்தான் நட்டாற்றீல் விடலாம்.ஆனால் நாங்கள் நம்புவர்கள் மட்டும் எங்களை எப்போதும் காப்பாற்றவேண்டும் என்றும் கூறியுள்ளது அரசியல் வட்டாரத்தில் பாரிய சூட்டைக்கிளப்பிவிட்டுள்ளது. எனவே சோனியாவுக்கு இந்த தடவை ஸ்ராங்காக பதில் சொல்லவேண்டும் என கருணாநிதி தனது சக அலிபாபாக்களுக்கு கட்டளையிட்டுள்ளார்.ஆனாலும் அந்த அலிபாபாக்கள் தமக்கு நெருங்கியவர்களிடம் கூட்டணீயில் இருக்கும் போதே அந்தம்மா வேட்டியை உருவுது...
ராஜினாமா பண்ணீவிட்டால் ஜட்டியையும் சேர்த்து உருவப்போகுதே என்று கவலை தோய்ந்தமுகத்துடன் தெரிவித்துள்ளனர்.

அதே நேரத்தில் இன்றைய குற்றப் பத்திரிக்கையில் முதல்வரின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் அதில் இடம் பெறவில்லை.இதனால் கூட்டுக்குடும்பத்தில் விரிசல்விழுந்துள்ளது.இதனால் திமுக தொண்டர்கள் வெகுண்டு எழுந்துள்ளனர்.குடும்பத்தில் பிரிவினை உண்டாக்கிய ”கோடாரி காம்பு” சி.பி.ஐ என்று பலவர்ணத்திலும் மிக நீளமான
பானர்களை பெருந்தெருக்களில் வைப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக குமர்ப்பெடியன் குஞ்சுமணீ தெரிவித்தார்.

இதனை கேள்விப்பட்ட ஆ.ராசா அவர்கள் கனி'யிருப்ப காய் கவர்ந்தற்று போல சிறைச்சாலையில் இருந்து கொண்டே சூரியன் எம்.எம் இல் "தெய்வம் தந்த வீடூ ஜெயிலு இருக்கு "என்ற பாடலை கனிக்காக டெடிகேட் செய்தார்..

பாபா காலி,பாப்பா குற்றவாளி, கல்மாடிக்கு களி ,மு.க.வுக்கு கிலி
மானாட மைலாட கலா மாஸ்டர் பாஷைல சொன்னா சும்மா கிழி..கிழி..கிழி..

பேசாம சென்னையிலேயெ ஒரு பிராஞ்ச் ஆரம்பிச்சுட சொல்லுங்கப்பா.. எல்லாரும் திஹாருக்கு போயிட்டா சிங்க்காரச்சென்னையை யாரு ரன் பண்ணுறது ?

1 கருத்து:

மணிப்பக்கம் சொன்னது…

அருமையான பதிவு!
ராசாவுக்கு தனியாக இருக்க போரடிக்குதாம், அதான் ராணியார அனுப்ப ஏற்பாடாவுது!