04 ஏப்ரல், 2011

அடுத்தடுத்த அதிர்ச்சி செய்திகளால் மக்கள் அதிர்ச்சி..

தற்போது சன் டீவியிலும் கலைஞர் டீவியிலும் விஜயகந்தின் நேற்றைய தேர்தல் பிரச்சாரத்தை
பிளாஷ் நியூசாக ஒளிபரப்பிக்கொண்டிருக்கிறார்கள்.. ஏன் இந்த் கொலை வெறி என்று பார்த்தால் அந்த காணொளியில் விஜயகாந் பின்வருமாறு பேசுகிறார்.

" அதிமுக வின் கொள்கைபரப்புச்செயலாளர் இப்போது ஜெயிலில் இருக்கிறார் ( மக்கள் கைதட்டுகிறார்கள் ) அதிமுகவின் கொள்கையே இன்று ஜெயிலில் இருக்கிறது ஆனால் ராசா இன்று .... திடீரென்று நிறுத்திவிட்டு " நான் தப்பா சொல்லிகிட்டிருக்கிறென் போல கிடக்கு என்கிறார்" அவருடைய பேச்சு மிகவும் உளறாலாக இருப்பதை குழந்தை கூட தெரிந்துகொள்ளும் அளவுக்கு இருக்கிறது.

அடுத்ததாகா நாங்கள் அனைவரு இந்தியா உலககிண்ணக்கோப்பையை வென்று விட்டது என்று ஆனந்தகூத்தில் இருக்க தற்போது வெளியான செய்தி அனைவரையும் அதிச்சியில் ஆழ்த்தியிருக்கிறது.
இந்திய அணீயிடம் கொடுக்கப்பட்ட உலக்கிண்ணம் போலியானது உண்மையான கிண்ணம் லண்டனில் இருந்து மும்பாய்க்கு கொண்டு வரப்பட்டபோது அதற்கான வரியை செலுத்தவில்லை என்பதற்காக அந்த கிண்ணத்தை டுபாயில் உள்ள ஜ.சி.சி யின் தலைமை அலுவலகத்துக்கு திருப்பி அனுப்பிவிட்டார்களாம் ( கடமை உணர்ச்சியை பார்க்கும் போது
என் உச்சி மண்டையில சுர்ர்ர்ர்ங்குது)


இந்தோனேசியாவின் தீவு ஒன்றில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது . இது 7.1 அளவில் பதியப்பட்டுள்ள்தாகவும் தெரிவிக்கப்படுகிறது.

லாஸ்ட் பட் நொட் லீஸ்ட் ..

உலகக் கோப்பையை வென்றெடுத்துள்ள இந்திய அணி வீரர்களுக்கு மட்டுமே நான் நிர்வாணமாக காட்சி தருவேன். எல்லோருக்கும் நான் நிர்வாணமாக முடியாது எனது பல்டி அடித்துள்ளார் மாடல் அழகி பூனம் பாண்டே... அப்போ "அஞ்சரைகுள்ள வண்டி இரவுக்காட்சி " அவிங்களுக்கு மட்டும்தானா..என்ன கொடுமை சார் இது...
அவிங்கட குடும்பத்தில குழப்பம் உண்டாக்கிறதிலையே குறியா இருக்காய்ங்க..

கருத்துகள் இல்லை: