27 ஏப்ரல், 2011

கனி களி தின்பாரா இல்லையா - சூதாட்டம் சூடு பிடித்ததால் IPL சோபையிழந்தது

இன்றைய ஹாட் டாபிக் கனிமொழிபற்றிதான்.
டிவிட்விட்டர்கள்,மூஞ்சிப்புத்தகம்,இணையத்தளங்கள் என்று ஆல்ரவுடராக வலம் வருகிறார் கனியக்கா. இது போதாது என்று ஜ.பி.எல் இல் களமிறங்கியிருந்த சூதாட்டக்காரர்கள் அனைவரும் இந்த மேட்டரை கையில் எடுத்திருக்கிறார்கள்.அங்கே பிஸினெஸ் டல்லடிப்பதாலும் வரலாற்று பக்கங்களில் இப்பிடியான திமுக- காங்கிரஸ் இழுபறிகளால் ஏற்கனவே நிரப்பப்பட்டிருபதாலும் இங்கே எப்பிடியும் கொள்ளை லாபம் பார்க்கலாம் என முடிவெடுத்து இங்கே களமிறங்கியுள்ளார்கள்.இதனலா ஜ.பி.எல் பக்கம் சோபையிழந்துள்ளதாக நமது உளவுத்துறை செய்தியாளர் குமர்ப்பெசியன் குஞ்சுமணி தெரிவித்தார்.


இதனை அறிந்த ஒரு சில டீவி சனல்கள் மக்கள் மத்தியில் கனி கைது செய்யப்படுவாரா இல்லையா என்று கருத்துகேட்டறிந்துள்ளன.அவை உங்களுக்காக


காடுவெட்டி கோவிந்தன்
:தானை தலைவரையும், வருங்கால தலைமையையும் நான் மிகுந்த அறிவாளிகள் என் நினைத்தேன். உண்மையில் இந்தியாவிலயே மிகுந்த அறிவாளி லாலு பிரசாத் யாதவ் ஒருவர் தான். இன்னும் மண்டை குடைந்து ஒவ்வொரு மாடாக பல் பிடித்து லாலுக்கு எதிரான ஆதாரம் தேடி கொண்டு இருக்கிறார்கள். இவர்கள் எல்லோரும் அவரிடம் பயிற்சி எடுப்பது நல்லது.

ஓட்டேரி நரி:ஒரு "மாணவன் பெயில் ஆனதற்கு ஸ்கூல் பிரின்சிபாலை அடிப்பீர்களா" கண்டிப்பாக தலைமை ஆசிரியர் சரியாக இருந்தால் ஆசிரியர் சரியாக பாடம் எடுப்பார்...எந்த மாணவனும் பெயில் ஆக மாட்டன்...எனவே admk வை குறை கூறுவதை விட்டு உங்கள் தலைவரை குற்றங்களை ஒப்புக்கொண்டு சரணடைய சொல்லுங்கள்.......

பான்பராக் ரவி:இதெல்லாம் பொய் புகார். கலைஞர் டிவி க்கு கொடுத்த பணத்துக்கு வட்டியும் முதலும் திருப்பி கொடுக்கப்பட்டுவிட்டது. கனிமொழிக்கு சார்ஜ் சீட் வெறும் மிரட்டல், வரும் ஆட்சியில் பங்கு கேட்பதற்காக, காங்கிரஸ் விடுத்துள்ள மிரட்டல். இதற்கெல்லாம் பயப்பட மாட்டார் எங்கள் தலைவர் கலைஞர். அவர் தண்டவாளத்தில் தலை வைத்து படுத்த மாபெரும் வீரர்.( ஆமா தலிவர் தலைவைத்து படுத்தது சினிமாவுக்காக செட் போட்ட ரயில் தண்டவாளதிலாமே)

மதுரை தோத்தகிரி:பேசாம நாம எல்லாரும் கூண்டாக போயி சோனியாஜி மற்றும் manmohanji காலில் விழுந்து எப்படியாவது ராசாவையுuம் கனியையும் காப்பாற்றவேண்டும். அவர்கள் நம்மை எவ்வளவு அடிச்சாலும் நாம் மனம் தளர கூடாது. விடா முயற்சியை கைவிடாமல் தொடர்ந்து காலில் விழுவதில் நாம் எல்லாரும் Ph.D பட்டம் பெற்றவர்கள். மேலும், ராமதஸையையும் குருமா வையும் சோனியாஜி காலில் விழ வைக்க வேண்டும். மீறினால் கட்சியில் இலிருந்து அனைவரும் நீக்கபடுவார்கள்.

குடல் புடுங்கி கோடீஸ்வரன்:அப்ப ஊழல் பண்ணனும்னா வயதான நம்ம அம்மா , பாட்டிய பினாமியா யூஸ் பண்ணி அவங்க பேர்ல அக்கவுன்ட்லாம் திறந்து என்ன வேணா தில்லு முல்லு பண்ணலாமா? சொத்து கணக்கு கேட்டா எல்லா சொத்தும் வயதான மனைவி, அம்மா , பாட்டி பேர்ல இருக்கு அவ்ங்க தனியா தொழில் செஞ்சு சம்பாதிக்கறாங்கன்னு சொல்லிடலாம். மனைவி, அம்மா , பாட்டி ய கேட்டா அவங்களும் தான் வயசானவங்க சொன்ன எடத்துல கையெழுத்து போட்டேன், தனக்கு ஒண்ணும் தெரியாதுன்னு சொல்லி தப்பிச்சுக்கலாமா? இப்படி எல்லாம் பண்ணாதான் நம்மள இல்ல நம்ம வயசான அம்மா , பாட்டி ய சும்மா உட்டுருவாங்களா?

இறுதியாக நம்ம தமிழ்காத்த தானைத்தலைவர் தமிழ்செம்மல் தமிழர்களைக்காக்கும் கட்டுமரம் கண்ணகியை வாழ்வைத்த குடும்பத்தலைவன் இலவசத்துக்கே பெருமை சேர்த்த கருணாநிதி அவர்கள் பின்வருமாறு கூறினார்

"அருமையாய்க் கிடைத்திட்ட இக்கனியாட்சி என்றால் நாடு வறுமை தீருமென்று அடவியில் துறவி சொன்னார் தான் வாழக் கருதாமல் தமிழ்த்தாய் வாழ்த்த தந்ததுதான் கருத்து தந்த நெல்லிக்கனி எம் தலைவி செம்மொழி கனி எம் இனத்தின் தமிழ் ஆர்வம் போற்றி அவ்வை தந்த நன்றிக்கனி தங்க தலைவி அருட்கனி. விழிகவலை கொண்டால் வள்ளுவதுகன்றோ பழி. விழிகண்ணீர் கொண்டால் தமிழுக்கன்றோ பழி. பகை விலக்கி வெற்றி கொள்ள ஆதிசக்தி துணை வருவாள்.

எலே அழகிரி போடுறா மதுரை பீச்சில் டெண்டை ..மைக் பிடிக்க

கருத்துகள் இல்லை: