06 ஏப்ரல், 2011

மகிந்த: பிறீயா இருந்தா வாடா மச்சான் பூனம் பாண்டேயை பார்க்கலாம்ன்னு கூப்பிட்டாய்ங்க



பாகிஸ்தான் -இந்தியா கிரிக்கெட் போட்டியின்போது இந்திய பிரதமர் மன்மோகன்சிங்
பாகிஸ்தான் பிரதமர் கிலானியை போட்டியைக்காண வருமாறு அதிகாரபூர்வமாக அழைப்பு விடுத்திருந்தார்.அதனைய்ம் ஏற்று பாகிஸ்தான் பிரதமர் கிலானியும் வருகை தர பலத்தபாதுகாப்பு போடப்பட்டு அவருக்கான சகல மரியாதைகளும் கொடுக்கப்பட்டு இரு அணிகளும் அறிமுகம் செய்துவைக்கப்பட்டது அனைவருக்கும் தெரிந்ததே..அத்துடன் அன்று பாகிஸ்தானை வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் கிலானி தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். ஆனால் இறுதிப்போட்டியில் இந்தியாவும்- இலங்கை அணியும் மோதவுள்ள கணத்தில் இலங்கை அதிபர் மகிந்த தனது வழமையான ஸ்டண்டை அடிக்கத்தயாரானார்.அனைத்து இலங்கை மக்களும் இந்த மாத கடைசியில் ஜ.நா சபையால் சமர்ப்பிக்கப்படப்போகும் இலங்கையின் யுத்தக்குற்றம் சம்மந்தமான அறிக்கை பற்றிய செய்திகளை மூடி மறைப்பதற்காக இந்த இறுதிப்போட்டியை மக்கள் மத்தியில் ஒரு வெறியாகவே வளர்த்துவிட்டார். அனைத்து மக்களும் இலங்கை அணிக்காக பேரணீகளை நடத்தவேண்ட்டும் ,பிரார்த்தனை பண்ணவேண்டும் என்று. ஏனெனில் அவருக்குத்தெரியும் தமிழ்மக்கள் இந்திய அணீயைத்தான் எப்போதும் ஆதரவு கொடுப்பார்கள் என்று. அது ஏனென்பதை எனது இந்த பதிவில் குறிப்பிட்டிருந்தேன் .


தமிழர் பிரத்தேசங்களில் இராணுவத்தினராலும் பொலிஸாராலும் மக்கள் கட்டாயப்படுத்தப்பட்டார்கள் இலங்கை அணிக்கு ஆதரவு தெரிவிக்க சொல்லி.. அனைத்து இடங்களிலும் சிங்கக்கொடிகள் பறக்கவேண்டும் என்றும் கட்டளையிடப்பட்டது.
இதைவிட மகிந்தர் தன்னிச்சையாக இந்தியா சென்று போட்டியை பார்வையிட விரும்பி அதற்கான போட்டி இருக்கைகள் 30 இனை ஒதுக்குமாறு கேட்டிருந்தார் ,ஆனால் இந்திய கிரிக்கெட் வாரியம் 10 இருக்கைகளை மட்டுமே ஒதுக்கியிருந்தார்கள்.

இலங்கையின் காலி முகத்திடலில் மிகப்பிரமாண்டமான திரையில் போட்டியினை காண்பிப்பதற்கான ஒழுங்குகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அத்துடன் 4 க்கும் மேற்பட்ட திரைகள் போடப்பட்டன.சிங்கள மக்களும் ஏதோ 3 ம் உலகப்போரே நடக்கப்போறமாதிரியும் சிங்கள சிங்கங்கள் ஆடுகளத்தில் களமாடி சாதனைபடைக்கப்போவது மாதிரியும் பில்டப் கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

ஆனால் மகிந்த போய் விமான நிலையத்தில் இறங்கியதும் அவரை வரவேற்க பிரதமர் மன்மோகன் சிங் அல்லது ஜனாதிபதி பிரதீப பட்டேலோ செல்லவில்லை .இது சிங்க தளபதிக்கு முகத்தில சப்புன்னு விழுந்த முதல் அறை.அடுத்ததாக இலங்கை அணியினரை இவர் சந்திப்பதற்க்கு கோரிய போது அதற்கான அனுமதி மறுகப்பட்டது இரண்டாவது.


மூன்றவது போட்டி தொடங்கும் போது மரியாதக்காச்சும் கூப்பிடுவாய்ங்க என்று ஏங்கிக்கொண்ட்ருந்தவருக்கு அவரை மைதானத்துக்கு கூப்பிடாமலையே அணிகள் ஆடுகளத்தில் களமாடத்தொடங்கியது 3 வது அறை.

இதெல்லாம் சரி ,ஆரம்பத்தில் சரிவு கண்ட இலங்கை அணீயை மஹேல ஜெயவர்த்தனே
அடித்து ஆடி 274 ரன்களுக்கு இலங்கை அணியை நிமிர்த்திய போது .. இந்தியாவுக்கு தலையிடிதான் இந்த ஓட்ட எண்ணிக்கை என்று நம்து உள்ளூர் வானொலிகள் கொடுத்த காசுக்கு கூவிக்கொண்டிருந்தன.

அதுக்கு மேலாக 2 வது பந்துவீச்சில் சேவாக்கும் 18 ஓட்டங்களுடன் சச்சினும் ஆட்டமிழந்தபோது பார்க்கணுமே இவர்களின் கொந்தளீப்பை

ஆனால் நேரம் போக போக ஆட்டத்தின் திசை மாறத்தொடங்கியது..அவித்துவிட்டு ரேடியோவில் கூவிக்கொண்டிருந்தவனெல்லாம் அடக்கி வாசிக்கத்தொடங்கினான்.கடைசியில்
டோனி அந்த சிக்சரை அடித்த போது குண்டூசி விழுந்தால் கூட சத்தம் கேட்குமளவிற்கு
அமைதி காத்தார்கள் சிங்கபடையின் வானரங்கள்..

இந்திய புலிகளின் அன்றைய இரவு உணவுக்கு சிங்கங்களின் கால் சூப் பரிமாறப்பட்டது.

ஆனால் இந்த வெற்றியை தமிழ் பிரதேங்களில் பலர் வீட்டினுள்ளேயும் சிலர் வெளியேயும் கொண்டாடினார்கள்...மரண அடி வாங்கியதை இலங்கையின் அனைத்து மொழிப்பத்திரிகைகளும் ஒரு வரிகூட எழுதவில்லை. இந்தியா கோப்ப்பையை வென்றது என்று கூட செய்தி போடவில்லை.. இதிலிருந்தே தெரிகிறது எந்தளவுக்கு இனத்துவேசமும் பத்திரிகைசுகந்திரமும் இருக்கிறது என்பதை இதுவே இலங்கை அணீ வென்றிருந்தால் முழுப்பக்கமுமே கிரிக்கெட் கிரிகெட் கிரிகெட் தான்.

இதிலும் நேற்று மகிந்த தெரிவித்த கூற்றுக்கு சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை.
20 மில்லியன் எமது மக்கள் 1.2 பில்லியன் இந்திய மக்களுக்கு நல்லதொரு களிப்பான
சந்தோசமான தருணத்தை கொடுத்திருக்கிறார்கள் என்று.. பயபுள்ள விழுந்தும் மீசையில மண்ணு படலங்கிறானே ...

ஆனாலும் போட்டி முடிவடைந்தும் கூட பல மணித்தியாலங்கள் மைதானத்தை சுற்றி சுற்றி பார்த்துக்கொண்டிருந்தாராம் தகப்பனும் மகனும்... க்டைசி வரைக்கும் கண்ணுல காணலையே என்று மனவருத்தப்பட்டுக்கொண்டு பின்னர் வெளியேறினார்..
நாடு படுற பாட்டில நாய் தொதல் கேட்டிச்சாம்

ஆனால் போய் வாங்கிக்கட்டிகொண்ட் வந்ததை வெளியில அடக்கி வாசித்திருக்கிறார்கள்.
" நாங்கெல்லாம் வாண்ட்டட்டா போய் அடிவாங்குவோமில்ல..."

கருத்துகள் இல்லை: