21 ஏப்ரல், 2011

தங்கபாலுவின் அறிக்கையால் தமிழகத்தில் பதற்றம்

40 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சிக்கும், சோனியா குடும்பத்திற்கு விசுவாசமாக உள்ளேன். கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபடுவோர் என் நண்பர்களாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளேன்.எல்லா மாவட்டத்திலும், வட்டார அளவிலும் எனக்கு ஆதரவாளர்கள் உள்ளனர். எனக்கும் தொண்டர்கள் பலம், ஆள்பலம் உண்டு. ஆனால், நான் அமைதியாகவும், அடக்கமாகவும் உள்ளேன். தமிழகம் முழுவதும் எனது ஆதரவாளர்கள் கொந்தளிப்புடன் உள்ளனர். அவர்களை நான் அடக்கி வைத்துள்ளேன். நான் ஒரு அறிக்கை வெளியிட்டால் தமிழகமே பற்றி எரியும். ஆனால், எனக்கு கட்சிதான் முக்கியம். தொண்டர்களை தவறாக பயன்படுத்த மாட்டேன் என்று தங்கபாலு தெரிவித்ததன் காரணமாக அவரின் கொடும்பாவிகள் லோடு கணக்கில் ஏற்றப்பட்டு தமிழகத்தின் பலபாகங்களிலும் எரிக்கப்படவுள்ளன. இதனால் நகரத்தில் தங்கபாலுவின் கொடும்பாவி பொம்மைக்கு பலத்த மவுசு ஏற்பட்டுள்ளது.



பல பெண்கள் தமது வீட்டில் காஸ் தீர்ந்து போயுள்ளதால் தங்கபாலு வீடு முன்பாக கைகளில் அரிசியும் பானையும் கொண்டுவந்து நின்று அடுப்பில் உலை வைக்க வாரிகளா என்று கோஷம் போட்டுக்கொண்டிருப்பதால் போக்குவரத்து ஸ்தம்பித்துள்ளது.

இதனைக்கேள்விப்பட்ட கலைஞர் கருணா தங்கபாலுவுக்கு அனுப்பியுள்ள கடித்ததில் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார் "செரி செரி எரிக்கலாம் எரிக்கலாம் இப்போ அழுவாம செமத்தா விளையாடணும் சண்ட போட கூடாது...........அப்போ தான் உனக்கு அங்கிள் பொம்ம கார் பொம்ம ஸ்கூட்டர் வாங்கி தருவேன்............ புள்ளையே திட்டாதிங்கே ......கொழந்த பாவம் ......... தெரியாம செஞ்சுட்டான்"

1 கருத்து:

காங்கிரஸ்வாதி சொன்னது…

இவனை போல் இருப்பவர்களால்தான் காங்கிரஸ்க்கு கேடு. தமிழ்னாடே பற்றியெறியும் கொடும்பாவினால்... நல்ல ஜொக்கர்....!!