06 மார்ச், 2011

ஸ்பெக்ட்ரம் ஊழலில் வந்த பணத்தில் எந்திரனுக்கும் முதலீடு..

தொகுதி உடன்பாட்டுக்காக ஆ.ராசாவை பகடைக்காயாக வைத்து மங்காத்தா விளையாடி வந்த காங்கிரஸ் கட்சிக்கு தடாலடியாக கூட்டணியில் இருந்து விலகி செக் வைத்திருக்கிறார் கருணாநிதி.பல அலைகழிப்புக்கள்,படியாதா பேரமென ஜவ்வாக இழுபட்டுக்கொண்டிருந்த இந்த இழுபறி இப்போ முடிவுக்கு வந்திருப்பது பலருக்கு அதிர்ச்சியையும் ,ஒரு சிலருக்கு ஆப்பையும் தி.மு.க விற்கு கலக்கத்தையும் கொடுத்திருக்கிறது.கூட்டணியில் இருந்து கொண்டே ஸ்பெக்ட்ரம் ஊழல் விடயத்தில் ராசா ராஜினாம,கைது,கலைஞர் டீ.வி ரெய்டு எண்டு டெயிலர் ஓட்டியவர்கல் இனிமேல் எப்படியெல்லாம் மெயின் பிக்சர் ஓட்டப்போகிறார்களோ எண்டு கதி கலங்கிப்போயிருக்கிரார்கள் தி.மு.க வினர்.. ஆனாலும் பயத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல் நாங்களும் சப்பாத்தியில உப்பு போட்டுத்தான் திங்குறோம் குட்டகுட்டக் குனிய மாட்டோம்னு பேட்டி கொடுத்து காங்கிரசை உசுப்பேத்தியிருக்கிறார்.



ஆனாலும் ஏற்கனவே ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்குபற்றியவர்கள் ,அந்த ஊழல் பணத்துக்கு
என்ன நடந்தது என்பதை 60% மான தகவல்களை சி.பி.சி.ஜ.டியினர் கலெக்ட் பண்ணி வைத்திருந்தனர்.கூட்டணி தொகுதி பங்கீட்டில் துருப்புச்சீட்டாக பயன்படுத்தாலம் என நினைத்திருந்தார் சோனியா,இனிமேல் வேலைக்கு ஆகது என்பதால் முழுப்பலத்தையும் உபயோகித்து திமுகவின் பலத்தை சிதைக்க ஸ்பெக்ட்ரம் விடயத்தை ஊதிப்பெரிதாக்க
அனைத்து ஆர்டர்களை கொடுத்துவிட்டார் எனத்தெரிகிறது.


இந்த விடயத்தில் சூரிய தொலைக்காட்ச்சி நிறுவனத்து உரிமையாளருக்கு லம்பா ஒரு சூட்கேஸ் கல்லாகட்டப்பட்டிருக்கிறது.இந்தப்பணத்திலேயே மிகப்பிரமாண்டமாக எந்திரன் படம் தயாரிக்கப்பட்டிருந்ததாகவும் அதற்கான ஒரு சில உறுதிப்படுத்தப்பட்ட ஆவணங்களை
சி.பி.சி.ஜ.டியினர் வைத்திருப்பதாகவும் சொல்லப்படுகிறது.இனிவரும்காலங்களில்
மத்தியில் ஆட்சியில் பங்கு வைத்துக்கொண்டு ஆட்டம் போட்ட தி.மு.க வின் அமைச்சர்கள்
மீதும் கட்சியின் மீதும் ஆக்ஸன் தொடங்கலாம் என அச்சம் நிலவுகிறது.




இதனால் வெகுவிரைவில் சன் மற்றும் கலைஞர் தொலைக்காட்சியில்
ராத்திரி நேரத்தில் படுக்கையில் கிடந்தவரை அலேக்காக தூக்கியது சி.பி.ஜ
என்று பிளாஸ் நியூஸ் போட்டு " அய்யோ கொல்லுறாங்க அய்யோ கொல்லுறாங்க " என்டு
இளைஞனுக்கு கதை வசனம் எழுதிய கலைஞர் அந்த வசனத்தை டப்பிங் இல்லாமல் தானாகவே பேசுவதையும் குளோசப்பில் காட்டப்போகிறார்கள்...
முடிஞ்சா ஏதாச்சும் பிட்டை சேர்த்துப்போடுங்க மக்கள் அப்பத்தான் தொடர்ந்து பார்த்து
ரெரராவாய்ங்க...

பத்த வைச்சிட்டியே பரட்டை....

1 கருத்து:

ramalingam சொன்னது…

அன்றைய நாடகத்தில் மாறன் கூட இருந்தார். இன்றைக்கு மாறன்கள் இருக்கின்றனர்.