15 மார்ச், 2011

லண்டன் செல்லும் சோனியாகாந்திக்கெதிராக புலம்பெயர் தமிழ்மக்கள் ஆர்ப்பாட்டம் செய்ய ஏற்பாடு



நாளை மறுதினம் லண்டனில் நடைபெற இருக்கும் பொது நலவாய மகாநாட்டில் பெண்களின் பங்களிப்பு பற்றி திருமதி சோனியா காந்தி அவர்கள் பேச உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதனை முன்னிட்டு இன்று அவர் லண்டன்  செல்கிறார்.இலங்கை உள்நாட்டு போரில் தமிழர்களையும் அவர்களது போராட்டத்தையும் நசுக்குவதற்காக இலங்கை அரசாங்கத்துக்கு அனைத்து இராணுவ மற்றும்  இதர உதவிகளையும் செய்திருந்தது வெட்டவெளிச்சமானது.இது அனைத்துமே திருமதி சோனியாகந்தியின் கணவரும் 1987 -1989 வரை இலங்கை வடக்கு தமிழ்மக்கள் மீது வன்முறையை ஏவி பல்லாயிரக்கணக்கான மக்களை கொன்றும், பல தமிழ்பெண்கள் மீது ராணுவத்தினரை ஏவி பாலியல் பாலாத்காரம் செய்து பல கோடிக்கணக்கான தமிழ் மக்கள் சொத்துக்களை சூறையடி தமிழ்மக்களினின் மனதில் நீங்காத வடுவாய் இருக்கும் முன்னாள்  இந்திய பிரதமர் ராஜீவின் கொலைக்கு பழிவாங்கவே. எனவே இந்தியாவைஇலங்கைத்தமிழ்மக்களும் ,புலம்பெயர் தமிழ்மக்களும்  எட்டப்பனாகவும்,துரோகியாகவும் தான் பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் திருமதி சோனியாவின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டங்களை செய்வதற்கான ஆரம்பகட்ட நடவடிக்கைகளில்
லண்டன் வாழ்தமிழ் மக்கள் ஈடுபட்டுவருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: