29 மார்ச், 2011

கர வருட இராசி பலன்கள் - சித்திரை 2011

மேட ராசி
அசுவினி, பரணி, கார்த்திகை 1ஆம் பாதம்

புத்திக்கூர்மை மிகுந்தவர் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசிக்கு லாப வீட்டில் சுக்கிரன் பலம் பெற்றிருப்பதால், மனச் சோர்வு நீங்கும்; உற்சாகம் பெருகும். பண வரவு திருப்தி தரும். உங்கள் ராசிக்கு 5-வது ராசியில் கர புத்தாண்டு பிறப்பதால் பழைய பிரச்னைகள், வழக்குகள், கடன் தொல்லைகளில் இருந்து விடுபடுவீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு.

வீட்டில் தடைப்பட்டுக் கொண்டிருந்த கல்யாணம் ஆனி- ஆவணியில் கைகூடி வரும். மதிப்பு கூடும். 8.5.11 வரை குரு உங்கள் ராசிக்கு 12-ல் மறைந்திருப்பதால், வீடு கட்டுவதற்கு அல்லது வாங்குவதற்கு லோன் கிடைக்கும். திடீர் பயணங்கள், வீண் செலவுகள், காய்ச்சல், சிறு சிறு விபத்துகளும் ஏற்படலாம். 9.5.11 முதல், ஜென்ம குரு வருவதால், உடல்நலம் பேணுவது அவசியம். வயிற்றுக் கோளாறு, தலைச் சுற்றல், மஞ்சள்காமாலை வரக்கூடும். வெளி உணவுகளைத் தவிர்க்கவும்.

15.5.11 வரை ராகு 9-ல் நிற்பதால் தந்தையின் உடல்நலம் பாதிக்கலாம்.வருடம் பிறக்கும்போது கேது 3-ல் நிற்பதால், சவால்களை சமாளிப்பீர்கள். வி.ஐ.பி-கள் உதவுவர். 16.5.11 முதல், ராகு 8-ல் நுழைவதால் பயணங்களில் கவனம் தேவை. அலர்ஜி வந்து நீங்கும். வாழ்க்கைத் துணையுடன் வீண் சந்தேகம் வேண்டாம். கேது 2-ல் நுழைவதால் பேச்சில் கடுமை காட்டாதீர்கள். கணவன்-மனைவிக்குள் வீண் சண்டை வரக்கூடும்.

சனி பகவான், 20.12.11 வரை 6-ஆம் வீட்டில் வலுவாக இருப்பதால் வழக்கில் வெற்றி பெறுவீர்கள். கல்வியாளர்கள், அரசியல்வாதிகள் உதவுவர். மகனுக்கு நல்ல வேலை கிடைக்கும். மூத்த சகோதர- சகோதரிகளால் ஆதாயம் உண்டு. பூர்வீகச் சொத்து வரிகளை முறையாகச் செலுத்திவிடுங்கள். நீண்டநாள் நேர்த்திக்கடனை நிறைவேற்றுவீர்கள். குலதெய்வக் கோயிலைப் புதுப்பிக்க உதவி செய்வீர்கள்.

ஐப்பசி, கார்த்திகையில் பணப் புழக்கம் அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் ஆசை நிறைவேறும். சிலர் வீட்டை விரிவுபடுத்தலாம். ஐப்பசி மாத மத்தியப் பகுதியில் இருந்து பங்குனி வரைக்கும், ராசிநாதன் செவ்வாய் 5-ஆம் வீட்டிலேயே தொடர்வதால், கர்ப்பிணிகள் கவனமாக இருப்பது அவசியம். மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் சாப்பிட வேண்டாம்.

மார்கழியில் அரசு விவகாரங்களில் கவனம் தேவை. தை, மாசி மாதங்கள் யோகம் தரும். திடீர் பண வரவு, புது வாகனம் அமையும். திருமணம் கைகூடும். அரசியல்வாதிகள், தலைமையை பகைத்துக்கொள்ள வேண்டாம். குடும்ப ரகசியங் களை வெளியில் சொல்லாதீர்கள்.

கன்னிப் பெண்களே, புதிய நண்பர்களிடத்தில் கவனமாக இருங்கள். வருட முற்பகுதியில் நல்ல வரன் அமையும். தடைப்பட்ட கல்வியைத் தொடருவீர்கள். மாதவிடாய்க்கோளாறு, தூக்கமின்மை நீங்கும்.

கலைஞர்களுக்கு, சம்பள பாக்கி கைக்கு வரும். மூத்த கலைஞர்களுக்கு உரிய மரியாதை அளியுங்கள். மாணவர்கள், எதிலும் அலட்சியத்துடன் செயல்படாதீர்கள். விடைகளை எழுதிப் பாருங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. நல்ல கல்வி நிறுவனத்தில், நீங்கள் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் இடம் கிடைக்கும்.

வியாபாரம்: ஏற்ற- இறக்கங்கள் உண்டு. வாடிக்கையாளர்கள், பங்குதாரர்களிடம் கனிவுடன் பேசுங்கள். வைகாசி, தை மாதங்களில் திடீர் லாபம் உண்டாகும். புது ஒப்பந்தங்கள் கைகூடும். கணினிப் பாகங்கள், ரியல் எஸ்டேட், ஏற்றுமதி- இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: அலுவலகத்தில் உங்களைக் குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டம் இருக்கும். உங்களுக்கு விருப்பம் இல்லாத இடத்துக்கு மாற்றம் கிடைக்கலாம். மேலிடத்திலிருந்து நெருக்கடிகள் அதிகரிக்கும். கணினித் துறையினர், புதிய வாய்ப்புகளை பலமுறை யோசித்து ஏற்பது நல்லது.

இடபம்

கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்

திறமைசாலிகள் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன்கள் தீரும். குடும்ப வருமானம் உயரும். குரு பகவான் 8.5.11 வரை 11-ஆம் வீட்டில் நிற்பதால் ஓரளவு நிம்மதி, திடீர் பண வரவு உண்டு. 9.5.11 முதல், 12-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் விரயச் செலவுகளும் சுபச் செலவுகளும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 8-ஆம் வீட்டிலும் கேது 2-ஆம் வீட்டிலும் நிற்பதால், தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், பேச்சால் பிரச்னைகள் எழலாம். எனவே, நிதானித்துப் பேசுவது நல்லது. 16.5.11 முதல், கேது ராசிக்குள் நுழைவ தால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். உணவு முறையில் கவனம் தேவை. ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் வரக்கூடும். கணவன்- மனைவிக்கு இடையே சிலர் கலகம் மூட்டலாம். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை, வைகாசியில் அலைச்சல், சிறு சிறு ஏமாற்றம், காய்ச்சல்,சளித்தொந்தரவு ஏற்படலாம். அரசு காரியங்களில் அவசர முடிவு வேண்டாம். ஆனி,ஆவணி மாதங்களில் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைஅமைத்துத் தருவீர்கள்.அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும்பணி முழுமைஅடையும்.

கார்த்திகை 2,3,4ஆம் பாதம், ரோஹிணி, மிருகசீரிடம் 1, 2ஆம் பாதம்

திறமைசாலிகள் நீங்கள். கர புத்தாண்டு பிறக்கும்போது, உங்கள் ராசி நாதனான சுக்கிரன் 10-ஆம் வீட்டில் பலமாக இருப்பதால், புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றியடையும். பழைய கடன்கள் தீரும். குடும்ப வருமானம் உயரும். குரு பகவான் 8.5.11 வரை 11-ஆம் வீட்டில் நிற்பதால் ஓரளவு நிம்மதி, திடீர் பண வரவு உண்டு. 9.5.11 முதல், 12-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் விரயச் செலவுகளும் சுபச் செலவுகளும் ஏற்படும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும்.

வருடம் பிறக்கும்போது ராகு 8-ஆம் வீட்டிலும் கேது 2-ஆம் வீட்டிலும் நிற்பதால், தம்பதிக்கு இடையே வீண் சந்தேகம், பேச்சால் பிரச்னைகள் எழலாம். எனவே, நிதானித்துப் பேசுவது நல்லது. 16.5.11 முதல், கேது ராசிக்குள் நுழைவ தால் வீண் டென்ஷன், தலைச்சுற்றல், மன அமைதியின்மை ஏற்படலாம். ரத்தக் கொதிப்பு, சர்க்கரை நோய் வரக்கூடும். உணவு முறையில் கவனம் தேவை. ராகு 7-ல் நுழைவதால், மனைவிக்கு மாதவிடாய் மற்றும் கர்ப்பப்பை கோளாறுகள் வரக்கூடும். கணவன்- மனைவிக்கு இடையே சிலர் கலகம் மூட்டலாம். பிள்ளைகளின் கனவுகளை நிறைவேற்றுவீர்கள்.

சித்திரை, வைகாசியில் அலைச்சல், சிறு சிறு ஏமாற்றம், காய்ச்சல்,சளித்தொந்தரவு ஏற்படலாம். அரசு காரியங்களில் அவசர முடிவு வேண்டாம். ஆனி,ஆவணி மாதங்களில் பிள்ளைகளுக்கு நல்ல வாழ்க்கைத் துணையைஅமைத்துத் தருவீர்கள்.அரைகுறையாக நின்றுபோன வீடு கட்டும்பணி முழுமைஅடையும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4ஆம் பாதம், திருவாதிரை, புனர்பூசம் 1,2,3ஆம் பாதம்

கடின உழைப்பாளி நீங்கள். உங்களுடைய ராசிநாதன் நீசபங்க ராஜயோகம் அடைந்திருக்கும் வேளையில் கர புத்தாண்டு பிறப்பதால் தொட்டது துலங்கும். பிரச்னைகள் நீங்கும். உழைப்புக்கேற்ற பலன் உண்டு. உங்கள் எண்ணங்கள் யாவும் நிறைவேறும். பண பலம் கூடும். குடும்பத்தாரின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள்.

குரு பகவான் 9.5.11 முதல் 11-ஆம் வீட்டுக்குள் நுழைவதால் பணப் புழக்கம் திருப்தி தரும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். இழுபறியான வேலைகள், சித்திரையில் முழுமை பெறும். குழந்தை இல்லாத தம்பதிக்கு குழந்தை வரம் வாய்க்கும். உங்கள் ராசிக்கு 3-வது ராசியில் புத்தாண்டு பிறப்பதால், இளைய சகோதரர் உதவுவார். 15.5.11 வரை ராசிக்குள் கேது நிற்பதால், டென்ஷன், ரத்த அழுத்தத்தால் மயக்கம், வீண் பயம், எதிலும் சந்தேகம் வந்து நீங்கும். வருடம் பிறக்கும்போது ராகு 7-ல் நிற்பதால், தம்பதிக்கு இடையே கசப்பு உணர்வு ஏற்படும். சிலருக்கு திருமணம் தள்ளிப்போகும்.

16.5.11 முதல், கேது ராசியை விட்டு விலகுவதால், ஆரோக்கியம் மேம்படும். வீட்டுக்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். பிள்ளைகளின் ஆசைகளை பூர்த்தி செய்வீர்கள். தடைப்பட்டிருந்த மகளின் திருமணம் கூடிவரும். வைகாசி, ஆனி மாதங்களில் நெஞ்சு வலி, மூட்டு வலி, ரத்த சோகை, அசதி வந்து

போகும். உடன்பிறந்தவர்களுடனான மனஸ்தாபங்கள் நீங்கும். ஆவணி மாதம் அந்தஸ்து உயரும். சொத்து விஷயத்தில் அனுகூலம் உண்டு. ஆடி மாதத்தில், தந்தையுடன் வீண் வாக்குவாதம், அரசுடன் மோதல், விரயச்செலவுகள் ஏற்படலாம்.எனினும் திட்டமிட்ட காரியங்களை சிறப்பாகச் செய்துமுடிப்பீர்கள். குழப்பங்கள் நீங்கும். வரவேண்டிய பணம் வந்து சேரும். வசதியான வீட்டுக்கு மாறுவீர்கள்.

20.12.11 வரை 4-ல் சனி பகவான் நிற்பதால் வீடு- வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் உண்டு. சொத்து வாங்க நினைப்பவர்கள் தாய் பத்திரத்தை சரிபார்ப்பது நல்லது. 21.12.11 முதல் 5-ல் சனி நுழைவதால் பூர்வீகச் சொத்துகளில் பிரச்னை ஏற்படலாம். பிள்ளைகளிடம் உங்களின் எண்ணங்களை திணிக்க வேண்டாம். கர்ப்பிணிகள் கோபத்தைத் தவிர்க்கவும். 24.7.11 முதல் 9.9.11 வரை உங்கள் ராசிக்குள்ளேயே செவ்வாய் நீடிப்பதால் வேலை அதிகரிக்கும். அரசியல்வாதிகள் உற்சாகத்துடன் காணப்படுவர். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவீர்கள். சுற்றியிருப்பவர்களில் நல்லவர்- கெட்டவரை அறிந்துகொள்வீர்கள்.

புரட்டாசி மற்றும் ஐப்பசி மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும்... எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். ஆடை- அணிகலன்கள் சேரும். உங்களால் வளர்ந்தவர்கள் இப்போது உதவுவர். கார்த்திகை மாதத்தின் மத்தியப் பகுதி வரையிலும் அண்டை- அயலாரின் அன்புத் தொல்லை அதிகரிக்கும்.

கன்னிப் பெண்களின் கனவு நனவாகும்; கல்யாணம் கைகூடும். மாணவர்களுக்கு, நினைவாற்றல் பெருகும். கெட்ட சகவாசம் விலகும். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெறுவீர்கள்.

வியாபாரம்: பற்று- வரவு உயரும். சித்திரை, மாசி, பங்குனி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புதிய முதலீடு களால் போட்டியாளர்களை திக்குமுக்காடச் செய்வீர்கள். பாக்கிகள் எளிதில் வசூலாகும். பழைய வாடிக்கையாளர்கள் மீண்டும் வருவர். கெமிக்கல், வாகன உதிரி பாகங்கள், ஏற்றுமதி-இறக்குமதி வகைகளால் லாபம் உண்டு.

உத்தியோகம்: மேலதிகாரியுடனான மனக் கசப்புகள் நீங்கும். சித்திரை, வைகாசி, பங்குனி மாதங்களில் புதிய பொறுப்புகள் ஒப்படைக்கப் படும். சக ஊழியர்கள் மதிப்பார்கள். சம்பளம் உயரும். கணினித் துறையினருக்கு அயல்நாட்டு நிறுவனங்களில் வாய்ப்புகள் தேடி வரும்.கலைஞர்களுக்கு, அரசால் கௌரவம் கிடைக்கும்.உங்களின் படைப்புகளுக்கு மதிப்பு கூடும்.

மொத்தத்தில் கர புத்தாண்டில், சனி பகவான் சில சங்கடங்களைத் தந்தாலும், குருவின் திருவருளால் எதிர்பாராத முன்னேற்றமும், அந்தஸ்தும் கிட்டும்.

மிகுதி நாளை தொடரும்...

நன்றி சக்தி விகடன்

"ஜோதிட ரத்னா" வித்யாதரன்

கருத்துகள் இல்லை: