07 மார்ச், 2011

60 இன்னா ஆட்சியில பங்கு 63 இன்னா இருக்குடி உனக்கு சங்கு

60 இன்னா ஆட்சியில பங்கு 63 இன்னா இருக்குடி உனக்கு சங்கு என்று சோனியாவிற்க்கு
கதை வசனம் எழுத துடிச்சிருக்கிறீங்க போல... தாரேன்னு சொன்ன 60 க்கும் அதிகமா 3 தொகுதி கூட கேட்டாய்ங்க... நீங்களும் வெட்கம் மானம் சூடு சொரணையை எத்தனை தடவைதான் அடகு வைக்கிறது... இப்ப உண்ணாவிரதம் 1 மணித்தியாலம் கூட இருக்கமுடியாத நிலைமையில கூட உங்கட பாடி கொண்டிசன் இல்லை,எற்கனவே எத்தனியோ தடவை பட்டி, ரிங்கரிங் பார்த்து ஏதோ இன்னைக்கோ நாளைக்கோ பாடி விழுகிற நிலைமையில இருக்கு ஏன் றிஸ்க்கு எடுக்கிறீங்க... பேசாம ஓய்வு எடுத்திடுங்களேன்...அதுதான் உங்கட பரம்பரைக்கு 2500 வருடம் வரைக்கும் சொத்தை ஏத்தீட்டீங்களே.


3 தொகுதிகள் கூடக்கேட்டதால் தமிழனுக்கு தலைக்குனிவு ஏற்பட்டது அதுதான் தொடர்ந்தும் குனியாமல் நிமிர்ந்து பார்த்து வெளியே போ என்று சொல்லிவிட்டோம் என்று பெருமிதம் கொள்கிறீர்களே இதை 2009 ம் ஆண்டு எம் தமிழ்மக்கள் பிணங்களாய் வீழ்ந்து கொண்டிருக்கையிலே நிறுத்தச்சொல்லு இல்லாவிட்டால் 40 பேரும் ராஜினாமா என்றீர்களே அதை நீங்கள் நடைமுறைப்படுத்தியிருந்தால் அனைத்து ஈழத்தமிழர்களும் உங்களை இதயத்தில் வைத்து கொண்டாடியிருப்பார்களே...ஆனால் இப்போதுதான் தெரிகிறது
ஏன் அப்படி செய்யவில்லை என்று... அந்த ஒப்பிரேசன் ராஜினாமவுக்காக எவ்வளவு கோடி கைமாற்றினீர்கள் காங்கிரசிடமிருந்து ?

500 க்கும் மேல் தமிழ்நாட்டு தமிழ் மீனவர்கள் இலங்கை ராணுவம் கொலை பண்ணிய போது கடிதம் போட்டு தந்தி அடித்து காதல் பண்ணினீர்களே .... அப்போது ஏன் பண்ணவில்லை ராஜினாமா ?

இப்போ உங்கள் வீட்டுக்குள் பிரச்சினை வந்தவுடன் ராஜினாம நாடகம்... அதுசரி ... இலவசத்தை அள்ளி வழங்கினால் இந்த ஈனத்தமிழர்கள் இழிச்சுக்கொண்டு நமக்கு வோட்டுப்போடுவார்கள் என்று நன்றாக தெரிந்து வைத்திருக்கிறீர்கள்..

ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் நம்பியிருந்தவர்களை கைவிட்டீர்களே அந்த வினைக்கான அறுவடை வெகுவிரைவில் அனுபவிக்கப்போகிறீர்கள்.....

கண்மணியே பேனாக்கு ஓய்வு ஏது
இந்த "க" னாவுக்கு ஓய்வு ஏது
அரசியலில் நான் ஒரு முடிச்சவிக்கி
எம்புள்ள ஒரு மொள்ளமாரி
நான் முதலமைச்சர் ஆகவேண்டும்
உன் குடும்பம் அதற்காய் கடலில் சாக வேண்டும்
ஈனத்தமிழன் நீயிருக்கும் வரைக்கும்
நான் போடுவேன் இலவச அரிசி
நீ கொடு எனக்கு முதலமைச்சர் பரிசை

கருத்துகள் இல்லை: