30 மார்ச், 2011

இந்திய அணி வெற்றிபெற்றால் அரங்கை நிர்வாணமாக சுற்றி வருவேன் மொடல் அழகி கூறுகிறார்


உலகக் கிண்ணக் கிரிக்கெட் இறுதிப் போட்டிக்காக உலகமே ஆவலுடன் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், கவர்ச்சி மொடல் அழகியும் கிரிக்கெட் ரசிகையுமான பூனம் பாண்டே என்பவர் உலகக் கிண்ணத்தை இந்திய அணி வென்றெடுத்தால் விளையாட்டரங்கு பூராவும் நிர்வாணமாக சுற்றிவருவதற்குத் தயாராகவிருப்பதாகக் கூறியுள்ளார்.இதனை ஸ்பைஸ்சீ.கொம்மை மேற்கோள்காட்டி இந்துஸ்தான் ரைம்ஸ் பத்திரிகை நேற்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த மொடல் அழகி இணையத்தில் அதிகளவு தொகையினரால் தரவிறக்கிப் பார்க்கப்படுபவராகும். இந்திய அணி வெற்றிபெறுவதற்காக அவர் இதனைக் கூறுவதாக இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களின் ஒப்பனை அறைக்குள் ஆடைகளைக் களைவதைப் பற்றித் தான் பொருட்படுத்தவில்லை என்று பூனம்பாண்டே கூறியுள்ளார். அத்துடன், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச்சபை அனுமதித்தால் விளையாட்டரங்கின் முன்னால் நிர்வாணமாகச் செல்வதற்கும் தான் தயாராகவிருப்பதாக அவர் கூறியுள்ளார். பிரபல்யம் தேடுவதற்காகத் தான் இதனைச் செய்யப்போவதில்லை எனவும் ஆனால், இந்திய அணியினர் சிறப்பாக விளையாடுவதற்கான நோக்கத்துக்காக மட்டுமே தான் இதனைச் செய்யப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியினரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக பேஸ்புக்கில் விசிறிகளுக்கான பக்கமொன்றையும் அவர் திறந்து வைத்துள்ளார்.

இந்த மாதிரியான கருத்தைத் தெரிவித்த முதலாவது ஆள் பூனம் மட்டுமல்ல, பராகுவேயின் லாரிஸ்ஷா றிக்குவல்மி மற்றும் ஆர்ஜென்ரீனாவின் லூசியானா சலாஸர் ஆகிய மொடல் அழகிகளும் தத்தமது உதைபந்தாட்ட அணிகள் பீபா உலகக் கிண்ணப் போட்டியில் வெற்றிபெற்றால் தாங்கள் நிர்வாணமாகச் செல்வார்களென உறுதியளித்திருந்தனர்.

இதென்ன புதுசா இருக்கு...

கருத்துகள் இல்லை: