04 மார்ச், 2011

உந்தாளுக்கு நாக்கில சனி பாருங்கோ-குமர்ப்பொடியன் குஞ்சிதபாதம்




போன 25 ம் திகதி இலங்கையோட விமானப்படைத்தளபதி ரொஷான் குணதிலக சொல்லியிருந்தார் விடுதலைப் புலிகளின் அரசியல் பொறுப்பாளராக இருந்த தமிழ்ச்செல்வனின் மறைவு அந்த இயக்கத்துக்குப் பேரிழப்பாக அமைந்ததாகவும் அத்தோட விடுதலைப் புலிகளுடனான மூன்று தசாப்த கால போரில் ஆனையிறவு வீழ்ச்சியே இராணுவத்தின் பாரிய தோல்வியாகும். அனுராதபுர விமானப்படைத்தளம் மீதான தாக்குதல் நாங்கள் எதிர்கொண்ட மிகப் பெரும் சேதமாகும் என்றும் அவர் தனது பேட்டியில மேலும் குறிப்பிட்டுள்ளார்.இதை உந்த மனுசன் மனசில ஒண்ணுமே வைச்சுக்கொள்ளாம வெளியில சொன்னதை பாருங்கோ உவன் கோவிந்தசாமிக்கு பிடிக்கல போல....
அதுமட்டுமில்ல இந்தாள் இதைச்சொல்லி 5 நாள்தான் போயிருக்கும்..உந்த தாக்குதலில
பங்குபற்றிய கிபிர் நடுவானில வெடித்துச்சிதற , அதை ஓட்டி வந்த விமானியும் பலியாகி
இருந்தார்...



உது மட்டுமில்ல உந்த மனுசனோட தேப்பன் ஹரி குணதிலக்கவும் உவங்கட விமானப்படைத்தளதியா 1976- 1981 வரைக்கும் இருந்தவரெல்லே,அதுக்குபிறகு அந்த மனுசன் ஐக்கிய தேசியக் கட்சியின் பாதுகாப்புப் பேச்சாளராகவும் இருந்தவர்..அதால உவங்களோட குடும்பத்துக்கு நல்ல செல்வாக்கு இருக்கிறதை உந்த கோவிந்தசாமிக்கு பிடிக்கல பாருங்கோ... உவனும் சரத் மாதிரி அரசியலில இறங்கிடுவானோ எண்டு பயத்தில பயபுள்ள இரவுபகலா குப்பிறக்கிடந்து யோசிச்சிருக்கிறான்.அதுக்குபிறகு உவருக்கு பாதுகாப்பு அமைச்சில ஒரு பொறுபான பதவியைகொடுத்துப்போட்டு அந்தாள தங்களோட கண்காணிப்பிலேயெ வைச்சிருக்கிற பிளான் போல...

1 கருத்து:

விண்ணும் மண்ணும் சொன்னது…

உந்த தாக்குதலில
பங்குபற்றிய கிபிர் நடுவானில வெடித்துச்சிதற , அதை ஓட்டி வந்த விமானியும் பலியாகி
இருந்தார்...