21 மார்ச், 2011

சூடேற்றும் தேர்தல் விஞ்ஞாபனங்கள்

தேர்தல் விஞ்ஞாபனங்களில் இலவசம் மீண்டு சூடு பறக்கத்தொடங்கியுள்ளது.
கலைஞரின் தேர்தல் அறிக்கையை இலவசங்களால் நிரப்பி மச்சான்ஸ் நமீதா போல
களத்தில இறக்கியிருக்கானுக... அதுக்கு தாக்குப்பிடிக்கும் வகையில் நம்ம ஒல்டு பார்ட்டிகளோட வோட்டை அள்ளுவதற்காக செல்வி ஜெயலலிதா சூப்பர் மாஸ்டர் பிளானை
அறீவிக்க இருப்பதாக உள்குத்து உளவுத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அதில் முக்கியமான விடயம் அந்தக்காலத்தில் ஜெயலலிதாவோட துள்ளும் இளமையான
ஆட்டங்களில் ஜொள்ளூ ஊத்தியே காவிரியை வத்தாம ஓடவிட்டவிங்க நம்ம பெரிசுக..
அவிங்களை கைக்குள்ள போட்டுவிட்டால் வீட்டில அத்தனை வாக்குகளும் அதிமுக விற்கே என்ற மாஸ்டர் பிளானில் பிரசாரம் செய்யப்போகும் இடங்களில் அன்றையகால உடையில் ஜெயலலிதா உன் விழியும் என் வாளும் சந்தித்தால் ரீமிக்ஸ் பாடலுக்கு கறுப்பு எம்.ஜி.ஆர் விஜயகாந்துடன் சேர்ந்து குத்தாட்டம் போட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை கட்சியின் மூத்த தலைவர்களும் இளைய வேட்பாளர்களும்
கைதட்டி ஏக வரவேற்பளித்திருப்பதாகவு கூட சேர்ந்து கோரஸாய் ஆடுவதற்கும் விண்ணப்பித்திருப்பதாகவும் புலனாய்வு செய்திகள் தெரிவிக்கின்றன.(ரெம்ப எதிர்பார்க்கிறாய்ங்க போல)

அடுத்ததாக நம்ம விஜயகாந் அவர்கள் ரெம்ப பேமஸ் ஆனது சின்னக்கவுண்டர் திரைப்படம்
அதுவும் அந்த படத்தில சின்னப்பயலுகளோட சேர்ந்து உலக் ஒலிம்பிக் போட்டி ஒன்றை
அறிமுகப்படுத்தியிருந்தார் .அது அனைத்து பாமரமக்களிடமும் போய் ஒரு ஆட்டு ஆட்டுவித்தது.இதனால் அப்போதைய காலத்தில் பொண்ணு பார்க்கப்போகும் மாப்பிள்ளைகளிடம் மணப்பெண்கள் " உங்களுக்கு பம்பரம் விடத்தெரியுமான்னு கேட்டு "
மாப்பிள்ளைகளுக்கு பீதியைக்கிளப்பிய அளவுக்குக்குன்னா பார்த்துக்குங்களேன் எந்தளவுக்கு றீச்சாகியிருக்குன்னு.அதனால இந்த முறை நாங்கள் ஆட்சிக்கு வந்தால் வீட்டுக்கு வீடு பம்பரம் சப்ளை பண்ணுவோம்.பம்பரம் விடத்தெரியாதவிங்களுக்கு இலவச காம் நடத்தி
அதில் இடுப்பு இலியான ,தமிழச்சி தம்ன்னா, வெள்ளாவியி வெளுத்த தப்சி யின் தொப்புளில் பம்பரம் விடுவது எப்பிடின்னு பயிற்சி கொடுப்போம் என்று அதிரடியாக அறிவிக்க உள்ளார்..


இதனால் கடுப்பாகியுள்ள கழக கண்மணீகள் உடனடியாக கலைனரை தமன்னா, தப்சிக்கு நேரில் சென்று தமது கழகத்தில் இணைய அழைக்குமாறு நெருக்குதல் கொடுத்து வருவதாக
உள்குத்து உலகநாதன் சந்தோசத்துடன் தெரிவித்தார்.


தாவணி போர்த்திய தாரகையே தமன்னா
தங்கமாய் மின்னும் தமிழ்பேரொழியே
தமிழனின் தாரக மந்திரமே தமன்னா...

இடையென்ன மல்லிகைக்கொடியா
உன் உடையென்ன கர்ணணின் கவசகுண்டலமா
சிறுத்தையிலே உன் கொடி இடை பார்த்து
தள்ளாத வயசிலும் என் மனம் தொலைதேன்
உன் சம்மதம் கிடைத்தால்
அடுத்த முதல்வரும் நீதான்

கருத்துகள் இல்லை: